<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

கொர்ர்ர்ர்ர்ர்ர் பாடல்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நான் ஒரு பாடலை இசையமைத்திருக்கிறேன். கொஞ்சம் கீழ் சொல்லும் இசை சத்தத்துடன் உங்களுக்கு விரும்பிய ராகத்தில் என் பாடல் வரிகளை படித்துக் கொண்டே மனக்கண்ணில் ஓட்டிப் பாருங்கள்.

(இசை)
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....


(பாடுவதற்கு முன் ராகத்தில் குரலை இழுப்பார்களே, அந்த இழுப்பு கீழ் கொடுக்கப்பட்டிருக்கிறது)
ம்ம்ம்ம்ம்......

(இசை)
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

ஆ... ஆ... ஆ... (இனிய கர்நாடக சங்கீத ராகத்தில் இந்த வார்த்தைகள் இழுக்கப்படுகிறது)

(இசை)
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹங்...ஹங்... ஹங்....

(பாடல் ஆரம்பம் ஆகிறது)
நான் ராகத்தில் பாட வந்தேன்
இசை எனும் நதியில் ஓடம் போல மிதக்க வந்தேன்

(இசை)
ஹஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....ஹஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... (பஸ்ஸை நிப்பாட்டிய பிறகு ஏர் ரிலீஸ் செய்வார்களே அந்த மாதிரியான சவுண்டுடன்)

(பாடல்)
நான் பாடும் ராகத்தில் நனைய நீ வா என் ராணி
நான் கொண்ட மோகத்தில் தாளமிடுகிறேன் நீ வா என் தேவி

(இசை)
கொர்ர்ர்ர்ர்ர்ர்.... கொர்ர்ர்ர்ர்ர்ர்... (இப்படி அடித்தொண்டையிலிருந்து நீங்கள் சொல்லும் போது தொண்டையில் உள்ள சளி அடைத்துக் கொண்டால் எப்படி சத்தம் கேட்கும் அது மாதிரி)...ஹல ஹல ஹல... (ரூட் கிளியர் ஆகி) கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....


(பாடல்)
மனம் பாடும் மோகனத்தில் நான் பாட வந்தேன்
சுகம் தரும் மெட்டுக்கட்டி இதமாக பாடுகின்றேன்

(இசை)
புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......
கொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.... (கொசு காதில் பாடினால் வரும் சத்தம் மாதிரி)
ரீட்டு ரீட்டு ரீட்டு ரீட்டு ரீட்டு... (சுவர் கோழி கத்தும் சத்தத்தில்)


(பாடல்)
நான் ராகத்தில் பாட வந்தேன்
இசை எனும் நதியில் ஓட வந்தேன்
(சிந்து பைரவியில் ஜேசுதாஸ் வாய்ஸை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்)
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ.... (வாய்ஸ் ஹைபிட்சில் ஏறுகிறது) ஆஆஆஆஆஆஆ... (லோ பிட்சில் இறங்குகிறது.) ஆஆஆஆஆஆஅ....(திரும்ப ஹைபிட்ச்)

(இசை)
ஙம் ஙம் ஙம்.... (திரும்ப தொண்டை சளி அடைத்துக் கொண்ட மாதிரி)...ஹல் ஹல் ஹல்... (ரூட் கிளியர் ஆகி) கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....ஙம் ஙம் ஙம்.......

(அலறல்)
பே பே. சீ சீ சீ சீ.... [என் மேல் ஒரு கரப்பான்பூச்சி பொத்தென்று விழுந்ததால் நான் போட்ட சத்தம் இந்த வரி]


பாட்டு நல்லயிருந்ததா? மேல் சொன்ன பாடல் வரிகளுக்கு இசை போல் வந்த புர்ர்ர், ஹஸ்ஸ்ஸ், புஸ்ஸ்ஸ்,ஹல, ஹல எல்லாம் என் கூட தங்கியிருந்த என் நண்பனின் குறட்டை ஒலி. இரவில் தூங்க நினைத்த எனக்கு நண்பனின் குறட்டை ஒலியும்,கொசுவின் கொய்ங்ங் சத்தமும், சுவர்கோழியின் ரீட்டு ரீட்டு சத்தமும் இனிய இசைக் கலவையைத் தந்துக் கொண்டிருந்தது. அந்த இசை கலவைக்கு இட்டு கட்ட நினைத்து மனதில் இனிய பாடல்களை இரவு முழுவதும் உறங்காமல் பாடிக் கொண்டிருந்தேன்.

பொழுதும் புலர்ந்தது.....

"என்னடா! நைட்டு நல்ல தூங்கினியா?" நண்பன் கேட்டான்.

"ஓ! யாரோ நல்ல தாலாட்டுப் பாடுன மாதிரி இருந்திச்சா, தலைய கீழே வச்ச உடனே தூங்கிட்டேன். தூக்கமுன்ன தூக்கம் அப்படி ஒரு தூக்கம்" இது நான்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அச்சச்சோ இப்படி ஆகிவிட்டீர்களே!
 
லக லக லக லக .....
 
ஐயோ,.அப்பா விஜய், சிரிச்சுசிரிச்சு வயித்து வலியே வந்துடுத்து.
 
இப்படி சிரிப்பா போட்டுத் தாக்குறீங்க.நல்ல கற்பனை.

-சண்டியன்
 
நன்றி கார்த்திக்,மார்த்தாண்டம், ஜெ அக்கா, சண்டியன் & மூர்த்தி.

மார்த்தாண்டம் : லக லக லக லக...

மூர்த்தி கவலையே படாதீங்க. அது நீங்க இல்லை. வேறொரு நண்பர்.
 
நீங்க எழுதியிருக்கதை வச்சுப்பார்த்தால் நீங்க ஏற்கனவே மிக புகழ் பெற்ற சினிமா பாடலாசிரியரா இருக்கனும்னு தோணுது...விஜய்ங்கிறது உங்க புலைப் பெயர்னு நினைக்கிறேன்... சொல்லுங்க சார் , உங்க நிஜப் பெயர் என்ன ?
 
என்னுடைய நிஜப்பெயரை கேட்டீகளா பாலு... அது கொர்ர்ர் கவி. :-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->