-ல் போட்டுத் தாக்கியது
போய் வருகிறேன்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
ப்ளாக்கரிலிருந்து தற்காலிமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
எனக்கு பயிற்சிகளமாக இருந்த தமிழ்மணத்திற்கு நான் என்றும் கடன் பட்டவன். தமிழ்மணமும் அங்கிருக்கும் நல்ல உள்ளங்களும் உடல்நலமும் மனநலமும் என்றும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
சில நாள் வாசிப்பில் ஆழ்ந்திருக்கப்போகிறேன்.
எனக்கு பயிற்சிகளமாக இருந்த தமிழ்மணத்திற்கு நான் என்றும் கடன் பட்டவன். தமிழ்மணமும் அங்கிருக்கும் நல்ல உள்ளங்களும் உடல்நலமும் மனநலமும் என்றும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
சில நாள் வாசிப்பில் ஆழ்ந்திருக்கப்போகிறேன்.
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
தசையினை தீச்சுடினும்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இன்று எனக்கு சிறிது மன அழுத்தம் தான். சில பதிவுகளில் பின்னூட்டங்கள் படித்தவர்களுக்கு தெரியும். அதிகம் பேசும் நிலையிலும் நான் இல்லை. மன அழுத்தம் அதிகரிக்கும் போதும் உள்ளம் குழம்பி தவிக்கும் போது எனக்கு ஊக்கம் தரும் ஒரே 'கட' உள் பாரதியின் பாடல் மட்டுமே. கீழே உள்ள ஃபிளாஷை தாயாரித்து அதில் படலுடன் லயித்து பாரதியுடன் ஒன்றியதில் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன்.
(எனது உள்ளமும் சரி, அந்த மெழுகுவர்த்தியும் சரி, பாடலும் சரி வேகமாய் தான் அடித்துக் கொள்கின்றன)
நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
நிலசுமையென வாழ்ந்திட புரிகுவையோ
விசையுறு பந்தினைப் போல்
உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
தித்தம் நவமென சுடர் தரும் உயிர்கேட்டேன்
தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ
(எனது உள்ளமும் சரி, அந்த மெழுகுவர்த்தியும் சரி, பாடலும் சரி வேகமாய் தான் அடித்துக் கொள்கின்றன)
நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
நிலசுமையென வாழ்ந்திட புரிகுவையோ
விசையுறு பந்தினைப் போல்
உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
தித்தம் நவமென சுடர் தரும் உயிர்கேட்டேன்
தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
அப்படிப்பட்ட பின்னூட்டங்களை குறைந்தபட்சம் அப்பதிவிலாவது தவிர்க்க 'Don't allow new comments' என்ற ப்ளாகர் வசதியையாவது பயன்படுத்தியிருக்கலாம். எந்தவொரு பதிவின் பின்னூட்டங்களும் இப்படி விபரீதமாகப் போகுமென்றால் அப்படி நிறுத்தலாம். விட்டுத் தள்ளுங்கள், போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. பாடலுக்கு நன்றி.
நடந்தது என்னன்னு முழுசா எனக்கு தெரியலை...
இதுக்கு 2 வழிகள்..
1) பின்னூட்ட அமைப்பில் approval கொண்டு வருவது.
2) கண்டுக்காம நம்ம வேலைய பாத்துட்டு போயிட்டே இருக்கறது.
இதுக்கு 2 வழிகள்..
1) பின்னூட்ட அமைப்பில் approval கொண்டு வருவது.
2) கண்டுக்காம நம்ம வேலைய பாத்துட்டு போயிட்டே இருக்கறது.
உடனிருக்கிறோம் தோழா,
உனக்கொரு தோளாக,
ஒருபோதும் கலங்காதே நீயாக,
வருவது வரட்டும்,
வல்லமை உன்னுடன் வளரட்டும்
தீமை வெந்து போகக்
காண்பாய் நீ கண்கூடாய்.
அன்புடன்,
ஜீவா.
உனக்கொரு தோளாக,
ஒருபோதும் கலங்காதே நீயாக,
வருவது வரட்டும்,
வல்லமை உன்னுடன் வளரட்டும்
தீமை வெந்து போகக்
காண்பாய் நீ கண்கூடாய்.
அன்புடன்,
ஜீவா.
அண்ணாச்சி எத பத்தி சொல்ராருன்னு புரியல, எதுக்கு ஒரு வாட்டி தமிழ்மணத்த கிண்டி பாக்க வேண்டியதுதான்...
-டண்டணக்கா
-டண்டணக்கா
டேய் மக்கா,
எல்லாம் கண்ணனுக்கே..
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் கண்ணனுக்கே என்று விட்டுவிடுடா..
அல்வாசிட்டி அரசியலில் இது எல்லாம் சகஜமுனு விடுடா..
எல்லாம் கண்ணனுக்கே..
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் கண்ணனுக்கே என்று விட்டுவிடுடா..
அல்வாசிட்டி அரசியலில் இது எல்லாம் சகஜமுனு விடுடா..
நீங்க குறிப்பிடுற அந்த ரெண்டு பதிவும் (இல்ல அதுக்கும் மேலயா) கோக்குமாக்கா போவுதுன்னு தெரிஞ்சவுடனேயே அதும் பக்காம் போறத நான் நிறுத்திட்டேன்... கூவத்துல குளிக்க முடியுமா சொல்லுங்க...
sarithaan!
ithukkellaam manasu paathippu adaiyalama ( I HAVE READ THOSE COMMENTS)?
antha koshtikku muthituchi.. eppa venumnaalum vedikkalaam!
take it easy machi!
ithukkellaam manasu paathippu adaiyalama ( I HAVE READ THOSE COMMENTS)?
antha koshtikku muthituchi.. eppa venumnaalum vedikkalaam!
take it easy machi!
என்ன விஜய்
"இதுவும் கடந்து போகும்"
விவேகானந்தரின் அறிவுரைகள் படியுங்கள்.
மனம் சற்று ஆறுதல் அடையும்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
"இதுவும் கடந்து போகும்"
விவேகானந்தரின் அறிவுரைகள் படியுங்கள்.
மனம் சற்று ஆறுதல் அடையும்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
எல என்ன? இதுக்கெல்லாம் அசந்தா எப்படி? சரி சீக்கிரமா முதல கறி சாப்பிடுரது பத்தி ஒரு பதிவு போடு மக்கா, இப்ப சிங்கையில் உணவு கொண்டாட்டம் நடக்குறதா கேள்வி?
விஜய்,
என்ன ஆச்சு? ஊருலே குழந்தையும், உங்க வீட்டுஅம்மாவும் சுகம்தானே?
மத்தவங்க பின்னூட்டத்தையெல்லாம் படிக்கறப்ப என்னவோ நடந்தமாதிரி இருக்கே. நான் எதையாவது மிஸ் செஞ்சுட்டேனா?
என்றும் அன்புடன்,
துளசியக்கா
என்ன ஆச்சு? ஊருலே குழந்தையும், உங்க வீட்டுஅம்மாவும் சுகம்தானே?
மத்தவங்க பின்னூட்டத்தையெல்லாம் படிக்கறப்ப என்னவோ நடந்தமாதிரி இருக்கே. நான் எதையாவது மிஸ் செஞ்சுட்டேனா?
என்றும் அன்புடன்,
துளசியக்கா
விடுங்கனு சொல்வது சுலபம்தான்
இருந்தாலும் இதையெல்லாம் கணக்கிலெடுத்தால் மனசும் உடம்பும் தான் கெடும் விட்டுத்தள்ளுங்க
இருந்தாலும் இதையெல்லாம் கணக்கிலெடுத்தால் மனசும் உடம்பும் தான் கெடும் விட்டுத்தள்ளுங்க
தாஸ், நாம் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். அனானிமஸ் யார் என்று ஐபியை தூக்கி நம் பதிவில் போட்டது மட்டும் தான்.
விஜய்,
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
மகாபாரதம் சொல்கிறது: தகுதியற்றவர்களோடு உறவோ, சண்டையோ வைத்துக் கொள்ளக்கூடாது.
when you fight with a pig in mud, you are getting dirty, but pig enjoys the mud.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
மகாபாரதம் சொல்கிறது: தகுதியற்றவர்களோடு உறவோ, சண்டையோ வைத்துக் கொள்ளக்கூடாது.
when you fight with a pig in mud, you are getting dirty, but pig enjoys the mud.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
அன்புள்ள மக்களே,
நேற்று ஒரு இனிய அனுபவம். ஆமாம் இசையராஜாவின் "திருவாசகம் - இசை வேள்வி" கேட்க நேர்ந்த்து.. அப்படி அனந்த கண்ணீர் வந்துவிட்டது.. இன்னும் கேட்டேயிருக்கேன்.. காசு கொடுத்து வாங்கிய ஒலிபேழையில்..
இதற்கு விமர்சனம் எழுத வராலை நான்.. இதை மற்றவர்களும் விலைகொடுத்து (இதற்கு விலை கொடுக்கு முடியாது, இதை எழுத உதவிய ஒலிபேழைக்கு வேணா கொடுக்கலாம்) வாங்கி கேட்டு இன்புறுகுங்கள்
ஞான் பெற்ற இந்த இன்பம் பெறுக இவ்வையகம்...

மக்களே, இந்த சுட்டியை உங்கள் வலைப் பக்கங்களிலும் போட்டு, இந்த முயற்சிக்கு ஒரு ஊக்கமளியுங்கள்..
நேற்று ஒரு இனிய அனுபவம். ஆமாம் இசையராஜாவின் "திருவாசகம் - இசை வேள்வி" கேட்க நேர்ந்த்து.. அப்படி அனந்த கண்ணீர் வந்துவிட்டது.. இன்னும் கேட்டேயிருக்கேன்.. காசு கொடுத்து வாங்கிய ஒலிபேழையில்..
இதற்கு விமர்சனம் எழுத வராலை நான்.. இதை மற்றவர்களும் விலைகொடுத்து (இதற்கு விலை கொடுக்கு முடியாது, இதை எழுத உதவிய ஒலிபேழைக்கு வேணா கொடுக்கலாம்) வாங்கி கேட்டு இன்புறுகுங்கள்
ஞான் பெற்ற இந்த இன்பம் பெறுக இவ்வையகம்...

மக்களே, இந்த சுட்டியை உங்கள் வலைப் பக்கங்களிலும் போட்டு, இந்த முயற்சிக்கு ஒரு ஊக்கமளியுங்கள்..
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
done...
-->> for those who're in US :: At this time we are seeking volunteers who can help with the distribution in their local cities starting July 2. If you can volunteer please send us an mail to: tisusa@NOSPAMgmail.com or call Dr. Sankar Kumar @ 919-413-3913. <<--
-->> for those who're in US :: At this time we are seeking volunteers who can help with the distribution in their local cities starting July 2. If you can volunteer please send us an mail to: tisusa@NOSPAMgmail.com or call Dr. Sankar Kumar @ 919-413-3913. <<--
மிக்க நன்றி சங்கர். இன்று இரவுக்குள் இந்த பேனரை ஹல்வாசிட்டி வலைப்பதிவில் சேர்த்து விடுகிறேன்.
சிங்கப்பூர் மக்களே, இந்த ஒலிப்பேழை அல்லது குறுந்தகடு சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்து விட்டதா என்று தெரியுமா? லிட்டில் இந்தியா பக்கம் 2 வாரமாக போக முடியவில்லை. ஒலி 96.8 எப்.எம்-ல் ஏதாவது அறிவித்திருந்தால் சொல்லுங்களேன்.
சிங்கப்பூர் மக்களே, இந்த ஒலிப்பேழை அல்லது குறுந்தகடு சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்து விட்டதா என்று தெரியுமா? லிட்டில் இந்தியா பக்கம் 2 வாரமாக போக முடியவில்லை. ஒலி 96.8 எப்.எம்-ல் ஏதாவது அறிவித்திருந்தால் சொல்லுங்களேன்.
அல்வா,
நீங்கள் எங்கு வாங்கினீர்கள்?..நானும் தீவிர 'மொட்டை' ரசிகன் ..சிங்கை வந்ததும் முதல் வேலை இதுதான்.
நீங்கள் எங்கு வாங்கினீர்கள்?..நானும் தீவிர 'மொட்டை' ரசிகன் ..சிங்கை வந்ததும் முதல் வேலை இதுதான்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
பாடல்களும் பாடல்கள் வரியும்-2 (ராஜபார்வை)
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இளையராஜவின் ஞானி உள்ளத்தில் மலர்ந்த இன்னொரு பூ 'ராஜபார்வை'. பாடலும் பாடல் வரிகளும் கொடுத்திருக்கிறேன். அந்த படத்தைப் பற்றி எழுத வேண்டுமென்ற ஆசையிருக்கிறது. ஆனால் அந்த படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் முழுவது ஞாபகமில்லை. 'அந்திமழை' பாடல் மாதவிக்காக கண் தெரியாத கமல்ஹாசன் டூயட் பாடுவது போல வரும். 'அழகில் அழகு' பாடல் வீட்டிற்கு வரும் மாதவியை காதல் மிகக் கொண்டு ஓவ்வொரு அங்கமாக கமல் தடவி வர்ணித்துப் பாடுவது போல வரும். மயக்கும் அந்த இரு பாடல்களையும் கேளுங்கள். இந்த பாடல்களை எழுதியவரும் கவிஞர் வைரமுத்து தான் என நினைக்கிறேன்.

பாடியவர்கள் : எஸ்.பி.பி & ஜானகி
ஆண்:
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெண்
தேனில் வண்டு முழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்
ஆண்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளைமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே
ஆண் : அந்திமழை பொழிகிறது
பெண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்கின்றது
பெண்:
நெஞ்சுக்கொரு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்
பெண் : அந்திமழை பொழிகிறது
ஆண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெண் ; சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
----------------------------------------------
பாடியவர் : ஜேசுதாஸ்
(ஹம்மிங்)
அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு தேவதை
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்
அழகில் அழகு தேவதை
சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகில் அழகு தேவதை
பூ உலவும் கொடிகள் போல இடையை காண்கிறேன்
போக போக வாளைப் போல அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் உன் போல் பெண்ணில்லையே
அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு

பாடியவர்கள் : எஸ்.பி.பி & ஜானகி
ஆண்:
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெண்
தேனில் வண்டு முழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்
ஆண்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளைமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே
ஆண் : அந்திமழை பொழிகிறது
பெண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்கின்றது
பெண்:
நெஞ்சுக்கொரு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்
பெண் : அந்திமழை பொழிகிறது
ஆண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெண் ; சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
----------------------------------------------
பாடியவர் : ஜேசுதாஸ்
(ஹம்மிங்)
அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு தேவதை
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்
அழகில் அழகு தேவதை
சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகில் அழகு தேவதை
பூ உலவும் கொடிகள் போல இடையை காண்கிறேன்
போக போக வாளைப் போல அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் உன் போல் பெண்ணில்லையே
அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
அல்வாசிட்டி அண்ணாச்சியாரே.. நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு பதிவா?! ரொம்ப அநியாயம் சார் இது!
ரோம் நகரம் தீப்பிடிச்சு எறிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, அங்கே ஒரு பின்னூட்டத்திலே தமிழ் வளர்க்க பொராடிட்டிருக்காங்க.. நீங்க என்னடான்னா இருக்குற சுவடே தெரியாம இப்படி ஒரு பதிவு போடுறீங்க!
ரோம் நகரம் தீப்பிடிச்சு எறிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, அங்கே ஒரு பின்னூட்டத்திலே தமிழ் வளர்க்க பொராடிட்டிருக்காங்க.. நீங்க என்னடான்னா இருக்குற சுவடே தெரியாம இப்படி ஒரு பதிவு போடுறீங்க!
எங்கள் தலை, கொங்கு ராசா இந்த 'அழகில் அழகு தேவதை' பாட்டை ஏற்கெனவே ஓர் இரவில் கேட்டு, இங்கே அதைப் போட்டு, அதற்கு அல்வா சிட்டியாரே, நீரும் முதலாவதாக comment கொடுத்தீர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் !!
நான் சொல்ல வருவது இதுதான்:
எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம், ராசாவின் கலை அனுபவத்திற்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ராசா ராசாதான். :-)
- ஞானபீடம்
நான் சொல்ல வருவது இதுதான்:
எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம், ராசாவின் கலை அனுபவத்திற்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ராசா ராசாதான். :-)
- ஞானபீடம்
விஜய்,
இளையராஜா மேல கமல்ஹாசன் கொண்டிருக்கிற ஆழமான பற்றுக்கு காரணம் இந்த மாதிரி பாடல்களை கேட்டா புரியுது!
இளையராஜா மேல கமல்ஹாசன் கொண்டிருக்கிற ஆழமான பற்றுக்கு காரணம் இந்த மாதிரி பாடல்களை கேட்டா புரியுது!
அல்வா சிட்டி விஜய்,
அழகே அழகு பாடலை எழுதியவர் கண்ணதாசன்.( அங்கங்களை வர்ணிக்கும் பாடல்).
ஒரு அங்கம் கைகள் அறியாதது என்ற பாடல் வரிகளும், அதற்கு கமல்ஹாசனும், மாதவியும் தரும் முகபாவங்களும் மிகவும் பிரமாதம். சற்று பிசகினாலும் ஆபாசம் என பிறர் குரல் கொடுக்கும் ஆபத்திருக்கும் சங்கதியை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளார்கள்
அழகே அழகு பாடலை எழுதியவர் கண்ணதாசன்.( அங்கங்களை வர்ணிக்கும் பாடல்).
ஒரு அங்கம் கைகள் அறியாதது என்ற பாடல் வரிகளும், அதற்கு கமல்ஹாசனும், மாதவியும் தரும் முகபாவங்களும் மிகவும் பிரமாதம். சற்று பிசகினாலும் ஆபாசம் என பிறர் குரல் கொடுக்கும் ஆபத்திருக்கும் சங்கதியை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளார்கள்
மாயவரத்தாரே,
//அண்ணாச்சியாரே.. நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு பதிவா?! //
இதென்ன புதுசா ஒரு கேள்வி. என்னுடைய பதிவு வாரநாட்களில் பெரும்பான்மையாக இரவு 11:30 தாண்டி தான் இருக்கும்.தூக்கம் விற்று எழுதுவதால்...
//ரோம் நகரம் தீப்பிடிச்சு எறிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, அங்கே ஒரு பின்னூட்டத்திலே தமிழ் வளர்க்க பொராடிட்டிருக்காங்க//
யோவ் போங்கைய்யா உருப்படியா எதாச்சி வேலையிருந்த பாருங்கைய்யா.
மத்தப்படி மொட்டையின் இந்த பாட்டைப் பற்றி ஒன்னுமே சொல்லாம போன எப்படி?
//அண்ணாச்சியாரே.. நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு பதிவா?! //
இதென்ன புதுசா ஒரு கேள்வி. என்னுடைய பதிவு வாரநாட்களில் பெரும்பான்மையாக இரவு 11:30 தாண்டி தான் இருக்கும்.தூக்கம் விற்று எழுதுவதால்...
//ரோம் நகரம் தீப்பிடிச்சு எறிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, அங்கே ஒரு பின்னூட்டத்திலே தமிழ் வளர்க்க பொராடிட்டிருக்காங்க//
யோவ் போங்கைய்யா உருப்படியா எதாச்சி வேலையிருந்த பாருங்கைய்யா.
மத்தப்படி மொட்டையின் இந்த பாட்டைப் பற்றி ஒன்னுமே சொல்லாம போன எப்படி?
ஞானபீடம்
//எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம், ராசாவின் கலை அனுபவத்திற்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். //
பொள்ளாச்சிகாரருக்கு மறுப்பு சொல்ல முடியுமா? ராசா ராசா தான்!!
அதெல்லாம் சரி ஆடியோல பாட்டு கேக்கலியா? பாட்டு எப்படி?
//எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம், ராசாவின் கலை அனுபவத்திற்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். //
பொள்ளாச்சிகாரருக்கு மறுப்பு சொல்ல முடியுமா? ராசா ராசா தான்!!
அதெல்லாம் சரி ஆடியோல பாட்டு கேக்கலியா? பாட்டு எப்படி?
துளசியக்கா,
//எப்ப ஊருக்குப் போறீங்க விஜய்?//
கூடிய விரைவில் எதிர்பாருங்கள்
நியூசிக்கு வந்த கவனிப்பீங்கள்ள?
//எப்ப ஊருக்குப் போறீங்க விஜய்?//
கூடிய விரைவில் எதிர்பாருங்கள்
நியூசிக்கு வந்த கவனிப்பீங்கள்ள?
//என்னல மக்கா ஒரே பாட்டா போட்டு தாக்குர? சரி வேற ஏதும் நல்ல இனிமையான பாடல் வேணும்னா சொல்லு ;-) ??? //
மக்கா ஆடியோ சிடியை பூரா தாப்பு.
மக்கா ஆடியோ சிடியை பூரா தாப்பு.
//இளையராஜா மேல கமல்ஹாசன் கொண்டிருக்கிற ஆழமான பற்றுக்கு காரணம் இந்த மாதிரி பாடல்களை கேட்டா புரியுது! //
ஜோ, இளையராஜா மீது கமலுக்கு மட்டுமா பற்று?
ஜோ, இளையராஜா மீது கமலுக்கு மட்டுமா பற்று?
ராஜ்குமார்,
உங்க பின்னூட்டம் பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.
//அழகே அழகு பாடலை எழுதியவர் கண்ணதாசன்.( அங்கங்களை வர்ணிக்கும் பாடல்).//
நன்றி. ஆனால் அந்திமழை பாடல் வைரமுத்து தானோ?
//ஒரு அங்கம் கைகள் அறியாதது என்ற பாடல் வரிகளும், அதற்கு கமல்ஹாசனும், மாதவியும் தரும் முகபாவங்களும் மிகவும் பிரமாதம். சற்று பிசகினாலும் ஆபாசம் என பிறர் குரல் கொடுக்கும் ஆபத்திருக்கும் சங்கதியை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளார்கள் //
அந்த வரிகளை டிரான்ஸ்கிரிப்ட் பண்ணும் போது ஒரு நிமிடம் நீங்கள் சொன்னது என் மனதிற்குள் வந்து போனது. படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் காட்சி அதிகம் ஞாபகமில்லை. நல்ல தகவல். நன்றி.
உங்க பின்னூட்டம் பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.
//அழகே அழகு பாடலை எழுதியவர் கண்ணதாசன்.( அங்கங்களை வர்ணிக்கும் பாடல்).//
நன்றி. ஆனால் அந்திமழை பாடல் வைரமுத்து தானோ?
//ஒரு அங்கம் கைகள் அறியாதது என்ற பாடல் வரிகளும், அதற்கு கமல்ஹாசனும், மாதவியும் தரும் முகபாவங்களும் மிகவும் பிரமாதம். சற்று பிசகினாலும் ஆபாசம் என பிறர் குரல் கொடுக்கும் ஆபத்திருக்கும் சங்கதியை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளார்கள் //
அந்த வரிகளை டிரான்ஸ்கிரிப்ட் பண்ணும் போது ஒரு நிமிடம் நீங்கள் சொன்னது என் மனதிற்குள் வந்து போனது. படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் காட்சி அதிகம் ஞாபகமில்லை. நல்ல தகவல். நன்றி.
இது என்ன சூப்பர் ஹிட்? இதை விட சூப்பர் ஹிட்டான மேட்டரெல்லாம் பார்க்க வேண்டுமா? மக்களே.. நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய ஒரே இடம்.. மாயவரத்தான் வலைப்பூ..!
இப்போது பரபரப்பான பார்வையில்..!!
நம்பர் 1 கொண்டாட்டம்.
மாயவரத்தான் வலைப்பூ... எப்பவுமே நம்பர் 1.
இப்போது பரபரப்பான பார்வையில்..!!
நம்பர் 1 கொண்டாட்டம்.
மாயவரத்தான் வலைப்பூ... எப்பவுமே நம்பர் 1.
//இது என்ன சூப்பர் ஹிட்? இதை விட சூப்பர் ஹிட்டான மேட்டரெல்லாம் பார்க்க வேண்டுமா? மக்களே.. நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய ஒரே இடம்.. மாயவரத்தான் வலைப்பூ..! //
எத்தனை பேர் சார் கிளம்பியிருக்கீங்க இதுமாதிரி. வரவர வலைப்பதிவுகள் எல்லாம் குங்குமம் பத்திரிக்கை மாதிரி ஆகிபோச்சி. நம்பர் 1-ன்னு ஆளாளுக்கு சொல்ல ஆரம்பிச்சாட்டாங்கையா. விட்டா பனகல் பார்க்ல பேனர் தான் வைக்கனும் போல ஆளுங்களை சேர்க்க.
எத்தனை பேர் சார் கிளம்பியிருக்கீங்க இதுமாதிரி. வரவர வலைப்பதிவுகள் எல்லாம் குங்குமம் பத்திரிக்கை மாதிரி ஆகிபோச்சி. நம்பர் 1-ன்னு ஆளாளுக்கு சொல்ல ஆரம்பிச்சாட்டாங்கையா. விட்டா பனகல் பார்க்ல பேனர் தான் வைக்கனும் போல ஆளுங்களை சேர்க்க.
//போக போக **வாளைப்** போல அழகைக் காண்கிறேன்//
அய்யா சாமி அது **வாழை**. வாளைப் போல இருந்தா குத்தும்யா..:-)
அய்யா சாமி அது **வாழை**. வாளைப் போல இருந்தா குத்தும்யா..:-)
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
பாடலும் பாடல் வரியும்-1
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
பாரதிராஜவின் 'நிழல்கள்' படம் ஒரு அருமையான படம். 3 இளைஞர்களின்('நிழல்கள்'ரவி,ராபர்ட் ராஜசேகர், சந்திரசேகர்) வாழ்க்கை போராட்டத்தையும், முக்கோண காதல் கதையையும் சுற்றி வரும் படம். இசை அமைப்பாளராக வேண்டுமென்று லட்சிய கனவு சந்திரசேகருக்கு, வேலை வாங்கி கொடுக்காத பட்டத்தை பட்டமாக பறக்கவிடுவார். கல்லூரி இளைஞராக ராபர்ட் ராஜசேகர் ஒரு பெண்ணை காதலிக்க, நிழல்கள் ரவியும் அதே பெண்ணை காதலிக்க ஒரு முக்கோணம் உருவாகிறது. ராபர்ட் ராஜசேகர் தனக்கென்று ஒரு உலகத்தில் லயித்து விடுவார். கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளவர். மனம் மயக்கும் மாலைப்பொழுதில் அவர் இந்த பாடல் வரிகளை பாடுவதாக படத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
திரைக்காக கவிஞர் வைரமுத்து முதன்முதலில் எழுதிய வைரவரிகளால் ஆனது இந்த பாடல். நம்ம மொட்டையின் இசையில் அந்த வரிகள் சேர்ந்து காலத்தால் அழியாத இந்த பாடல் உருவானது. எந்த இடத்தில் இந்த பாடலை கேட்டாலும் முழுப்பாடலையும் கேட்காமல் அந்த இடத்தை விட்டு நகர்வது கிடையாது. அவ்வளவாக என்னை ஆட்கொண்டிருக்கிறது அந்த பாடல். கீழே பாடலை கேட்க விண்டோஸ் மீடியா ப்ளேயரும், பாடல் வரிகளையும் கொடுத்திருக்கிறேன். இந்த மாதிரி வாரத்திற்கு ஓரிரு ஆடியோ ப்ளாக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். என்னை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு நீங்கள் மகிழ்வது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கும்.
*******************
ஹே ஹோ ஹிம் லலா
பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஹ்ம் ஹே ஹா ஓ ஹிம்ஹூம்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
*******************
நல்லா இருந்த/இல்லேன்னா ஒரு வரி பின்னூட்டத்துல சொல்லிட்டு போயிருங்க.
திரைக்காக கவிஞர் வைரமுத்து முதன்முதலில் எழுதிய வைரவரிகளால் ஆனது இந்த பாடல். நம்ம மொட்டையின் இசையில் அந்த வரிகள் சேர்ந்து காலத்தால் அழியாத இந்த பாடல் உருவானது. எந்த இடத்தில் இந்த பாடலை கேட்டாலும் முழுப்பாடலையும் கேட்காமல் அந்த இடத்தை விட்டு நகர்வது கிடையாது. அவ்வளவாக என்னை ஆட்கொண்டிருக்கிறது அந்த பாடல். கீழே பாடலை கேட்க விண்டோஸ் மீடியா ப்ளேயரும், பாடல் வரிகளையும் கொடுத்திருக்கிறேன். இந்த மாதிரி வாரத்திற்கு ஓரிரு ஆடியோ ப்ளாக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். என்னை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு நீங்கள் மகிழ்வது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கும்.
*******************
ஹே ஹோ ஹிம் லலா
பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஹ்ம் ஹே ஹா ஓ ஹிம்ஹூம்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
*******************
நல்லா இருந்த/இல்லேன்னா ஒரு வரி பின்னூட்டத்துல சொல்லிட்டு போயிருங்க.
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
அன்புள்ள விஜய்,
இந்தப் பாடலுக்காகவே இப்படத்தைப் பார்க்கணுமுன்னு நினைச்சிருந்தேன். இப்பத்தான்
மார்ச் மாதம் சிங்கை வந்தப்ப அந்தப் படத்தை வாங்கற சந்தர்ப்பம் அமைஞ்சது.
படம் என்னவோ சுமார்தான். ஆனா இந்தப் பாட்டுதான்... அருமை!!!!
என்றும் அன்புடன்,
துளசி.
இந்தப் பாடலுக்காகவே இப்படத்தைப் பார்க்கணுமுன்னு நினைச்சிருந்தேன். இப்பத்தான்
மார்ச் மாதம் சிங்கை வந்தப்ப அந்தப் படத்தை வாங்கற சந்தர்ப்பம் அமைஞ்சது.
படம் என்னவோ சுமார்தான். ஆனா இந்தப் பாட்டுதான்... அருமை!!!!
என்றும் அன்புடன்,
துளசி.
நன்றி துளசியக்கா.
சில விசயங்களுக்காக அந்த படம் எனக்கு பிடித்திருந்தது. முதல் விசயம் படத்தோடு கூடிய இளையராஜாவின் இசை. அனைத்து பாடல்களும் மிக மிக அருமையாக இருக்கும்.
சில விசயங்களுக்காக அந்த படம் எனக்கு பிடித்திருந்தது. முதல் விசயம் படத்தோடு கூடிய இளையராஜாவின் இசை. அனைத்து பாடல்களும் மிக மிக அருமையாக இருக்கும்.
//வசந்தன்(Vasanthan) said...
"வானமகள் நாணுகிறாள்"
என்று வரவேண்டுமே //
சுட்டிகாட்டியமைக்கு நன்றி வசந்தன். அந்த வரியை மாற்றி விட்டேன். டிரன்ஸ்கிரிப்ஷன் எரர் :-)
"வானமகள் நாணுகிறாள்"
என்று வரவேண்டுமே //
சுட்டிகாட்டியமைக்கு நன்றி வசந்தன். அந்த வரியை மாற்றி விட்டேன். டிரன்ஸ்கிரிப்ஷன் எரர் :-)
அது வெறும் ராஜசேகர் என்று நினைக்கிறேன் (One flew over the cukoo's nestஐ மனசுக்குள் மத்தாப்பு என்று ராபர்ட்-ராஜசேகர் சுடுவதற்கு முன் - அதே ராஜசேகர் தானே இது?).
//அது வெறும் ராஜசேகர் என்று நினைக்கிறேன் //
மாண்டீ ராஜசேகராய் தான் இருக்குமென நினைக்கிறேன். எழுதும் போது ஒரு ஆளா இல்லை இரு வேறு ஆளா என்று குழப்பமாக இருந்தது.
//One flew over the cukoo's nestஐ மனசுக்குள் மத்தாப்பு என்று ராபர்ட்-ராஜசேகர் சுடுவதற்கு முன் - அதே ராஜசேகர் தானே இது?). //
அதே அதே
தற்போது அவரை 'மைடியர் பூதம்' டிவி சீரியலில் பார்த்த ஞாபகம். டைட்டில் கார்டை கவனிக்கிறேன்.
மாண்டீ ராஜசேகராய் தான் இருக்குமென நினைக்கிறேன். எழுதும் போது ஒரு ஆளா இல்லை இரு வேறு ஆளா என்று குழப்பமாக இருந்தது.
//One flew over the cukoo's nestஐ மனசுக்குள் மத்தாப்பு என்று ராபர்ட்-ராஜசேகர் சுடுவதற்கு முன் - அதே ராஜசேகர் தானே இது?). //
அதே அதே
தற்போது அவரை 'மைடியர் பூதம்' டிவி சீரியலில் பார்த்த ஞாபகம். டைட்டில் கார்டை கவனிக்கிறேன்.
என்கிட்டே இந்த பாட்டு இருந்தாலும் அல்வாசிட்டி ஸ்பீக்கர்ல எப்படித்தான் இருக்குது பாக்கலாம்ன்னு க்ளிக் பண்ணினா.... ஆர்டிஸ்ட்: விஜய்குமார், காப்பிரைட் அல்வாசிட்டி... ஆனாலும் இது டூமச்யா யோவ்... அப்புறம் பாட்டு லேசா வேகமா பாடுற மாதிரி ஒரு பீலிங்
தலீவர் முகமூடி,
முதன் முதலில் விண்டோஸ் மீடியா என்கோடர் பயன்படுத்துனேன். அந்த காப்பிரைட் மற்றும் மற்ற மேட்டர் எல்லாம் தெரியாமல் போட்டுவிட்டேன். அதை வலையேற்றிய பிறகு தான் கவனித்தேன். திரும்ப அழித்து பிறகு டயல் அப்பில் ஏற்றுவது முடியாத காரியம் ஆகையால் விட்டுவிட்டேன்.
தெரியாமல் நிகழ்ந்துவிட்ட இந்த தவறை மட்டும் மன்னித்தருள்க :-)
அப்புறம் இங்கே ஒழுங்க தான் பாடுகிறது அந்த பாட்டு. பைலின் சைஸை குறைப்பதற்க்காக பிட் ரேட்டை குறைய வைத்து என்கோட் பண்ணியிருக்கிறேன். ஆகையால் சுதி கம்மியாகத் தான் பாடும். கேட்கும் அளவில் இருந்ததால் வெளியிட்டேன்.
முதன் முதலில் விண்டோஸ் மீடியா என்கோடர் பயன்படுத்துனேன். அந்த காப்பிரைட் மற்றும் மற்ற மேட்டர் எல்லாம் தெரியாமல் போட்டுவிட்டேன். அதை வலையேற்றிய பிறகு தான் கவனித்தேன். திரும்ப அழித்து பிறகு டயல் அப்பில் ஏற்றுவது முடியாத காரியம் ஆகையால் விட்டுவிட்டேன்.
தெரியாமல் நிகழ்ந்துவிட்ட இந்த தவறை மட்டும் மன்னித்தருள்க :-)
அப்புறம் இங்கே ஒழுங்க தான் பாடுகிறது அந்த பாட்டு. பைலின் சைஸை குறைப்பதற்க்காக பிட் ரேட்டை குறைய வைத்து என்கோட் பண்ணியிருக்கிறேன். ஆகையால் சுதி கம்மியாகத் தான் பாடும். கேட்கும் அளவில் இருந்ததால் வெளியிட்டேன்.
படத்தை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால்... பாடல் மிக அருமை. மீண்டும் கேட்க கிடைத்ததில் மகிழ்ச்சி. மேலும் தொடருங்கள்.
நன்றி சண்முகி. முதன் முதலில் இந்த ப்ளாக்கில் பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள். தங்கள் பின்னூட்டத்திற்கு மெத்த மகிழ்ச்சி. இனி வாரம் என்னை கவர்ந்த பாடல்கள் அலங்கரிக்கும். அது காட்டாயம் உங்களை போன்ற ரசிக பெருமக்களுக்கும் கவரும் என்பதில் ஐயமில்லை. இசைஞானி வடிக்கும் இசையாச்சே, சும்மாவா?
// மன்னித்தருள்க // என்னுடைய இயல்பான சுபாவமே அதுதானே... மன்னித்தோம் :-) << சரி.. சரி... ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுடக்கூடாதே >>
// இனி வாரம் என்னை கவர்ந்த பாடல்கள் அலங்கரிக்கும் // மாயவரம் வேற இதே மாதிரி ஒரு திட்டத்தோட கெளம்பியிருக்கார் (பாட்டு இல்ல, மலரும் நினைவுகளாம்). எங்களயெல்லாம் ஒரு நிமிஷம் நெனச்சி பாத்தீங்களா... சரி, விதி வலியது... நடத்துங்க...
// இனி வாரம் என்னை கவர்ந்த பாடல்கள் அலங்கரிக்கும் // மாயவரம் வேற இதே மாதிரி ஒரு திட்டத்தோட கெளம்பியிருக்கார் (பாட்டு இல்ல, மலரும் நினைவுகளாம்). எங்களயெல்லாம் ஒரு நிமிஷம் நெனச்சி பாத்தீங்களா... சரி, விதி வலியது... நடத்துங்க...
அருமையான பாடலிது. சிறுவயதில் இப்பாடலை விழா ஒன்றின் போது நிஜத்திலேயே ஒரு பொன்மாலைப் பொழுதில் மலைகள் சூழ்ந்த இடமொன்றில் ஒலிக்கவிட்டிருந்தார்கள். அந்த அனுபவம் மங்கிவிட்டிருந்தாலும் மறக்கமுடியாதது.
ஃபயர்பாக்ஸில் விண்டோஸ் மீடியா பிளேயரின் படம் தெரியவில்லை.
அப்புறம் " நம்ம மொட்டையின் இசையில்" இப்படி சொல்லியிருக்க வேண்டாமே!
ஃபயர்பாக்ஸில் விண்டோஸ் மீடியா பிளேயரின் படம் தெரியவில்லை.
அப்புறம் " நம்ம மொட்டையின் இசையில்" இப்படி சொல்லியிருக்க வேண்டாமே!
முகமூடி,
தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. இதெல்லாத்தையும் ஆராயாம அனுபவிங்க :-}}} கருத்துக்கு நன்றி.
தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. இதெல்லாத்தையும் ஆராயாம அனுபவிங்க :-}}} கருத்துக்கு நன்றி.
நன்றி ராதாகிருஷ்ணன்
//ஃபயர்பாக்ஸில் விண்டோஸ் மீடியா பிளேயரின் படம் தெரியவில்லை.//
பயர்பாக்ஸில் தெரிகிற மாதிரி தான் முதலில் பாட்டை இட்டேன். ப்ளே பட்டனை தட்டாமலே எடுத்த உடனேயே பாடல் வந்து விடுகிறது. அது இந்த ப்ளாக்கை பார்ப்பவர்க்ளுக்கு திடீர் ஒலியால் அதிர்ச்சி வரலாம்.
யாருக்காவது எந்த டேக்கை பயர்பாக்ஸில் பயன்படுத்தினால் விண்டோஸ் ப்ளேயர் தெரியும் எனத் தெரிந்தால் சொல்லுங்களேன்.
//அப்புறம் " நம்ம மொட்டையின் இசையில்" இப்படி சொல்லியிருக்க வேண்டாமே! //
இளையராஜாவை நான் எப்போதும் செல்லமாக அழைப்பது 'மொட்டை' என்று தான். இசையின் ஞானியாக விளங்கும் இளையராஜாவை இப்படி அழைக்கலாமா என்பதை விட இசையின் மூலம் எங்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் என்ற உரிமையில் தான் அழைக்கிறேன்.
//ஃபயர்பாக்ஸில் விண்டோஸ் மீடியா பிளேயரின் படம் தெரியவில்லை.//
பயர்பாக்ஸில் தெரிகிற மாதிரி தான் முதலில் பாட்டை இட்டேன். ப்ளே பட்டனை தட்டாமலே எடுத்த உடனேயே பாடல் வந்து விடுகிறது. அது இந்த ப்ளாக்கை பார்ப்பவர்க்ளுக்கு திடீர் ஒலியால் அதிர்ச்சி வரலாம்.
யாருக்காவது எந்த டேக்கை பயர்பாக்ஸில் பயன்படுத்தினால் விண்டோஸ் ப்ளேயர் தெரியும் எனத் தெரிந்தால் சொல்லுங்களேன்.
//அப்புறம் " நம்ம மொட்டையின் இசையில்" இப்படி சொல்லியிருக்க வேண்டாமே! //
இளையராஜாவை நான் எப்போதும் செல்லமாக அழைப்பது 'மொட்டை' என்று தான். இசையின் ஞானியாக விளங்கும் இளையராஜாவை இப்படி அழைக்கலாமா என்பதை விட இசையின் மூலம் எங்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் என்ற உரிமையில் தான் அழைக்கிறேன்.
இளையராஜா , பாரதிராஜா , வைரமுத்து எப்போது இணைந்து இதனை போன்ற காவியங்களை படைக்கப்போகிறார்களோ தெரிய்வில்லை ..
கொசுரு : 'ஒரு நாள் ஒரு கனவு' பாட்டு கேட்டீர்களா?? மொட்டைஸ் மொட்டைஸ்தான் (அதே உறவு தாங்க)
கொசுரு : 'ஒரு நாள் ஒரு கனவு' பாட்டு கேட்டீர்களா?? மொட்டைஸ் மொட்டைஸ்தான் (அதே உறவு தாங்க)
///இளையராஜாவை நான் எப்போதும் செல்லமாக அழைப்பது 'மொட்டை' என்று தான். இசையின் ஞானியாக விளங்கும் இளையராஜாவை இப்படி அழைக்கலாமா என்பதை விட இசையின் மூலம் எங்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் என்ற உரிமையில் தான் அழைக்கிறேன்.///
என் நண்பர்கள் பலர் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள், அவர்களும் "மொட்டை" என்றுதான் அழைப்பார்கள். ஒருவேளை இது "சாம்பார் - ஜெமினி" போல செல்லப் பெயரோ ? :-).
என் நண்பர்கள் பலர் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள், அவர்களும் "மொட்டை" என்றுதான் அழைப்பார்கள். ஒருவேளை இது "சாம்பார் - ஜெமினி" போல செல்லப் பெயரோ ? :-).
உண்மையிலேயே வானம் எனக்கொரு போதி மரம். இந்த வரிகள் எழுதிய வைரமுத்து நன்றாகத்தான் எழுதிகொண்டிருந்தார் ஆரம்ப கால பாடல்களிலே.
அண்ணாச்சி..
பாட்டோ நீர் எழுதுனது கெடயாது;
மியூஜிக்கோ நீர் போட்டது கெடயாது;
சரி வுடு, இந்தப் படத்தயாச்சும் நீர் எடுத்தீரா
அதுவும் கெடயாது. அப்புறம் எதுக்குய்யா,
right-click பண்ணாக்க
வேண்டாமே... வேண்டவே வேண்டாமே
அப்டீன்னு alert குடுக்குறீரு!
வுட்டோமா நாங்க,
view source போனோம்ல,
தேடிப் புடிச்சோம்ல,
http://www.halwacity.com/vijay/PONMALAI_small.wma
கெடச்சுதுல்லா,
எறக்கிப்போட்டோமுல்ல!
ஹே ஹோ ஹிம் லலலா
------------
புதுசா பின்னூட்டம் போட்ட சண்முகிக்கு வரவேற்பு தூக்கலா இருக்கு! ம்...... புது கஸ்டமர கவர் பண்றீங்க! ok ok.. நடத்துங்க.
------------
- ஞானபீடம். {<<= வேண்டாமே... வேண்டவே வேண்டாமே; இங்கே CLICK செய்யவே வேண்டாமே!}
பாட்டோ நீர் எழுதுனது கெடயாது;
மியூஜிக்கோ நீர் போட்டது கெடயாது;
சரி வுடு, இந்தப் படத்தயாச்சும் நீர் எடுத்தீரா
அதுவும் கெடயாது. அப்புறம் எதுக்குய்யா,
right-click பண்ணாக்க
வேண்டாமே... வேண்டவே வேண்டாமே
அப்டீன்னு alert குடுக்குறீரு!
வுட்டோமா நாங்க,
view source போனோம்ல,
தேடிப் புடிச்சோம்ல,
http://www.halwacity.com/vijay/PONMALAI_small.wma
கெடச்சுதுல்லா,
எறக்கிப்போட்டோமுல்ல!
ஹே ஹோ ஹிம் லலலா
------------
புதுசா பின்னூட்டம் போட்ட சண்முகிக்கு வரவேற்பு தூக்கலா இருக்கு! ம்...... புது கஸ்டமர கவர் பண்றீங்க! ok ok.. நடத்துங்க.
------------
- ஞானபீடம். {<<= வேண்டாமே... வேண்டவே வேண்டாமே; இங்கே CLICK செய்யவே வேண்டாமே!}
தாஸூ, ஒரு நாள் ஒரு கனவு இன்னும் கேட்கவில்லை.
நன்றி தாஸூ
//இது "சாம்பார் - ஜெமினி" போல செல்லப் பெயரோ ? :-). //
அதே அதே. நன்றி முத்து.
நன்றி தாஸூ
//இது "சாம்பார் - ஜெமினி" போல செல்லப் பெயரோ ? :-). //
அதே அதே. நன்றி முத்து.
//உண்மையிலேயே வானம் எனக்கொரு போதி மரம். இந்த வரிகள் எழுதிய வைரமுத்து நன்றாகத்தான் எழுதிகொண்டிருந்தார் ஆரம்ப கால பாடல்களிலே. //
இப்போது கூட ரொம்ப rare-ஆக நல்ல பாடல்களை சில நேரம் கொடுப்பார். நன்றி தேன் துளி
இப்போது கூட ரொம்ப rare-ஆக நல்ல பாடல்களை சில நேரம் கொடுப்பார். நன்றி தேன் துளி
//அண்ணாச்சி..
பாட்டோ நீர் எழுதுனது கெடயாது;
மியூஜிக்கோ நீர் போட்டது கெடயாது;
சரி வுடு, இந்தப் படத்தயாச்சும் நீர் எடுத்தீரா
அதுவும் கெடயாது. அப்புறம் எதுக்குய்யா,
right-click பண்ணாக்க
வேண்டாமே... வேண்டவே வேண்டாமே
அப்டீன்னு alert குடுக்குறீரு!//
ஞானபீடம் நீங்க சொன்னது எல்லாம் இல்லை தான். ஆனா அதை என்கோட் எழுதி ப்ளாக்குல போட்டிருக்கோம்ல. அட ஏங்க உங்களுக்கு கஷ்டம் ஒரு சோதனைக்காக அதை கொடுத்திருந்தேன். இப்போ அதை தூக்கியாச்சில்ல. தாரளமா உள்ள புகுந்து பார்க்கலாம் கண்ணா.
நன்றி ஞானபீடம்.
பாட்டோ நீர் எழுதுனது கெடயாது;
மியூஜிக்கோ நீர் போட்டது கெடயாது;
சரி வுடு, இந்தப் படத்தயாச்சும் நீர் எடுத்தீரா
அதுவும் கெடயாது. அப்புறம் எதுக்குய்யா,
right-click பண்ணாக்க
வேண்டாமே... வேண்டவே வேண்டாமே
அப்டீன்னு alert குடுக்குறீரு!//
ஞானபீடம் நீங்க சொன்னது எல்லாம் இல்லை தான். ஆனா அதை என்கோட் எழுதி ப்ளாக்குல போட்டிருக்கோம்ல. அட ஏங்க உங்களுக்கு கஷ்டம் ஒரு சோதனைக்காக அதை கொடுத்திருந்தேன். இப்போ அதை தூக்கியாச்சில்ல. தாரளமா உள்ள புகுந்து பார்க்கலாம் கண்ணா.
நன்றி ஞானபீடம்.
அண்ணே ஞானபீடம்,
நான் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன். அதுக்காக 'ஜே' போட 100000 தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். உடனே ஏற்பாடு பண்ண முடியுமா?
:-))))
நான் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன். அதுக்காக 'ஜே' போட 100000 தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். உடனே ஏற்பாடு பண்ண முடியுமா?
:-))))
என்னதான் இருந்தாலும் என்ஜாய் பண்றதுனா - "மடை திறந்து..." பாட்டு, பிக்சரைசேசனோட ... அட அட அட ...
-டண்டணக்கா
-டண்டணக்கா
//என்னதான் இருந்தாலும் என்ஜாய் பண்றதுனா - "மடை திறந்து..." பாட்டு, பிக்சரைசேசனோட ... அட அட அட ...//
டண்டணக்க, இந்த பாடலும் நான் அடிக்கடி கேட்கும் பாடல் தான். ஒரு இளைஞனின் இசை அமைப்பாளர் ஆகும் ஆசை, ஒரு படத்தயாரிப்பாளர் அவனுக்கு இசை அமைக்க அட்வாண்ஸ் கொடுத்தவுடன் துள்ளளுடன் ஆரம்பிக்கும் இசையில் அவனுடைய கனவுகளை காட்சி அமைப்புகள் மூலம் அசத்தியிருப்பார் பாரதிராஜா. அந்த இரண்டு பாடல்களிலும் எஸ்.பி.பியின் குரலும் ஆதிக்கம் காலத்தால் அழியாது. அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமை. 'பூங்கதவே தாழ் திறவாய்' கேட்டுப்பாருங்க. நன்றி டண்டணக்கா.
டண்டணக்க, இந்த பாடலும் நான் அடிக்கடி கேட்கும் பாடல் தான். ஒரு இளைஞனின் இசை அமைப்பாளர் ஆகும் ஆசை, ஒரு படத்தயாரிப்பாளர் அவனுக்கு இசை அமைக்க அட்வாண்ஸ் கொடுத்தவுடன் துள்ளளுடன் ஆரம்பிக்கும் இசையில் அவனுடைய கனவுகளை காட்சி அமைப்புகள் மூலம் அசத்தியிருப்பார் பாரதிராஜா. அந்த இரண்டு பாடல்களிலும் எஸ்.பி.பியின் குரலும் ஆதிக்கம் காலத்தால் அழியாது. அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமை. 'பூங்கதவே தாழ் திறவாய்' கேட்டுப்பாருங்க. நன்றி டண்டணக்கா.
//மடை திறந்து பாயும் நதி அலை நான்,..
அந்த படத்துல, அதுதான் டாப்பு..
அப்புறம்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. 'மொட்டை'ன்னு சொல்லும் போது தான்.. ஒரு பிரியம் வருது.. நீங்க அப்படியே மெயின்டெயின் பன்னுங்க அண்ணாச்சி..
அந்த படத்துல, அதுதான் டாப்பு..
அப்புறம்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. 'மொட்டை'ன்னு சொல்லும் போது தான்.. ஒரு பிரியம் வருது.. நீங்க அப்படியே மெயின்டெயின் பன்னுங்க அண்ணாச்சி..
ஒரு சிறு குறிப்பு: இது வரை வைரமுத்து எழுதிய திரையிசைப் பாடல்களில் அவரது மனைவி பொன்மணி வைரமுத்துக்கு பிடித்தத வரிகள்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
முகங்கள்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இவருக்கோ அலுவலகத்தில் என்ன பிரச்சனையோ தெரியவில்லை? இப்படி போட்டு உதைக்கிறார் கணணியை. சில வருடங்களுக்கு முன் மின்னஞ்சலில் கீழ்கண்ட வீடியோ க்ளிப்பிங்ஸ் சகஜமாக அலைந்தது. என்சாய். கீழே ப்ளே பட்டனை தட்டி படத்தை பாருங்கள். மோசமான படத்தின் குவாலிட்டிக்கு மன்னிக்கவும்.
id=WindowsMediaPlayer1 width=245 height=240>
இது எப்படியிருக்கு???? "PLAY" பட்டனை தட்டி அதையும் பார்த்துவிடுங்கள்.
id=WindowsMediaPlayer1 width=245 height=240>
இது எப்படியிருக்கு???? "PLAY" பட்டனை தட்டி அதையும் பார்த்துவிடுங்கள்.
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
நன்றி தாஸ். கூடிய சீக்கிரம் கனணி மக்கள் எல்லாரும் இந்த ரேஞ்சுல ஆகியிருவோம்னு நினைக்கிறேன்.... ஏற்கனவே கீபோட்டை போட்டு உடைக்கிறோம். என்னைக்கு மானிட்டர்ன்னு தெரியல....
விஜய், இந்த முதலாவது MS Media Player படம் ஆண்டுக்கணக்காக இணையவலம் வந்துகொண்டிருக்கின்றது. எனக்குப் பிடித்தது, இரண்டாவதுதான். உங்களுடையது என்றால், பாராட்டைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
நன்றி பெயரிலி.
யப்பா அந்த படம் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து இன்று வரை சக்கை போடு போட்ட படம்.
இரண்டாவது படமா? ஹி ஹி ஹி ஹி....
முழுவதும் என் கைவண்ணம் கிடையாது. ஆனால் என் கைவண்ணத்தில் ஃபிளாஷில் கஷ்டமைஸ் பண்ணப்பட்ட படம் ஹி ஹி...
யப்பா அந்த படம் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து இன்று வரை சக்கை போடு போட்ட படம்.
இரண்டாவது படமா? ஹி ஹி ஹி ஹி....
முழுவதும் என் கைவண்ணம் கிடையாது. ஆனால் என் கைவண்ணத்தில் ஃபிளாஷில் கஷ்டமைஸ் பண்ணப்பட்ட படம் ஹி ஹி...
நன்றி முத்து.
//கம்ப்யூட்டர் மனிதனைப் போல் சிந்திக்க ஆரம்பித்தால் தினமும் அது மனிதனை இப்படித்தான் உதைக்கும். //
மனிதனும் கம்ப்பூட்டர் மாதிரி சிந்திக்க ஆரம்பித்தால் இப்படி தான் யாரிடமாவது உதை வாங்குவான். :-)
//கம்ப்யூட்டர் மனிதனைப் போல் சிந்திக்க ஆரம்பித்தால் தினமும் அது மனிதனை இப்படித்தான் உதைக்கும். //
மனிதனும் கம்ப்பூட்டர் மாதிரி சிந்திக்க ஆரம்பித்தால் இப்படி தான் யாரிடமாவது உதை வாங்குவான். :-)
//ப்ளாக் விளம்பரத்துல நவீன யுக்தி எல்லாம் கடைப்பிடிக்கிறீங்க... vijay.//
மரங்கள் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லையே!
நா மறந்தாலும், நீங்க என்னய மறக்க வுடமாட்டீங்கய்யா!
ஞானபீடம். (<<= pls.DONT click here!)
மரங்கள் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லையே!
நா மறந்தாலும், நீங்க என்னய மறக்க வுடமாட்டீங்கய்யா!
ஞானபீடம். (<<= pls.DONT click here!)
//மரங்கள் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லையே!//
ஞானபீடம், இது உண்மையில சீன பழமொழின்னு சொல்றீங்களா? இல்லை அன்பே சிவமா?
ஞானபீடம், இது உண்மையில சீன பழமொழின்னு சொல்றீங்களா? இல்லை அன்பே சிவமா?
போகப் போகத் தெரியும்...!
இந்த பூவின் வாசம் புரியும்...!!
- ஞானபீடம். {<<= CLICK here on your own risk!}
இந்த பூவின் வாசம் புரியும்...!!
- ஞானபீடம். {<<= CLICK here on your own risk!}
//மரங்கள் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லையே!//
சொன்னது மாஒ அதாவது மாசேதுங். உங்கள் முகத்தினை வீடியோப் படத்தில் பார்க்க முடியவில்லை. அப்படி என்ன பிரச்சினை அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்பட்டது.
சொன்னது மாஒ அதாவது மாசேதுங். உங்கள் முகத்தினை வீடியோப் படத்தில் பார்க்க முடியவில்லை. அப்படி என்ன பிரச்சினை அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்பட்டது.
நன்றி விசிதா.
ஆக மொத்தம் அந்த பொன்மொழி சீனா தான் இல்லையா?
வீடியோ படத்தில் முகம் தெரியவில்லை என்று தான் கீழே ஃப்ளாஷில் என்னுடைய முகம் போட்டு காண்பித்தேன். :{{{
ஆக மொத்தம் அந்த பொன்மொழி சீனா தான் இல்லையா?
வீடியோ படத்தில் முகம் தெரியவில்லை என்று தான் கீழே ஃப்ளாஷில் என்னுடைய முகம் போட்டு காண்பித்தேன். :{{{
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
-ல் போட்டுத் தாக்கியது
இட ஒதுக்கீடு தேவையா?
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
அண்மையில் திரு குழலி அவர்கள் இதுபற்றி ஒரு நல்ல பதிவு கொடுத்துள்ளார். அதில் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை காரணிகளுடன் தெளிவாக கூறியுள்ளார். இது நான் முன்னைய ஒரு பதிவில் கேட்ட கேள்விக்கு விடையாக கொடுத்துள்ளார். நன்றி குழலி அண்ணாச்சி.
இட ஒதுக்கீட்டின் அவசியத்தில் எனக்கு முரண்பாடு இல்லை. ஆனால் அது செயல்படுத்தப்பட்ட முறையில்தான் இடிக்கிறது. இதில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமெண்பார்கள். இதில் அரசியல்வாதிகள் கூத்தாடிகளாக இருந்து மக்களிடம் பேதமை வளர்த்து அதில் குளிர்காய்கிறார்கள்.
இந்த இருவரின் கூற்றிலும் உள்ள உண்மைகள் என்ன?
1. இட ஒதுக்கீடு அவசியம்.
2. பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்கள்.
3. தற்பொழுதுள்ள முறையில் ஓட்டைகள் உள்ளன
4. இந்த ஒதுக்கீட்டால் பயன் பெறும் உண்மையானவர்கள் குறைவு.
மேலும் திரு சொ. சங்கரபாண்டி கூறுகையில் ஒரு மாற்றுத்திட்டத்தை ஆளும் வர்க்கம் முன் வைக்க வேண்டுமென கூறுகிறார். ஆனால் இந்த ஆளும் வர்க்கம் சாதியை முன் நிறுத்திதானே ஆட்சிக்கே வருகிறது. அதனால் அவர்கள் மாற்று திட்டத்தை முன் வைக்கப்போவதில்லை.
ஆனால் இதற்கொரு நல்ல மாற்று உண்டு. இந்த இட ஒதுக்கீட்டை சாதிமுறையில் கொள்ளாமல் ஏன் கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தின் அடிப்படையில் கொள்ளக்கூடாது? திரு குழலி கூறும் பொழுதும் 90% நகர் புறத்தார் எடுக்கிறார்கள் ஆனால் கிராமப்புறத்தினர் 70% எடுத்தால் அதை ஒப்பிடுதல் கூடாது என்றுதானே கூறியுள்ளார்?
கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் சதவீதத்தை கணக்கெடுத்து அதற்கேற்றவாரு இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தற்பொழுதுள்ள திட்டத்தைவிட வேலை மற்றும் நடைமுறையில் அமுல் படுத்தும் போது சிக்கலும் குறைவுதான். இதன் பயண் உரியவர்களை முன்னைய திட்டத்தைவிட அதிகமாக சென்றடையும்.
இத்திட்டத்தின் பயண்கள்:
1. கிராமப்புறத்தினர் பயண்பெறுவர்.
2. சாதியை படிப்பில், வேலையில் புகுத்திய தீயசெயலை அகற்றலாம்.
3. பயண்பெறும் உண்மையானவர்கள் அதிகமாவர்.
இட ஒதுக்கீட்டின் அவசியத்தில் எனக்கு முரண்பாடு இல்லை. ஆனால் அது செயல்படுத்தப்பட்ட முறையில்தான் இடிக்கிறது. இதில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமெண்பார்கள். இதில் அரசியல்வாதிகள் கூத்தாடிகளாக இருந்து மக்களிடம் பேதமை வளர்த்து அதில் குளிர்காய்கிறார்கள்.
குழலி அவர்கள் பதிவில் :
பத்து கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலே, நடந்தோ பள்ளிக்கூடம் வந்து பின் வீடு சென்று வயலில் சிறு வேலைகள் பார்த்தோ அல்லது வீட்டில்
வேலைகள் பார்த்துவிட்டுதினம் அரை மணி நேரம் கூட வீட்டில் படிக்கமுடியாமல் இருக்கும் ஒரு மாணவன் 70 விழுக்காடு வாங்குவதற்கும் நகரத்திலே தரமான பள்ளியில் படித்து படிப்பை மட்டுமேவேலையாக கொண்டு படிக்கும் மாணவன் 90விழுக்காடு எடுப்பதாலும் 70 விழுக்காடு எடுத்த மாணவன் 90 விழுக்காடு எடுக்கும் மாணவனைவிட அறிவில் குறைந்தவன் என்று சொல்வது நியாயமாக இருக்குமா?
இதற்காக தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் ஓட்டை இல்லை என சொல்ல வரவில்லை, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து படித்து வெளிவரும்
தலைமுறை நன்றாக படிக்கக்கூடிய ஒரு சூழலை தங்கள் வாரிசுகளுக்கு தந்துவிட்டு மீண்டும் அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது, இந்த ஓட்டையை மட்டும் அடைத்துவிட்டு இட ஒதுக்கீட்டை தொடரலாம்.... எது வரை தொடரலாம்?, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிறப்பினால் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பிறப்பினால் ஏற்படுகின்ற சமூக உரிமை மறுப்புகள் அழியும் வரை, பொருளாதார அளவில் மட்டுமின்றி சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம்.
திரு சொ. சங்கரபாண்டி அந்த பதிவிற்கு அளித்த பின்னூட்டம்:
இதுதான் கண்ணீர் வரச்செய்த வாக்கியம். இட ஒதுக்கீட்டினால் தங்களுடைய முன்னேற்றம் பறிக்கப் பட்டதாக சிலர் நொந்து கொள்கிற பொழுதெல்லாம்,
கன்னியப்பன்களின் கதைதான் எனக்கு நினைவுக்கு வரும். இட ஒதுக்கீட்டில் நிறைய கோளாறுகள், குளறுபடிகள், தில்லுமுல்லுகள் என்று இருந்தாலும் எனக்குத் தெரிந்து அதனால் ஓரளவுக்குப் பயன் பெற்று முன்னுக்கு வந்த கன்னியப்பன்களையும் அறிவேன். இட ஒதுக்கீட்டின் குறைபாடுகளுக்கும் முக்கிய காரணம் அரசாங்கத்தின் செயல்பாட்டுப் பிழைகள்தாம். ஆனால் அதைத் தவிர்த்து நல்ல மாற்றுத் திட்டமிருந்தால் ஆளும் வர்க்கம் அதை முன்வைத்திருக்க வேண்டும். முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் இதுதான் இருக்கும் ஒரே
வழி. ஒதுக்கப் பட்ட இடங்களுக்குள்ளேயே சலுகைகள் வறுமையால் வாடுபவர்களைச் சென்றடையுமாறு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும். மேலும் கிராமப்புற வேலை வாய்ப்புகளைப் பெருக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். உதாரணமாக மத்தியப் பிரதேச மானிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் திக்விஜய்சிங் கொண்டு வந்த பல திட்டங்களைக் கூறலாம்.
இந்த இருவரின் கூற்றிலும் உள்ள உண்மைகள் என்ன?
1. இட ஒதுக்கீடு அவசியம்.
2. பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்கள்.
3. தற்பொழுதுள்ள முறையில் ஓட்டைகள் உள்ளன
4. இந்த ஒதுக்கீட்டால் பயன் பெறும் உண்மையானவர்கள் குறைவு.
மேலும் திரு சொ. சங்கரபாண்டி கூறுகையில் ஒரு மாற்றுத்திட்டத்தை ஆளும் வர்க்கம் முன் வைக்க வேண்டுமென கூறுகிறார். ஆனால் இந்த ஆளும் வர்க்கம் சாதியை முன் நிறுத்திதானே ஆட்சிக்கே வருகிறது. அதனால் அவர்கள் மாற்று திட்டத்தை முன் வைக்கப்போவதில்லை.
ஆனால் இதற்கொரு நல்ல மாற்று உண்டு. இந்த இட ஒதுக்கீட்டை சாதிமுறையில் கொள்ளாமல் ஏன் கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தின் அடிப்படையில் கொள்ளக்கூடாது? திரு குழலி கூறும் பொழுதும் 90% நகர் புறத்தார் எடுக்கிறார்கள் ஆனால் கிராமப்புறத்தினர் 70% எடுத்தால் அதை ஒப்பிடுதல் கூடாது என்றுதானே கூறியுள்ளார்?
கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் சதவீதத்தை கணக்கெடுத்து அதற்கேற்றவாரு இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தற்பொழுதுள்ள திட்டத்தைவிட வேலை மற்றும் நடைமுறையில் அமுல் படுத்தும் போது சிக்கலும் குறைவுதான். இதன் பயண் உரியவர்களை முன்னைய திட்டத்தைவிட அதிகமாக சென்றடையும்.
இத்திட்டத்தின் பயண்கள்:
1. கிராமப்புறத்தினர் பயண்பெறுவர்.
2. சாதியை படிப்பில், வேலையில் புகுத்திய தீயசெயலை அகற்றலாம்.
3. பயண்பெறும் உண்மையானவர்கள் அதிகமாவர்.
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
என்னுடைய பதிவிலேயே உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது, இங்கே வெறுமனே நகரம் அல்லது கிராமம் என்பது மட்டுமல்ல பிரச்சினை
//படிப்பதும் அதிக மதிப்பெண்கள் வாங்குவதும் வெறுமனே ஒரு மாணவனின் அறிவுத்திறனை கொண்டு மட்டும் வருவதில்லை, அவன் இருக்கும் சூழலும் இதில் பெறும் பங்காற்றுகின்றது. அதிக மதிப்பெண்கள் பெறுவதில் பொருளாதார வசதி இரண்டாமிடத்தில் தானிருக்கும் மிக முக்கியமான இடம் குடும்ப சூழல், மற்றும் சமூக சூழல் தான்.
தந்தை தான் செய்யும் வேலைக்காக குடித்துவிட்டு பின் அதே பழக்கமாகி வீட்டில் சண்டை சச்சரவுகளோடு நிம்மதியின்றி படிக்கும் மாணவன், சில மாணவர்கள் வீட்டில் பிரச்சினையில்லையென்றாலும் அவர்களை சுற்றியுள்ள இடங்களில் நடக்கும் பிரச்சினைகள்,இதெல்லாவற்றையும் விட காலம் காலமாக படிப்பு அவனுக்கு ஒதுக்கப்பட்டதல்ல,அது மற்ற சிலருக்காக, என்ற மனப்பாங்கிலிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வருபவனின் மதிப்பெண்களும், காலம் காலமாக கல்வி, கேள்விகள் எமக்கு மட்டுமே சொந்தமென்று இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வரும் மாணவன் எடுக்கும் மதிப்பெண்களும் ஒரே அளவீட்டில் வைத்து பார்க்க வேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயமென எனக்குப்புரியவில்லை.
//
மேலே உள்ளது விளக்கமளிக்கும் என நம்புகின்றேன்
//படிப்பதும் அதிக மதிப்பெண்கள் வாங்குவதும் வெறுமனே ஒரு மாணவனின் அறிவுத்திறனை கொண்டு மட்டும் வருவதில்லை, அவன் இருக்கும் சூழலும் இதில் பெறும் பங்காற்றுகின்றது. அதிக மதிப்பெண்கள் பெறுவதில் பொருளாதார வசதி இரண்டாமிடத்தில் தானிருக்கும் மிக முக்கியமான இடம் குடும்ப சூழல், மற்றும் சமூக சூழல் தான்.
தந்தை தான் செய்யும் வேலைக்காக குடித்துவிட்டு பின் அதே பழக்கமாகி வீட்டில் சண்டை சச்சரவுகளோடு நிம்மதியின்றி படிக்கும் மாணவன், சில மாணவர்கள் வீட்டில் பிரச்சினையில்லையென்றாலும் அவர்களை சுற்றியுள்ள இடங்களில் நடக்கும் பிரச்சினைகள்,இதெல்லாவற்றையும் விட காலம் காலமாக படிப்பு அவனுக்கு ஒதுக்கப்பட்டதல்ல,அது மற்ற சிலருக்காக, என்ற மனப்பாங்கிலிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வருபவனின் மதிப்பெண்களும், காலம் காலமாக கல்வி, கேள்விகள் எமக்கு மட்டுமே சொந்தமென்று இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வரும் மாணவன் எடுக்கும் மதிப்பெண்களும் ஒரே அளவீட்டில் வைத்து பார்க்க வேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயமென எனக்குப்புரியவில்லை.
//
மேலே உள்ளது விளக்கமளிக்கும் என நம்புகின்றேன்
கிராமம், நகரம் என்று வந்தால் எல்லோரும் கிராமத்திலே ஒரு ரேஷன் கார்ட் வைத்துக் கொண்டு அதில் நுழைய முயற்சிப்பர். இது போல அதிகம் முன்வைக்கப்ப்டும் மற்றொரு முறை 'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு'. இதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. வருமானத்தை குறைத்து ஒரு சான்றிதழ் வாங்கினால் போதும், உள்ளே நுழைந்து விடலாம்.
இட ஒதுக்கீடு என்பது சமூக சம நிலைக்காக உருவாக்கப்பட்டது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து விடலாம், ஏழை
பனக்காரனாகிவிடலாம், ஆனால் தாழ்த்தப்பட்டவர் ஆதிக்கம் செலுத்த முடியுமா? அவர்களுக்கும் சம உரிமை வேண்டும், சமமான போட்டிக்களம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது இட ஒதுக்கீடு (கொள்கை அளவில்).
சில ஓட்டைகள் இருந்தாலும் இப்போதுள்ள முறை சிறந்த முறையே. இதில் களைய வேண்டிய குறைகள் நிறைய உள்ளன.
1. இந்த முறையிலேயெ கிராமப்புறம், நகரம் என்று உள்-ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
2. BC சான்றிதழ் வாங்கிக் கொண்டு இந்த ஒதுக்கீட்டின் பலனை திருட்டுத் தனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
3. ஒட்டு மொத்த ஒதுக்கீட்டு முறைக்கும் ஒரு 'Exit criteria' வைக்க வேண்டும். இந்த இலக்கை எட்டிவிட்டால் இனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும். இதை அறிவிக்காத வரை இட ஒதுக்கீட்டின் பெரும் பயன் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கே போய் சேரும்.
இந்த பதிலை என் பதிவிலும் இட்டிருக்கிறேன்.
http://vanampadi.blogspot.com/2005/06/blog-post_112003968980778072.html
இட ஒதுக்கீடு என்பது சமூக சம நிலைக்காக உருவாக்கப்பட்டது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து விடலாம், ஏழை
பனக்காரனாகிவிடலாம், ஆனால் தாழ்த்தப்பட்டவர் ஆதிக்கம் செலுத்த முடியுமா? அவர்களுக்கும் சம உரிமை வேண்டும், சமமான போட்டிக்களம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது இட ஒதுக்கீடு (கொள்கை அளவில்).
சில ஓட்டைகள் இருந்தாலும் இப்போதுள்ள முறை சிறந்த முறையே. இதில் களைய வேண்டிய குறைகள் நிறைய உள்ளன.
1. இந்த முறையிலேயெ கிராமப்புறம், நகரம் என்று உள்-ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
2. BC சான்றிதழ் வாங்கிக் கொண்டு இந்த ஒதுக்கீட்டின் பலனை திருட்டுத் தனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
3. ஒட்டு மொத்த ஒதுக்கீட்டு முறைக்கும் ஒரு 'Exit criteria' வைக்க வேண்டும். இந்த இலக்கை எட்டிவிட்டால் இனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும். இதை அறிவிக்காத வரை இட ஒதுக்கீட்டின் பெரும் பயன் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கே போய் சேரும்.
இந்த பதிலை என் பதிவிலும் இட்டிருக்கிறேன்.
http://vanampadi.blogspot.com/2005/06/blog-post_112003968980778072.html
போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!
இட ஒதுக்கீடு பிரச்னை இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டது. அரசாங்கத்தில் வேலைக்கு ஆள் நியமனத் தடை இருக்கிறது. சமமான கல்வி, சமமான வாய்ப்பு, சமூக நலனில் அரசின் பங்கு போன்ற எண்ணற்ற விஷயங்களில் அரசுகள் கைகழுவத் தொடங்கி விட்டன. இந்நிலையில்தான் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம் எழுகிறது. சமூகநீதி என்ற பார்வையில் நாம் பார்க்காத வரையில் ஒருவரது வாழ்க்கையை மற்றவர் பறித்த உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்க முடியாது. அதேசமயம் வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை நிகழ்காலத்தில் சரிசெய்ய முற்படுவதிலும் பிரச்னைகள் இருக்கின்றன என்றே புரிந்து கொள்ள முடிகிறது.
தகுதியும் திறமையும் கிராமங்களில் இல்லை என்ற வாதமெல்லாம் எங்கும் எடுபடாது. நகர்ப்புறங்களிலும் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதும் சரியல்ல. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அது கோபாலபுரம் டிஏவி, எஸ்பிஓஏ, பிஎஸ் போன்ற பள்ளிகளைப் போல் ஒருநாளும் வரப்போவதில்லை.
ராஜிவ்காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை மாணவர்களை பல கூறுகளாகப் பிரித்தது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அதிக திறன் கொண்டோரைத் தயாரிக்கும் கல்வி, குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி, கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்வதுடன் ஒரு கல்வி என்று.. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் எந்த சமூகத்திலும் சமத்துவத்தை விரும்புவதில்லை.
அந்த அடிப்படைப் பிரச்னைகளை விட்டுவிட்டு அந்தக் கொள்ளைக்கெல்லாம் உடனிருந்து ஆதரவு கொடுத்துவிட்டு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தவுடன் இடஒதுக்கீடு, சமூகநீதி, கிராமப்புற மாணவர் நலன் என்று உதட்டளவில் பேசித் திரிபவர்களை –வலைஞர்களே, இனம் கண்டு கொள்ளுங்கள் !
போலி நளன்களைக் கண்டு ஏமாறும் தமயந்திகள் அல்ல என்பதை உணர்த்துங்கள்!!
http://theruththondan.blogspot.com
இட ஒதுக்கீடு பிரச்னை இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டது. அரசாங்கத்தில் வேலைக்கு ஆள் நியமனத் தடை இருக்கிறது. சமமான கல்வி, சமமான வாய்ப்பு, சமூக நலனில் அரசின் பங்கு போன்ற எண்ணற்ற விஷயங்களில் அரசுகள் கைகழுவத் தொடங்கி விட்டன. இந்நிலையில்தான் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம் எழுகிறது. சமூகநீதி என்ற பார்வையில் நாம் பார்க்காத வரையில் ஒருவரது வாழ்க்கையை மற்றவர் பறித்த உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்க முடியாது. அதேசமயம் வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை நிகழ்காலத்தில் சரிசெய்ய முற்படுவதிலும் பிரச்னைகள் இருக்கின்றன என்றே புரிந்து கொள்ள முடிகிறது.
தகுதியும் திறமையும் கிராமங்களில் இல்லை என்ற வாதமெல்லாம் எங்கும் எடுபடாது. நகர்ப்புறங்களிலும் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதும் சரியல்ல. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அது கோபாலபுரம் டிஏவி, எஸ்பிஓஏ, பிஎஸ் போன்ற பள்ளிகளைப் போல் ஒருநாளும் வரப்போவதில்லை.
ராஜிவ்காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை மாணவர்களை பல கூறுகளாகப் பிரித்தது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அதிக திறன் கொண்டோரைத் தயாரிக்கும் கல்வி, குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி, கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்வதுடன் ஒரு கல்வி என்று.. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் எந்த சமூகத்திலும் சமத்துவத்தை விரும்புவதில்லை.
அந்த அடிப்படைப் பிரச்னைகளை விட்டுவிட்டு அந்தக் கொள்ளைக்கெல்லாம் உடனிருந்து ஆதரவு கொடுத்துவிட்டு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தவுடன் இடஒதுக்கீடு, சமூகநீதி, கிராமப்புற மாணவர் நலன் என்று உதட்டளவில் பேசித் திரிபவர்களை –வலைஞர்களே, இனம் கண்டு கொள்ளுங்கள் !
போலி நளன்களைக் கண்டு ஏமாறும் தமயந்திகள் அல்ல என்பதை உணர்த்துங்கள்!!
http://theruththondan.blogspot.com
கருத்து சொன்னவங்களுக்கு நன்றி.
இதுல தெருத்தொண்டன் என்ன சொல்லவாராருன்னு புரியலை.
குழலி நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் இடஒதுக்கீடு அனுபவிக்கும் சாதியில் உள்ளவர்கள் வீட்டில் எல்லாம் சூழல் சரியில்லை என்பது மாதிரி உள்ளது.
நீங்கள் சொல்லும் காரணம் எல்லா சாதிக்காரர்களுக்கும் பொருந்தும். அப்படி பார்க்கும் போது FC, BC, MBC, SC, ST என்று பிரிக்க வேண்டியது தானே, பின் ஏன் இந்த FC-கு பதில் OC என்று வைத்துள்ளார்கள்? இடஒதுக்கீடு அனுபவிக்கும் மாணவன் நல்ல பதிப்பெண் எடுத்திருந்தால் அவன் இந்த OC கோட்டாவில் வந்துவிடுவான். ஆக அவன் ஒரு FC மாணவனின் இடத்தை பிடிக்கிறான். இப்படி சாதிரீதியாக இடஒதுக்கீடு கொடுத்தால் அதிலும் பாரபட்சமில்லாமல் இருக்கலாம் அல்லவா? (இங்குதான் இந்த அரசியல்வாதிகளின் புத்தி தெரியும், திரும்பவும் ஊரு ரெண்டுபட்டால்...)
ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல் இதுதான்.
சுதர்சன் அவர்களே, எந்த திட்டத்தில் தான் ஓட்டையில்லை?
//கிராமம், நகரம் என்று வந்தால் எல்லோரும் கிராமத்திலே ஒரு ரேஷன் கார்ட் வைத்துக் கொண்டு அதில் நுழைய முயற்சிப்பர்.// இப்பொழுதெல்லாம் இந்த வேலைகள் குறைந்துள்ளது.
//ஆனால் தாழ்த்தப்பட்டவர் ஆதிக்கம் செலுத்த முடியுமா?// இப்பொழுது அவர்கள் ஆதிக்கம்தான் உள்ளது. படிப்பில் இட ஒதுக்கீடு, வேலையில் இடஒதுக்கீடு, பணி உயர்வில் இடஒதுக்கீடு...இத்தனையும் இருந்தும் இன்னமும் நாங்கள் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் ஒடுக்கப்படுகிறோம் என்று சொன்னால் எப்படி?
//BC சான்றிதழ் வாங்கிக் கொண்டு இந்த ஒதுக்கீட்டின் பலனை திருட்டுத் தனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும்.//
உண்மை, ஆமா அவர்களுக்கென்று தனியாக ஒரு இட ஒதுக்கீடு இருந்தால் இந்த வேலைகள் குறையுமல்லவா? சரி நீங்கள் சொல்லும் ஆதிக்க சாதிகள் தவிர BC, MBC -ல் உள்ளவர்கள் SC/ST சான்றிதள் வாங்கவில்லை என்கிறீர்களா? பழியை ஒரு சாரார் மீது மட்டும் போடாதீர்கள்.
//ஒட்டு மொத்த ஒதுக்கீட்டு முறைக்கும் ஒரு 'Exit criteria' வைக்க வேண்டும். இந்த இலக்கை எட்டிவிட்டால் இனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும். இதை அறிவிக்காத வரை இட ஒதுக்கீட்டின் பெரும் பயன் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கே போய் சேரும்.//
நீங்கள் சொல்லும் இந்த 'Exit criteria' முடிவு செய்வதற்கே 100 வருடங்கள் ஆகும் அல்லது ஆகலாம் அல்லது ஆகாமலும் போகலாம்?
//தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம் எழுகிறது.// அடமக்கா இது வேறையா?
இந்த பிரச்சனையெல்லாம் வேண்டாம்னுதான் நகர, கிராம ஒதுக்கீடு-னு சொன்னேன்.
என்ன மக்கா?
இதுல தெருத்தொண்டன் என்ன சொல்லவாராருன்னு புரியலை.
குழலி நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் இடஒதுக்கீடு அனுபவிக்கும் சாதியில் உள்ளவர்கள் வீட்டில் எல்லாம் சூழல் சரியில்லை என்பது மாதிரி உள்ளது.
நீங்கள் சொல்லும் காரணம் எல்லா சாதிக்காரர்களுக்கும் பொருந்தும். அப்படி பார்க்கும் போது FC, BC, MBC, SC, ST என்று பிரிக்க வேண்டியது தானே, பின் ஏன் இந்த FC-கு பதில் OC என்று வைத்துள்ளார்கள்? இடஒதுக்கீடு அனுபவிக்கும் மாணவன் நல்ல பதிப்பெண் எடுத்திருந்தால் அவன் இந்த OC கோட்டாவில் வந்துவிடுவான். ஆக அவன் ஒரு FC மாணவனின் இடத்தை பிடிக்கிறான். இப்படி சாதிரீதியாக இடஒதுக்கீடு கொடுத்தால் அதிலும் பாரபட்சமில்லாமல் இருக்கலாம் அல்லவா? (இங்குதான் இந்த அரசியல்வாதிகளின் புத்தி தெரியும், திரும்பவும் ஊரு ரெண்டுபட்டால்...)
ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல் இதுதான்.
சுதர்சன் அவர்களே, எந்த திட்டத்தில் தான் ஓட்டையில்லை?
//கிராமம், நகரம் என்று வந்தால் எல்லோரும் கிராமத்திலே ஒரு ரேஷன் கார்ட் வைத்துக் கொண்டு அதில் நுழைய முயற்சிப்பர்.// இப்பொழுதெல்லாம் இந்த வேலைகள் குறைந்துள்ளது.
//ஆனால் தாழ்த்தப்பட்டவர் ஆதிக்கம் செலுத்த முடியுமா?// இப்பொழுது அவர்கள் ஆதிக்கம்தான் உள்ளது. படிப்பில் இட ஒதுக்கீடு, வேலையில் இடஒதுக்கீடு, பணி உயர்வில் இடஒதுக்கீடு...இத்தனையும் இருந்தும் இன்னமும் நாங்கள் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் ஒடுக்கப்படுகிறோம் என்று சொன்னால் எப்படி?
//BC சான்றிதழ் வாங்கிக் கொண்டு இந்த ஒதுக்கீட்டின் பலனை திருட்டுத் தனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும்.//
உண்மை, ஆமா அவர்களுக்கென்று தனியாக ஒரு இட ஒதுக்கீடு இருந்தால் இந்த வேலைகள் குறையுமல்லவா? சரி நீங்கள் சொல்லும் ஆதிக்க சாதிகள் தவிர BC, MBC -ல் உள்ளவர்கள் SC/ST சான்றிதள் வாங்கவில்லை என்கிறீர்களா? பழியை ஒரு சாரார் மீது மட்டும் போடாதீர்கள்.
//ஒட்டு மொத்த ஒதுக்கீட்டு முறைக்கும் ஒரு 'Exit criteria' வைக்க வேண்டும். இந்த இலக்கை எட்டிவிட்டால் இனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும். இதை அறிவிக்காத வரை இட ஒதுக்கீட்டின் பெரும் பயன் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கே போய் சேரும்.//
நீங்கள் சொல்லும் இந்த 'Exit criteria' முடிவு செய்வதற்கே 100 வருடங்கள் ஆகும் அல்லது ஆகலாம் அல்லது ஆகாமலும் போகலாம்?
//தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம் எழுகிறது.// அடமக்கா இது வேறையா?
இந்த பிரச்சனையெல்லாம் வேண்டாம்னுதான் நகர, கிராம ஒதுக்கீடு-னு சொன்னேன்.
என்ன மக்கா?
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ
என்னுடைய ஐடெண்ட்டி திருடப்பட்டது விசயமாக
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
போலி டோண்டுவாக, போலி திருமலையாக பல இடங்களில் டகால்ட்டி வேலை செய்து கொண்டிருக்கும் நாய் பிறவி & பெயர் இல்லாத பிச்சை என் பெயரை வைத்தும் இன்று ஒரு காரியம் செய்தார். என்னுடைய இட்லி பதிவில் திருமலை என்பவர் பெயரில் அவர் சாதீ வெறி இருப்பவர் போல தோற்றத்தை உருவாக்கிவிட்டு போனார். நான் தொழில் நுட்பம் தெரியாத கபோதி என்ற நினைப்பு அந்த போலிக்கு.
புத்தகம் படித்து விட்டு டகால்ட்டி வேலையை காண்பிக்கும் அவருக்கே இந்த ஏத்தம் என்றால் மென்பொருளிலே ஊறிப் போய் இந்த web security -களைப் பற்றி எத்தனை செமினார்கள், பயிற்சி பட்டறைகள் நடத்தியிருக்கும் எனக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கும். Identity theft-ஐ நிரூபித்து ஸைபர் கிரைமில் தெரிவித்தால் அந்த போலியை நொங்கு எடுத்து விடுவார்கள்.
என்னுடைய மின்னஞ்சல் முகவரி திருடப்பட்டு திருமலை அவர்களுக்கு நான் எழுதியது போல மின்னஞ்சல் போனது. நல்லவேளை அவர் என்னிடம் விளக்கம் கேட்டு இருந்தார். கீழே படத்தை க்ளிக்கி பெரிசாக்கி பாருங்கள்.

அது என்னுடைய பெயரில் திருமலை என்பவருக்கு அனுப்பப்பட்ட ஒரு போலி மின்னஞ்சல். அந்த மின்னஞ்சலுக்கு கீழேயே http://www.indiasec.com/ இந்த முகவரி இருக்கிறது. அந்த முகவரியினூடே சென்று பார்த்தால் http://www.indiasec.com/fakemail/sendfake.html இது வரும். இதிலிருந்து யாருக்கும் யார் பெயரிலும் போலியாக மின்னஞ்சல் அனுப்பலாம். இதே முறையில் என் பெயரில் திருமலைக்கு நான் அவரைத் திட்டியதாக அனுப்பியிருந்தார் குறி இல்லாத கபோதி.
என் பெயரை கெடுக்க நினைக்கும் அந்த போலிக்கு கடைசியாக ஒரு எச்சரிக்கை "என் பெயரை வைத்து விளையாடுவாயா விளையாடு. எப்படி நீ வந்தாலும் என்னால் இனம் காண முடியும். நான் எதற்கும் சளைக்கிறவனில்லை".
லாலலலா...லாலலலா..லாலலலா....
டியர் ரீடர்ஸ், உங்களுக்கு என் பெயரில் மின்னஞ்சல் மோசமாக வந்திருந்தால் என்னை உடனே njvijay at yahoo dot com-ல் தொடர்புக் கொள்க (போலியாக அல்ல).
புத்தகம் படித்து விட்டு டகால்ட்டி வேலையை காண்பிக்கும் அவருக்கே இந்த ஏத்தம் என்றால் மென்பொருளிலே ஊறிப் போய் இந்த web security -களைப் பற்றி எத்தனை செமினார்கள், பயிற்சி பட்டறைகள் நடத்தியிருக்கும் எனக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கும். Identity theft-ஐ நிரூபித்து ஸைபர் கிரைமில் தெரிவித்தால் அந்த போலியை நொங்கு எடுத்து விடுவார்கள்.
என்னுடைய மின்னஞ்சல் முகவரி திருடப்பட்டு திருமலை அவர்களுக்கு நான் எழுதியது போல மின்னஞ்சல் போனது. நல்லவேளை அவர் என்னிடம் விளக்கம் கேட்டு இருந்தார். கீழே படத்தை க்ளிக்கி பெரிசாக்கி பாருங்கள்.
அது என்னுடைய பெயரில் திருமலை என்பவருக்கு அனுப்பப்பட்ட ஒரு போலி மின்னஞ்சல். அந்த மின்னஞ்சலுக்கு கீழேயே http://www.indiasec.com/ இந்த முகவரி இருக்கிறது. அந்த முகவரியினூடே சென்று பார்த்தால் http://www.indiasec.com/fakemail/sendfake.html இது வரும். இதிலிருந்து யாருக்கும் யார் பெயரிலும் போலியாக மின்னஞ்சல் அனுப்பலாம். இதே முறையில் என் பெயரில் திருமலைக்கு நான் அவரைத் திட்டியதாக அனுப்பியிருந்தார் குறி இல்லாத கபோதி.
என் பெயரை கெடுக்க நினைக்கும் அந்த போலிக்கு கடைசியாக ஒரு எச்சரிக்கை "என் பெயரை வைத்து விளையாடுவாயா விளையாடு. எப்படி நீ வந்தாலும் என்னால் இனம் காண முடியும். நான் எதற்கும் சளைக்கிறவனில்லை".
லாலலலா...லாலலலா..லாலலலா....
டியர் ரீடர்ஸ், உங்களுக்கு என் பெயரில் மின்னஞ்சல் மோசமாக வந்திருந்தால் என்னை உடனே njvijay at yahoo dot com-ல் தொடர்புக் கொள்க (போலியாக அல்ல).
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
டைனமிக் ஐபி, வெப் ரேப்பர், அனானிமஸ் மின்னஞ்சல், indiansec.com என்று சுற்றி வளைத்து டகால்ட்டி வேலை காட்டினாலும் என்னுடைய ip sniffer சுத்தி சுத்தி கடைசியாக கை காட்டும் சில விவரங்கள் கீழே...
Country Flag County / State / Province : MELAKA
City: MALACCA
ISO Country Code : MY
Country ISP : MALAYSIA ADSL-STREAMYX-TMNET
அது டைனமிக் ஐபி ஆகையால் பல ஐபிகளை காண்பிக்கும் என்பதால் ஐபியை நான் இங்கே கொடுக்க்கவில்லை + வெப் ரேப்பர் வழியாக போனால் ஐபியை அது காண்பிக்காது. அப்படியிருந்தும் வெப் ரேப்பரில் சில ஓட்டைகள் உண்டு.
Country Flag County / State / Province : MELAKA
City: MALACCA
ISO Country Code : MY
Country ISP : MALAYSIA ADSL-STREAMYX-TMNET
அது டைனமிக் ஐபி ஆகையால் பல ஐபிகளை காண்பிக்கும் என்பதால் ஐபியை நான் இங்கே கொடுக்க்கவில்லை + வெப் ரேப்பர் வழியாக போனால் ஐபியை அது காண்பிக்காது. அப்படியிருந்தும் வெப் ரேப்பரில் சில ஓட்டைகள் உண்டு.
அல்வா, அந்த அசாமியின் இந்த விளையாட்டால், தற்காலிக குழப்பத்தை தவிர, அவர் நினைக்கும் எதுவும் நிறைவேறப்போவதில்லை. ஆனால் திருமலை ஒரு 'சாதி வெறியர்' என்பதில் என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை. இதை ஒரு கயவன் சொன்னதாலேயே பொய்யாகிவிடாது. இந்த ஆசாமியின் கயமைத்தனமான வேலையால் இது போன்ற சில உண்மைகள் மழுங்கி போகக்கூடும். இதைக்கூட உணராத முட்டாளாய் அவர் இருக்கிறார்.
மேலே உள்ளதை எழுதியது நான்தான். அதை தெளிவாக்க என் பதிவிலும் இதை இடுகிறேன். (பொதுவாய் என் எல்லா பின்னூட்டங்களும் என் பதிவில் இருக்கும்.)
அடங்கொக்கா மக்கா....சரி இந்த மாதிரி மலாக்கால இருந்து ஒரு அனாமத்து வந்து எல்.எல்.தாசு பதிவுல பின்னூட்டமிட்டதா சொன்னாரு. அவர்கிட்ட ஐபி வாங்கிப்பாரு இரண்டும் ஒன்னா இருந்தா அப்புறம் மலாக்கால யாரு இருக்கானு பாக்கலாம். அப்ப அந்த நியூயார்க் ஆளு யாரு?
ரோசா அண்ணாச்சி,
//திருமலை ஒரு 'சாதி வெறியர்' என்பதில் என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை. இதை ஒரு கயவன் சொன்னதாலேயே பொய்யாகிவிடாது//
அந்த கயவன் நேருக்கு நேராய் அவரிடம் மோதிக் கொள்ளட்டுமே என்னுடைய பெயரை அனாவசியமாக பயன்படுத்தவதால் தான் எனக்கு எரிச்சலாக இருக்கிறது. முகம் கொடுத்து எதிர்க்க தெரியாதவர்களை என்னவென்று சொல்வது.அதுவும் கோழைத்தனமாக ஒருவரின் பெயரை பயன்படுத்தி. அது கூட ஒருவருடைய ஐடெண்டியை திருடி.... சுத்த கயவாளி தனமாக இருக்கிறது.
ஏற்கனவே காசியின் ஐடியை திருடியாகிவிட்டது. உங்கள் ஐடி கூட திருடப்படலாம் என்பதை உசார் படுத்த தான் இந்த பதிவு தலீவா.
//திருமலை ஒரு 'சாதி வெறியர்' என்பதில் என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை. இதை ஒரு கயவன் சொன்னதாலேயே பொய்யாகிவிடாது//
அந்த கயவன் நேருக்கு நேராய் அவரிடம் மோதிக் கொள்ளட்டுமே என்னுடைய பெயரை அனாவசியமாக பயன்படுத்தவதால் தான் எனக்கு எரிச்சலாக இருக்கிறது. முகம் கொடுத்து எதிர்க்க தெரியாதவர்களை என்னவென்று சொல்வது.அதுவும் கோழைத்தனமாக ஒருவரின் பெயரை பயன்படுத்தி. அது கூட ஒருவருடைய ஐடெண்டியை திருடி.... சுத்த கயவாளி தனமாக இருக்கிறது.
ஏற்கனவே காசியின் ஐடியை திருடியாகிவிட்டது. உங்கள் ஐடி கூட திருடப்படலாம் என்பதை உசார் படுத்த தான் இந்த பதிவு தலீவா.
விஜய், நீங்கள் சொல்வதை நான் ஒப்புகொள்ளத்தான் செய்கிறேன். என் பெயரில் ஒருவன் போலிப் பின்னூட்டமிட்டபோது நான் சொன்ன' உயிரினங்களில் இழிந்த ஒன்று' என்ற வர்ணணை இந்த சாமிக்கும் நிச்சயம் பொருந்தும். ஆனால் இந்த அசாமியின் செயல்களால் மட்டும் சில கருத்துக்கள் நியாயமாவதையும், சில கருத்துக்களின் உண்மைத்தனமை மழுங்கடைக்க படுவ்தையும் மட்டுமே நான் குறிப்பிட்டேன்.
விஜய் அவர்களே, நீங்கள் எவ்வளவுதான் கூறினாலும் அனானி பின்னூட்டங்கள் விஷயத்தில் என் மனது சமாதானம் அடைய மாட்டேன் என்கிறது. உங்களை பொருத்தவரை நீங்கள் போலியை உடனே கண்டுபிடித்து விடுவீர்கள் என்பதில் ஐயமில்லை என்றாலும், நான் கவலைப் படுவது உங்கள் பதிவில் வரும் போலி டோண்டுவின் பின்னூட்டங்களை நம்பி விடும் மற்றவர்களை குறித்தேயாகும். இதில் எல்லோரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டது நானே என்பது எல்லோருக்கும் தெரியும்.
இவ்வளவு நடந்த பிறகும் மணிக்கூண்டு பதிவில் மூக்கு சுந்தர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு எனக்கு "சூடான" எதிர்வினை கொடுத்தார். அப்பின்னுட்டம் 10 மணி நேரம் அப்படியே இருந்திருக்கிறது. நான்தான் அசிங்கப்பட்டேன். உண்மை தெரிந்த பிறகும் டோண்டு சாதாரணமாக இப்படி எழுதக் கூடியவர் என்பதால் இதை நம்பினோம் போல என்று சிலர் பேசினர். அதில் ஒருவர் போலி டோண்டுவிடம் பொறுமை காத்திருந்தால் உண்மை டோண்டுவே போலி கூறியதை எழுதியிருப்பார் என்று வேறு அங்கலாய்த்தார். இதெல்லாம் எனக்கு தேவையா?
மறுபடியும் உங்களைக் கேட்டு கொள்கிறேன். அனானிப் பின்னூட்டங்களை உங்கள் பதிவில் செயலிழக்கச் செய்யுங்கள். திருடன் இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதுதான் புத்திசாலித்தனம். சாவி தொலைந்து விடும் என அஞ்சி சிலர் வீட்டுக்கு முன்னே மிதியடியின் கீழ் சாவியை போட்டு வைப்பது போல இருக்கிறது இப்போதைய நிலை.
வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப் பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்
இவ்வளவு நடந்த பிறகும் மணிக்கூண்டு பதிவில் மூக்கு சுந்தர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு எனக்கு "சூடான" எதிர்வினை கொடுத்தார். அப்பின்னுட்டம் 10 மணி நேரம் அப்படியே இருந்திருக்கிறது. நான்தான் அசிங்கப்பட்டேன். உண்மை தெரிந்த பிறகும் டோண்டு சாதாரணமாக இப்படி எழுதக் கூடியவர் என்பதால் இதை நம்பினோம் போல என்று சிலர் பேசினர். அதில் ஒருவர் போலி டோண்டுவிடம் பொறுமை காத்திருந்தால் உண்மை டோண்டுவே போலி கூறியதை எழுதியிருப்பார் என்று வேறு அங்கலாய்த்தார். இதெல்லாம் எனக்கு தேவையா?
மறுபடியும் உங்களைக் கேட்டு கொள்கிறேன். அனானிப் பின்னூட்டங்களை உங்கள் பதிவில் செயலிழக்கச் செய்யுங்கள். திருடன் இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதுதான் புத்திசாலித்தனம். சாவி தொலைந்து விடும் என அஞ்சி சிலர் வீட்டுக்கு முன்னே மிதியடியின் கீழ் சாவியை போட்டு வைப்பது போல இருக்கிறது இப்போதைய நிலை.
வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப் பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி ரோசா. நீங்கள் சொல்வது உண்மைகூட. சொல்லும் கருத்தில் உண்மையிருக்கும் பட்சத்தில் நேருக்கு நேர் நின்று "உச்சி மீது வான் இடிந்து விழுந்தாலும்" எதிர்ப்பவர்கள் தான் ஆண்மையுள்ளவர்கள். அதை விட்டு விட்டு அடுத்தவர் ஐடியை திருடி வாழும் போது உண்மைகள் மழுங்கடிக்கப்பட்டு போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
//அனானிப் பின்னூட்டங்களை உங்கள் பதிவில் செயலிழக்கச் செய்யுங்கள். திருடன் இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதுதான் புத்திசாலித்தனம். சாவி தொலைந்து விடும் என அஞ்சி சிலர் வீட்டுக்கு முன்னே மிதியடியின் கீழ் சாவியை போட்டு வைப்பது போல இருக்கிறது இப்போதைய நிலை.//
கொஞ்ச நாள் பொறுங்களேன்.
கொஞ்ச நாள் பொறுங்களேன்.
Dondu ..அவர் யார் தெரியும் ந்னா ஏன் சும்மா இருக்கீஙங்க ? மற்றவஙக எதுக்கு தேடி க்ண்டு பிடிக்கணும் ? யாருண்ணு சொல்ல வேண்டியது தானே ?
வருத்தப்படுகிறேன் விஜய். இதுபோன்று அங்குமிங்கும் ஒரே பேச்சாகி இப்போதெல்லாம், வலைப்பதிவுப்பக்கம் வருவதற்கே யோசனையாய் இருக்கிறது.
தெரியாத்தனமா இன்று குப்பையைப் பார்த்தால் யாரோ என்னோட குப்பை-யில் பைபிள் சம்பந்தமா... விக்க ஆரம்பிச்சுட்டாங்க...
அவங்கள எப்படி காலி பண்ணச்சொல்றது:(
யாராவது தாதா இருந்த சொல்லுங்களேன்.
தெரியாத்தனமா இன்று குப்பையைப் பார்த்தால் யாரோ என்னோட குப்பை-யில் பைபிள் சம்பந்தமா... விக்க ஆரம்பிச்சுட்டாங்க...
அவங்கள எப்படி காலி பண்ணச்சொல்றது:(
யாராவது தாதா இருந்த சொல்லுங்களேன்.
சே ! ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இந்த டூப்ளிகேட் dondu !
இவ்ளோ பேர் திட்டியும் இந்த டூப் dondu திருந்தாவிட்டால் ---
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்..
வீ எம்
இவ்ளோ பேர் திட்டியும் இந்த டூப் dondu திருந்தாவிட்டால் ---
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்..
வீ எம்
மிஸ்டர் பொறம்போக்கு ஒருவர் என் பெயரிலே பின்னூட்டிவிட்டு போனார். திருநெல்வேலிக்கே அல்வாவா? நான் விட்டதாக என் பெயரில் வந்த பின்னூட்டம் தூக்கப்பட்டது. பெஸ்ட் லக் நெக்ஸ் டைம்.
இந்த நுட்ப அறிவை நம்மெல்லோரும் பயன் பெறும் வகையில் கட்டுரைகளாகப் பாடங்களாகச் செய்யுங்களேன் விஜேய்!ரொம்ப நல்ல விடயம்.விஜேய் அப்படியே டோண்டுவைக் கருவறுக்கும் போலி டோண்டுவைச் சபைக்கு இழுத்து வாருங்கள்.
விஜய்,
தமிழ் வலைப்பதிவுகளில் வரும் இதுபோன்ற ஐபி-க்களையும் ( அது டைனமிக் ஐபி ஆக இருந்தாலும்), அது வரும் ஊர்களையும், போலி பின்னூட்டங்களையும் பட்டியலிட தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பது மிகப் பயனுள்ளதாய் இருக்கும் என்பது எனது எண்ணம்.
தமிழ் வலைப்பதிவுகளில் வரும் இதுபோன்ற ஐபி-க்களையும் ( அது டைனமிக் ஐபி ஆக இருந்தாலும்), அது வரும் ஊர்களையும், போலி பின்னூட்டங்களையும் பட்டியலிட தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பது மிகப் பயனுள்ளதாய் இருக்கும் என்பது எனது எண்ணம்.
ஹி ஹி ஹி ஹி... எவ்ளோ நேரம் தான் அந்த பனாதி பயலுவோ என் பெயரை திருடி பின்னூட்டம் கொடுக்க முடியும். மிஞ்சி மிஞ்சி போன காலையிலே 8 மணியிலேயிருந்து நைட்டு அதிகபட்சம் 12 மணி வரை தான் பின்னூடமிடுவார்(சிங்கப்பூர்/மலேசியா நேரப்படி). நானும் இரவில் அதிக நேரம் முழித்துக் கொண்டிருப்பவன்.
அவருடைய நேரக்கணக்கிலும் IP sniffer போடப்பட்டுள்ளது. அவருடைய அலுவலகம் முகவரியும் கூடிய சீக்கிரம் கையில் கிடைக்கும்.
கணிசமான ஐபி தகவல்கள் சேர்ந்துள்ளதால் அனானிமஸ் பின்னூட்டம் விடுவதை தூக்கியாச்சி.
அவருடைய நேரக்கணக்கிலும் IP sniffer போடப்பட்டுள்ளது. அவருடைய அலுவலகம் முகவரியும் கூடிய சீக்கிரம் கையில் கிடைக்கும்.
கணிசமான ஐபி தகவல்கள் சேர்ந்துள்ளதால் அனானிமஸ் பின்னூட்டம் விடுவதை தூக்கியாச்சி.
செட்டிங்ஸ் எதோ மாற்ற போய் ஏதோ ஆகிவிட்டது. செட்டிங்ஸ் உடனே எஃபக்டுக்கு வரமாட்டேங்கிறது. நேரம் கழித்து தான் எபஃடுக்கு வருவார்.
எங்கே போலியை காணோம். ஓ தூங்கிட்டு இருப்பாரோ??? ம்ம்.... எனிவே மிஸ்டர் போலி இன்னும் பொறம்போக்காக என் பதிவில் நீங்கள் பின்னூட்டம் விடலாம். வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கமான் மிஸ்டர் பொறம்போக்கு.
எனக்காக இவ்வளவும் செய்யும் உங்களுக்கு மிக்க நன்றி. அனானிமஸ் பின்னூட்டத்தினை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள் என்று இப்போது தெரிந்தது. ஐப்பிக்கள் நிறைய சேர்ந்ததும் பேங்கில் போடவும்.
வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
போலி டோண்டுவின் முட்டாள்தனம் அளவுக்கதிகமாகப் போகிறது. அவர் எழுதுகிறார். "எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்"
வைத்து பாருங்கள். அவர் குட்டு வெளிப்படும். இம்மாதிரி என் படத்தையும் நகலெடுப்பார் என எதிர்பார்த்தேன். இப்போது சக வலைபதிவர்கள் எலிக்குட்டியின் உபயோகத்தையே நாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
மேலும் இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
வைத்து பாருங்கள். அவர் குட்டு வெளிப்படும். இம்மாதிரி என் படத்தையும் நகலெடுப்பார் என எதிர்பார்த்தேன். இப்போது சக வலைபதிவர்கள் எலிக்குட்டியின் உபயோகத்தையே நாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
மேலும் இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
//ஐப்பிக்கள் நிறைய சேர்ந்ததும் பேங்கில் போடவும்.//
முட்டாள் போலி, எல்லோரும் ஐபி சேர்த்திருக்குறோம். ஏன் தெரியுமா? உன் வாயில மொத்தமா போட்டு உன்னை புதைக்க.
முட்டாள் போலி, எல்லோரும் ஐபி சேர்த்திருக்குறோம். ஏன் தெரியுமா? உன் வாயில மொத்தமா போட்டு உன்னை புதைக்க.
Vijay, Just saw my posting again now. The smile i put, supposed to be a sad{:-(} one. Hope you wouldn't think bad of me. Sorry.
அட டிசே, நீங்க :-) இப்படி போட்டதே நீங்க சொல்லி தான் பார்த்தேன். தப்ப நினைக்கிறதுக்கு ஒன்னுமே இல்லை.
அவனவன் ஐடியை திருடுறான் நீங்க என்னடா என்றால் :-( போடுறதுக்கு பதிலா :-) இப்பிடி போட்டேன்னு வருந்துறீங்க. :-) போட்டாலும் சரி :-( இப்படி போட்டாலும் சரி உங்க உள்ளம் எனக்கு பளீச்சுன்னு புரியும்.
அவனவன் ஐடியை திருடுறான் நீங்க என்னடா என்றால் :-( போடுறதுக்கு பதிலா :-) இப்பிடி போட்டேன்னு வருந்துறீங்க. :-) போட்டாலும் சரி :-( இப்படி போட்டாலும் சரி உங்க உள்ளம் எனக்கு பளீச்சுன்னு புரியும்.
//தமிழ் வலைப்பதிவுகளில் வரும் இதுபோன்ற ஐபி-க்களையும் ( அது டைனமிக் ஐபி ஆக இருந்தாலும்), அது வரும் ஊர்களையும், போலி பின்னூட்டங்களையும் பட்டியலிட தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பது மிகப் பயனுள்ளதாய் இருக்கும் என்பது எனது எண்ணம்.//
http://www.navakrish.com/abuse_report/. An effort in this direction. But since then I have n't had any major comment abuses in my blog.. and so the database is not updated.
http://www.navakrish.com/abuse_report/. An effort in this direction. But since then I have n't had any major comment abuses in my blog.. and so the database is not updated.
நவன் அண்ணாச்சி,
நீங்கள் குறிப்பிட்ட அந்த பக்கத்தை நேற்று தான் பார்த்தேன். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை எனக்கு njvijay at yahoo dot com-க்கு அனுப்புறீங்களா? முடிந்தால் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் + உங்களுடைய தொலைபேசி எண்ணையும் அனுப்புங்களேன். முடிந்தால் இது விசயமாக இந்த வாரயிறுதியில் உங்களை அழைத்து பேசுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட அந்த பக்கத்தை நேற்று தான் பார்த்தேன். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை எனக்கு njvijay at yahoo dot com-க்கு அனுப்புறீங்களா? முடிந்தால் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் + உங்களுடைய தொலைபேசி எண்ணையும் அனுப்புங்களேன். முடிந்தால் இது விசயமாக இந்த வாரயிறுதியில் உங்களை அழைத்து பேசுகிறேன்.
அல்வா,
உங்கள் கோபம் நியாயமானது. ஆனால் திருமலைராஜனையோ அல்லது டோண்டுவையோ நல்லவர்கள் எனச் சொல்வது கேலிக்கூத்து!
பார்ப்பன வெறிய சிஷ்யகேடிகளில் முக்கியமானவர்கள் இவர்கள் இருவரும்.
இன்னும் ஒரு விடயம், உங்களைவிட ஞானம் அதிகமுள்ளவர் என நினைக்கிறேன் இந்த பீன்னூட்டங்கள் செய்பவர்கள்.
உங்கள் கோபம் நியாயமானது. ஆனால் திருமலைராஜனையோ அல்லது டோண்டுவையோ நல்லவர்கள் எனச் சொல்வது கேலிக்கூத்து!
பார்ப்பன வெறிய சிஷ்யகேடிகளில் முக்கியமானவர்கள் இவர்கள் இருவரும்.
இன்னும் ஒரு விடயம், உங்களைவிட ஞானம் அதிகமுள்ளவர் என நினைக்கிறேன் இந்த பீன்னூட்டங்கள் செய்பவர்கள்.
//இன்னும் ஒரு விடயம், உங்களைவிட ஞானம் அதிகமுள்ளவர் என நினைக்கிறேன் இந்த பீன்னூட்டங்கள் செய்பவர்கள். //
இந்த பீன்னூட்டங்கள் செய்பவர்கள் எதுவும் பிரம்மசூத்திரமோ,மலாக்கா சூத்திரமோ, மலேசியா சூத்திரமோ என்று தெரிந்துக் கொள்வீராக. பதிவு ஐடியும்,பிளாக்கர் ஐடியும் தெரிந்தால் எதையும் தாண்டாலம் என்பது யாருக்கும் தெரியும்.அப்படி தாண்டும் போது வெட்டப்பட்டிருக்கும் குழிகளில் விழலாம் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு வேலி தானே தாண்டியிருக்கிறீர்... இதுக்கே இப்படியா??? ஹா ஹா ஹ
இந்த பீன்னூட்டங்கள் செய்பவர்கள் எதுவும் பிரம்மசூத்திரமோ,மலாக்கா சூத்திரமோ, மலேசியா சூத்திரமோ என்று தெரிந்துக் கொள்வீராக. பதிவு ஐடியும்,பிளாக்கர் ஐடியும் தெரிந்தால் எதையும் தாண்டாலம் என்பது யாருக்கும் தெரியும்.அப்படி தாண்டும் போது வெட்டப்பட்டிருக்கும் குழிகளில் விழலாம் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு வேலி தானே தாண்டியிருக்கிறீர்... இதுக்கே இப்படியா??? ஹா ஹா ஹ
உலகத்தில் உள்ள எல்லா பார்ப்பனர்களையும் பிடித்து கட்டாய சாதி மாற்றம் செய்து தலித்துகளாக மாற்ற வேண்டும். எங்கள் திருமாவளவன் தலைமையில் ஒரே அணியாகத் திரள வேண்டும்.
விஜய்...தரமான எழுத்தாளர்கள் சங்கமிக்கும் தமிழ்மணத்தில் சில போக்கிரிகளின் கைவரிசையினால் சமீபத்தில் இந்த பெயர் திருட்டு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான ஃபிராடுகள், மத துவேஷத்துடன் வெறி பிடித்து அலைவதால் அவர்கள் "சொறிந்து கொள்ள" இது நல்ல இடமாக இருக்கிறது.
எனது வேண்டுகோள்... எந்த சூழலிலும் பொறுமை இழந்து விடாமல் இருங்கள். நிதானம் இழந்து தரமற்ற வார்த்தைகளை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்பதே இத்திருடர்களின் நோக்கம்.
தமிழ்மணத்துடன் இணைந்து போலிகளை விரைவில் அடையாளம் காட்டுவோம்.
அன்புடன், சர்தார்
எனது வேண்டுகோள்... எந்த சூழலிலும் பொறுமை இழந்து விடாமல் இருங்கள். நிதானம் இழந்து தரமற்ற வார்த்தைகளை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்பதே இத்திருடர்களின் நோக்கம்.
தமிழ்மணத்துடன் இணைந்து போலிகளை விரைவில் அடையாளம் காட்டுவோம்.
அன்புடன், சர்தார்
ஊக்கமொழிக்கு நன்றி சர்தார். இந்த புல்லுருவி சிண்டு முடிச்சி விடுவதால் உண்மையறிந்து அமைதியாய் இருப்போம்.
உலகத்தில் உள்ள எல்லா பறையர்களையும் பிடித்து வந்து கட்டாய சாதிமாற்றம் செய்து பிராமணர்களாக மாற்றுவோம்.
அன்புள்ள நண்பர்களே,
மேலே 'மத்தளராயன்' என்ற புனைப்பெயரில் எழுத்தாளர் இரா.முருகன் இணைய குழுமத்தில் எழுதிவருகிறார். சிண்டு முடிக்கும் போக்கிரி அந்த பெயரை பயன்படுத்தி பின்னூட்டமிட்டிருக்கிறார். இரா.முருகன் அவர்களும் அது அவர்களின் பின்னூட்டமல்ல என்பதை தனிமின்னஞ்சலில் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலே 'மத்தளராயன்' என்ற பெயரில் இடப்பட்ட பின்னூட்டத்தை புறக்கணித்துவிடவும்.
அன்புடன் அல்வாசிட்டி.விஜய்.
மேலே 'மத்தளராயன்' என்ற புனைப்பெயரில் எழுத்தாளர் இரா.முருகன் இணைய குழுமத்தில் எழுதிவருகிறார். சிண்டு முடிக்கும் போக்கிரி அந்த பெயரை பயன்படுத்தி பின்னூட்டமிட்டிருக்கிறார். இரா.முருகன் அவர்களும் அது அவர்களின் பின்னூட்டமல்ல என்பதை தனிமின்னஞ்சலில் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலே 'மத்தளராயன்' என்ற பெயரில் இடப்பட்ட பின்னூட்டத்தை புறக்கணித்துவிடவும்.
அன்புடன் அல்வாசிட்டி.விஜய்.
மீண்டும் சிண்டு முடிக்கும் வேலை. 'பறையன்' என்ற பெயரில் ஒரு கருத்தும், 'எஸ்.கே' என்ற பெயரில் எதிர்கருத்தும் வைத்து கோள் மூட்டியிருக்கிறார். இரண்டும் அதே அனானிமஸின் வேலை. புறக்கணிக்கவும். அடுத்து யாரு பெயரிலே சார்.
இரவு இந்த பதிவின் பின்னூட்டம் தூக்கப்படும்.
இரவு இந்த பதிவின் பின்னூட்டம் தூக்கப்படும்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ





