<body><iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=9439067&amp;blogName=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%21%21%21%21%21&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLACK&amp;layoutType=CLASSIC&amp;homepageUrl=http%3A%2F%2Fhalwacity.blogspot.com%2F&amp;searchRoot=http%3A%2F%2Fhalwacity.blogspot.com%2Fsearch" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" title="Blogger Navigation and Search"></iframe> <div id="space-for-ie"></div> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

போய் வருகிறேன்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : அல்வாசிட்டி.விஜய்
ப்ளாக்கரிலிருந்து தற்காலிமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

எனக்கு பயிற்சிகளமாக இருந்த தமிழ்மணத்திற்கு நான் என்றும் கடன் பட்டவன். தமிழ்மணமும் அங்கிருக்கும் நல்ல உள்ளங்களும் உடல்நலமும் மனநலமும் என்றும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

சில நாள் வாசிப்பில் ஆழ்ந்திருக்கப்போகிறேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

தசையினை தீச்சுடினும்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : அல்வாசிட்டி.விஜய்
இன்று எனக்கு சிறிது மன அழுத்தம் தான். சில பதிவுகளில் பின்னூட்டங்கள் படித்தவர்களுக்கு தெரியும். அதிகம் பேசும் நிலையிலும் நான் இல்லை. மன அழுத்தம் அதிகரிக்கும் போதும் உள்ளம் குழம்பி தவிக்கும் போது எனக்கு ஊக்கம் தரும் ஒரே 'கட' உள் பாரதியின் பாடல் மட்டுமே. கீழே உள்ள ஃபிளாஷை தாயாரித்து அதில் படலுடன் லயித்து பாரதியுடன் ஒன்றியதில் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன்.















(எனது உள்ளமும் சரி, அந்த மெழுகுவர்த்தியும் சரி, பாடலும் சரி வேகமாய் தான் அடித்துக் கொள்கின்றன)

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்

வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
நிலசுமையென வாழ்ந்திட புரிகுவையோ

விசையுறு பந்தினைப் போல்
உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்

தித்தம் நவமென சுடர் தரும் உயிர்கேட்டேன்
தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
enna aachu vijay??!!

cheer up!!!!!! romba nalla paatu!!

Radha
 
அப்படிப்பட்ட பின்னூட்டங்களை குறைந்தபட்சம் அப்பதிவிலாவது தவிர்க்க 'Don't allow new comments' என்ற ப்ளாகர் வசதியையாவது பயன்படுத்தியிருக்கலாம். எந்தவொரு பதிவின் பின்னூட்டங்களும் இப்படி விபரீதமாகப் போகுமென்றால் அப்படி நிறுத்தலாம். விட்டுத் தள்ளுங்கள், போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. பாடலுக்கு நன்றி.
 
விஜய்
பெண்களை இவ்வளவு கேவலமாக பேசுவதை சமீப காலமாக காண்கிறேன். வருந்தாதீர்கள்.
 
நடந்தது என்னன்னு முழுசா எனக்கு தெரியலை...

இதுக்கு 2 வழிகள்..

1) பின்னூட்ட அமைப்பில் approval கொண்டு வருவது.
2) கண்டுக்காம நம்ம வேலைய பாத்துட்டு போயிட்டே இருக்கறது.
 
உடனிருக்கிறோம் தோழா,
உனக்கொரு தோளாக,
ஒருபோதும் கலங்காதே நீயாக,
வருவது வரட்டும்,
வல்லமை உன்னுடன் வளரட்டும்
தீமை வெந்து போகக்
காண்பாய் நீ கண்கூடாய்.

அன்புடன்,
ஜீவா.
 
அண்ணாச்சி எத பத்தி சொல்ராருன்னு புரியல, எதுக்கு ஒரு வாட்டி தமிழ்மணத்த கிண்டி பாக்க வேண்டியதுதான்...
-டண்டணக்கா
 
டேய் மக்கா,

எல்லாம் கண்ணனுக்கே..

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் கண்ணனுக்கே என்று விட்டுவிடுடா..

அல்வாசிட்டி அரசியலில் இது எல்லாம் சகஜமுனு விடுடா..
 
நீங்க குறிப்பிடுற அந்த ரெண்டு பதிவும் (இல்ல அதுக்கும் மேலயா) கோக்குமாக்கா போவுதுன்னு தெரிஞ்சவுடனேயே அதும் பக்காம் போறத நான் நிறுத்திட்டேன்... கூவத்துல குளிக்க முடியுமா சொல்லுங்க...
 
sarithaan!

ithukkellaam manasu paathippu adaiyalama ( I HAVE READ THOSE COMMENTS)?

antha koshtikku muthituchi.. eppa venumnaalum vedikkalaam!

take it easy machi!
 
என்ன விஜய்
"இதுவும் கடந்து போகும்"
விவேகானந்தரின் அறிவுரைகள் படியுங்கள்.
மனம் சற்று ஆறுதல் அடையும்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
எல என்ன? இதுக்கெல்லாம் அசந்தா எப்படி? சரி சீக்கிரமா முதல கறி சாப்பிடுரது பத்தி ஒரு பதிவு போடு மக்கா, இப்ப சிங்கையில் உணவு கொண்டாட்டம் நடக்குறதா கேள்வி?
 
இதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுக்காதீங்க விஜய்,
நாய் குலைத்து, நிலவுக்குத் தாழ்வு வருவதில்லை!
 
This post has been removed by a blog administrator.
 
விஜய்,

என்ன ஆச்சு? ஊருலே குழந்தையும், உங்க வீட்டுஅம்மாவும் சுகம்தானே?
மத்தவங்க பின்னூட்டத்தையெல்லாம் படிக்கறப்ப என்னவோ நடந்தமாதிரி இருக்கே. நான் எதையாவது மிஸ் செஞ்சுட்டேனா?

என்றும் அன்புடன்,
துளசியக்கா
 
விடுங்கனு சொல்வது சுலபம்தான்
இருந்தாலும் இதையெல்லாம் கணக்கிலெடுத்தால் மனசும் உடம்பும் தான் கெடும் விட்டுத்தள்ளுங்க
 
nam seytha thavRuthaan enna?
 
தாஸ், நாம் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். அனானிமஸ் யார் என்று ஐபியை தூக்கி நம் பதிவில் போட்டது மட்டும் தான்.
 
விஜய்,

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

மகாபாரதம் சொல்கிறது: தகுதியற்றவர்களோடு உறவோ, சண்டையோ வைத்துக் கொள்ளக்கூடாது.

when you fight with a pig in mud, you are getting dirty, but pig enjoys the mud.
 
This post has been removed by a blog administrator.
 
This post has been removed by a blog administrator.
 
This post has been removed by a blog administrator.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : சங்கர்
அன்புள்ள மக்களே,

நேற்று ஒரு இனிய அனுபவம். ஆமாம் இசையராஜாவின் "திருவாசகம் - இசை வேள்வி" கேட்க நேர்ந்த்து.. அப்படி அனந்த கண்ணீர் வந்துவிட்டது.. இன்னும் கேட்டேயிருக்கேன்.. காசு கொடுத்து வாங்கிய ஒலிபேழையில்..

இதற்கு விமர்சனம் எழுத வராலை நான்.. இதை மற்றவர்களும் விலைகொடுத்து (இதற்கு விலை கொடுக்கு முடியாது, இதை எழுத உதவிய ஒலிபேழைக்கு வேணா கொடுக்கலாம்) வாங்கி கேட்டு இன்புறுகுங்கள்

ஞான் பெற்ற இந்த இன்பம் பெறுக இவ்வையகம்...



மக்களே, இந்த சுட்டியை உங்கள் வலைப் பக்கங்களிலும் போட்டு, இந்த முயற்சிக்கு ஒரு ஊக்கமளியுங்கள்..

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
done...

-->> for those who're in US :: At this time we are seeking volunteers who can help with the distribution in their local cities starting July 2. If you can volunteer please send us an mail to: tisusa@NOSPAMgmail.com or call Dr. Sankar Kumar @ 919-413-3913. <<--
 
This post has been removed by a blog administrator.
 
மிக்க நன்றி சங்கர். இன்று இரவுக்குள் இந்த பேனரை ஹல்வாசிட்டி வலைப்பதிவில் சேர்த்து விடுகிறேன்.

சிங்கப்பூர் மக்களே, இந்த ஒலிப்பேழை அல்லது குறுந்தகடு சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்து விட்டதா என்று தெரியுமா? லிட்டில் இந்தியா பக்கம் 2 வாரமாக போக முடியவில்லை. ஒலி 96.8 எப்.எம்-ல் ஏதாவது அறிவித்திருந்தால் சொல்லுங்களேன்.
 
அல்வா,
நீங்கள் எங்கு வாங்கினீர்கள்?..நானும் தீவிர 'மொட்டை' ரசிகன் ..சிங்கை வந்ததும் முதல் வேலை இதுதான்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

பாடல்களும் பாடல்கள் வரியும்-2 (ராஜபார்வை)

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : அல்வாசிட்டி.விஜய்
இளையராஜவின் ஞானி உள்ளத்தில் மலர்ந்த இன்னொரு பூ 'ராஜபார்வை'. பாடலும் பாடல் வரிகளும் கொடுத்திருக்கிறேன். அந்த படத்தைப் பற்றி எழுத வேண்டுமென்ற ஆசையிருக்கிறது. ஆனால் அந்த படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் முழுவது ஞாபகமில்லை. 'அந்திமழை' பாடல் மாதவிக்காக கண் தெரியாத கமல்ஹாசன் டூயட் பாடுவது போல வரும். 'அழகில் அழகு' பாடல் வீட்டிற்கு வரும் மாதவியை காதல் மிகக் கொண்டு ஓவ்வொரு அங்கமாக கமல் தடவி வர்ணித்துப் பாடுவது போல வரும். மயக்கும் அந்த இரு பாடல்களையும் கேளுங்கள். இந்த பாடல்களை எழுதியவரும் கவிஞர் வைரமுத்து தான் என நினைக்கிறேன்.








பாடியவர்கள் : எஸ்.பி.பி & ஜானகி

ஆண்:

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

பெண்

தேனில் வண்டு முழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்

ஆண்

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளைமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

ஆண் : அந்திமழை பொழிகிறது
பெண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்கின்றது

பெண்:
நெஞ்சுக்கொரு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

பெண் : அந்திமழை பொழிகிறது
ஆண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெண் ; சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

----------------------------------------------

பாடியவர் : ஜேசுதாஸ்

(ஹம்மிங்)
அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு தேவதை

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்
அழகில் அழகு தேவதை

சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகில் அழகு தேவதை

பூ உலவும் கொடிகள் போல இடையை காண்கிறேன்
போக போக வாளைப் போல அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் உன் போல் பெண்ணில்லையே

அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அல்வாசிட்டி அண்ணாச்சியாரே.. நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு பதிவா?! ரொம்ப அநியாயம் சார் இது!

ரோம் நகரம் தீப்பிடிச்சு எறிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, அங்கே ஒரு பின்னூட்டத்திலே தமிழ் வளர்க்க பொராடிட்டிருக்காங்க.. நீங்க என்னடான்னா இருக்குற சுவடே தெரியாம இப்படி ஒரு பதிவு போடுறீங்க!
 
எங்கள் தலை, கொங்கு ராசா இந்த 'அழகில் அழகு தேவதை' பாட்டை ஏற்கெனவே ஓர் இரவில் கேட்டு, இங்கே அதைப் போட்டு, அதற்கு அல்வா சிட்டியாரே, நீரும் முதலாவதாக comment கொடுத்தீர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் !!

நான் சொல்ல வருவது இதுதான்:
எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம், ராசாவின் கலை அனுபவத்திற்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ராசா ராசாதான். :-)

- ஞானபீடம்
 
எப்ப ஊருக்குப் போறீங்க விஜய்?

ச்சும்மாத்தான் கேக்கறேன்.

என்றும் அன்புடன்,
அக்கா
 
என்னல மக்கா ஒரே பாட்டா போட்டு தாக்குர? சரி வேற ஏதும் நல்ல இனிமையான பாடல் வேணும்னா சொல்லு ;-) ???
 
விஜய்,
இளையராஜா மேல கமல்ஹாசன் கொண்டிருக்கிற ஆழமான பற்றுக்கு காரணம் இந்த மாதிரி பாடல்களை கேட்டா புரியுது!
 
அல்வா சிட்டி விஜய்,

அழகே அழகு பாடலை எழுதியவர் கண்ணதாசன்.( அங்கங்களை வர்ணிக்கும் பாடல்).

ஒரு அங்கம் கைகள் அறியாதது என்ற பாடல் வரிகளும், அதற்கு கமல்ஹாசனும், மாதவியும் தரும் முகபாவங்களும் மிகவும் பிரமாதம். சற்று பிசகினாலும் ஆபாசம் என பிறர் குரல் கொடுக்கும் ஆபத்திருக்கும் சங்கதியை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளார்கள்
 
மாயவரத்தாரே,

//அண்ணாச்சியாரே.. நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு பதிவா?! //

இதென்ன புதுசா ஒரு கேள்வி. என்னுடைய பதிவு வாரநாட்களில் பெரும்பான்மையாக இரவு 11:30 தாண்டி தான் இருக்கும்.தூக்கம் விற்று எழுதுவதால்...

//ரோம் நகரம் தீப்பிடிச்சு எறிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, அங்கே ஒரு பின்னூட்டத்திலே தமிழ் வளர்க்க பொராடிட்டிருக்காங்க//

யோவ் போங்கைய்யா உருப்படியா எதாச்சி வேலையிருந்த பாருங்கைய்யா.

மத்தப்படி மொட்டையின் இந்த பாட்டைப் பற்றி ஒன்னுமே சொல்லாம போன எப்படி?
 
ஞானபீடம்

//எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம், ராசாவின் கலை அனுபவத்திற்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். //

பொள்ளாச்சிகாரருக்கு மறுப்பு சொல்ல முடியுமா? ராசா ராசா தான்!!

அதெல்லாம் சரி ஆடியோல பாட்டு கேக்கலியா? பாட்டு எப்படி?
 
துளசியக்கா,

//எப்ப ஊருக்குப் போறீங்க விஜய்?//

கூடிய விரைவில் எதிர்பாருங்கள்

நியூசிக்கு வந்த கவனிப்பீங்கள்ள?
 
//என்னல மக்கா ஒரே பாட்டா போட்டு தாக்குர? சரி வேற ஏதும் நல்ல இனிமையான பாடல் வேணும்னா சொல்லு ;-) ??? //

மக்கா ஆடியோ சிடியை பூரா தாப்பு.
 
//இளையராஜா மேல கமல்ஹாசன் கொண்டிருக்கிற ஆழமான பற்றுக்கு காரணம் இந்த மாதிரி பாடல்களை கேட்டா புரியுது! //

ஜோ, இளையராஜா மீது கமலுக்கு மட்டுமா பற்று?
 
ராஜ்குமார்,

உங்க பின்னூட்டம் பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.

//அழகே அழகு பாடலை எழுதியவர் கண்ணதாசன்.( அங்கங்களை வர்ணிக்கும் பாடல்).//

நன்றி. ஆனால் அந்திமழை பாடல் வைரமுத்து தானோ?

//ஒரு அங்கம் கைகள் அறியாதது என்ற பாடல் வரிகளும், அதற்கு கமல்ஹாசனும், மாதவியும் தரும் முகபாவங்களும் மிகவும் பிரமாதம். சற்று பிசகினாலும் ஆபாசம் என பிறர் குரல் கொடுக்கும் ஆபத்திருக்கும் சங்கதியை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளார்கள் //

அந்த வரிகளை டிரான்ஸ்கிரிப்ட் பண்ணும் போது ஒரு நிமிடம் நீங்கள் சொன்னது என் மனதிற்குள் வந்து போனது. படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் காட்சி அதிகம் ஞாபகமில்லை. நல்ல தகவல். நன்றி.
 
இது என்ன சூப்பர் ஹிட்? இதை விட சூப்பர் ஹிட்டான மேட்டரெல்லாம் பார்க்க வேண்டுமா? மக்களே.. நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய ஒரே இடம்.. மாயவரத்தான் வலைப்பூ..!

இப்போது பரபரப்பான பார்வையில்..!!

நம்பர் 1 கொண்டாட்டம்.

மாயவரத்தான் வலைப்பூ... எப்பவுமே நம்பர் 1.
 
//இது என்ன சூப்பர் ஹிட்? இதை விட சூப்பர் ஹிட்டான மேட்டரெல்லாம் பார்க்க வேண்டுமா? மக்களே.. நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய ஒரே இடம்.. மாயவரத்தான் வலைப்பூ..! //

எத்தனை பேர் சார் கிளம்பியிருக்கீங்க இதுமாதிரி. வரவர வலைப்பதிவுகள் எல்லாம் குங்குமம் பத்திரிக்கை மாதிரி ஆகிபோச்சி. நம்பர் 1-ன்னு ஆளாளுக்கு சொல்ல ஆரம்பிச்சாட்டாங்கையா. விட்டா பனகல் பார்க்ல பேனர் தான் வைக்கனும் போல ஆளுங்களை சேர்க்க.
 
//போக போக **வாளைப்** போல அழகைக் காண்கிறேன்//

அய்யா சாமி அது **வாழை**. வாளைப் போல இருந்தா குத்தும்யா..:-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

பாடலும் பாடல் வரியும்-1

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : அல்வாசிட்டி.விஜய்
பாரதிராஜவின் 'நிழல்கள்' படம் ஒரு அருமையான படம். 3 இளைஞர்களின்('நிழல்கள்'ரவி,ராபர்ட் ராஜசேகர், சந்திரசேகர்) வாழ்க்கை போராட்டத்தையும், முக்கோண காதல் கதையையும் சுற்றி வரும் படம். இசை அமைப்பாளராக வேண்டுமென்று லட்சிய கனவு சந்திரசேகருக்கு, வேலை வாங்கி கொடுக்காத பட்டத்தை பட்டமாக பறக்கவிடுவார். கல்லூரி இளைஞராக ராபர்ட் ராஜசேகர் ஒரு பெண்ணை காதலிக்க, நிழல்கள் ரவியும் அதே பெண்ணை காதலிக்க ஒரு முக்கோணம் உருவாகிறது. ராபர்ட் ராஜசேகர் தனக்கென்று ஒரு உலகத்தில் லயித்து விடுவார். கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளவர். மனம் மயக்கும் மாலைப்பொழுதில் அவர் இந்த பாடல் வரிகளை பாடுவதாக படத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

திரைக்காக கவிஞர் வைரமுத்து முதன்முதலில் எழுதிய வைரவரிகளால் ஆனது இந்த பாடல். நம்ம மொட்டையின் இசையில் அந்த வரிகள் சேர்ந்து காலத்தால் அழியாத இந்த பாடல் உருவானது. எந்த இடத்தில் இந்த பாடலை கேட்டாலும் முழுப்பாடலையும் கேட்காமல் அந்த இடத்தை விட்டு நகர்வது கிடையாது. அவ்வளவாக என்னை ஆட்கொண்டிருக்கிறது அந்த பாடல். கீழே பாடலை கேட்க விண்டோஸ் மீடியா ப்ளேயரும், பாடல் வரிகளையும் கொடுத்திருக்கிறேன். இந்த மாதிரி வாரத்திற்கு ஓரிரு ஆடியோ ப்ளாக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். என்னை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு நீங்கள் மகிழ்வது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கும்.































*******************

ஹே ஹோ ஹிம் லலா

பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

ஹ்ம் ஹே ஹா ஓ ஹிம்ஹூம்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது


வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

*******************


நல்லா இருந்த/இல்லேன்னா ஒரு வரி பின்னூட்டத்துல சொல்லிட்டு போயிருங்க.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அன்புள்ள விஜய்,

இந்தப் பாடலுக்காகவே இப்படத்தைப் பார்க்கணுமுன்னு நினைச்சிருந்தேன். இப்பத்தான்
மார்ச் மாதம் சிங்கை வந்தப்ப அந்தப் படத்தை வாங்கற சந்தர்ப்பம் அமைஞ்சது.
படம் என்னவோ சுமார்தான். ஆனா இந்தப் பாட்டுதான்... அருமை!!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
"வானமகள் நாணுகிறாள்"
என்று வரவேண்டுமே
 
நன்றி துளசியக்கா.

சில விசயங்களுக்காக அந்த படம் எனக்கு பிடித்திருந்தது. முதல் விசயம் படத்தோடு கூடிய இளையராஜாவின் இசை. அனைத்து பாடல்களும் மிக மிக அருமையாக இருக்கும்.
 
//வசந்தன்(Vasanthan) said...
"வானமகள் நாணுகிறாள்"
என்று வரவேண்டுமே //

சுட்டிகாட்டியமைக்கு நன்றி வசந்தன். அந்த வரியை மாற்றி விட்டேன். டிரன்ஸ்கிரிப்ஷன் எரர் :-)
 
அது வெறும் ராஜசேகர் என்று நினைக்கிறேன் (One flew over the cukoo's nestஐ மனசுக்குள் மத்தாப்பு என்று ராபர்ட்-ராஜசேகர் சுடுவதற்கு முன் - அதே ராஜசேகர் தானே இது?).
 
//அது வெறும் ராஜசேகர் என்று நினைக்கிறேன் //

மாண்டீ ராஜசேகராய் தான் இருக்குமென நினைக்கிறேன். எழுதும் போது ஒரு ஆளா இல்லை இரு வேறு ஆளா என்று குழப்பமாக இருந்தது.

//One flew over the cukoo's nestஐ மனசுக்குள் மத்தாப்பு என்று ராபர்ட்-ராஜசேகர் சுடுவதற்கு முன் - அதே ராஜசேகர் தானே இது?). //

அதே அதே

தற்போது அவரை 'மைடியர் பூதம்' டிவி சீரியலில் பார்த்த ஞாபகம். டைட்டில் கார்டை கவனிக்கிறேன்.
 
என்கிட்டே இந்த பாட்டு இருந்தாலும் அல்வாசிட்டி ஸ்பீக்கர்ல எப்படித்தான் இருக்குது பாக்கலாம்ன்னு க்ளிக் பண்ணினா.... ஆர்டிஸ்ட்: விஜய்குமார், காப்பிரைட் அல்வாசிட்டி... ஆனாலும் இது டூமச்யா யோவ்... அப்புறம் பாட்டு லேசா வேகமா பாடுற மாதிரி ஒரு பீலிங்
 
தலீவர் முகமூடி,

முதன் முதலில் விண்டோஸ் மீடியா என்கோடர் பயன்படுத்துனேன். அந்த காப்பிரைட் மற்றும் மற்ற மேட்டர் எல்லாம் தெரியாமல் போட்டுவிட்டேன். அதை வலையேற்றிய பிறகு தான் கவனித்தேன். திரும்ப அழித்து பிறகு டயல் அப்பில் ஏற்றுவது முடியாத காரியம் ஆகையால் விட்டுவிட்டேன்.

தெரியாமல் நிகழ்ந்துவிட்ட இந்த தவறை மட்டும் மன்னித்தருள்க :-)

அப்புறம் இங்கே ஒழுங்க தான் பாடுகிறது அந்த பாட்டு. பைலின் சைஸை குறைப்பதற்க்காக பிட் ரேட்டை குறைய வைத்து என்கோட் பண்ணியிருக்கிறேன். ஆகையால் சுதி கம்மியாகத் தான் பாடும். கேட்கும் அளவில் இருந்ததால் வெளியிட்டேன்.
 
படத்தை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால்... பாடல் மிக அருமை. மீண்டும் கேட்க கிடைத்ததில் மகிழ்ச்சி. மேலும் தொடருங்கள்.
 
நன்றி சண்முகி. முதன் முதலில் இந்த ப்ளாக்கில் பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள். தங்கள் பின்னூட்டத்திற்கு மெத்த மகிழ்ச்சி. இனி வாரம் என்னை கவர்ந்த பாடல்கள் அலங்கரிக்கும். அது காட்டாயம் உங்களை போன்ற ரசிக பெருமக்களுக்கும் கவரும் என்பதில் ஐயமில்லை. இசைஞானி வடிக்கும் இசையாச்சே, சும்மாவா?
 
// மன்னித்தருள்க // என்னுடைய இயல்பான சுபாவமே அதுதானே... மன்னித்தோம் :-) << சரி.. சரி... ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுடக்கூடாதே >>

// இனி வாரம் என்னை கவர்ந்த பாடல்கள் அலங்கரிக்கும் // மாயவரம் வேற இதே மாதிரி ஒரு திட்டத்தோட கெளம்பியிருக்கார் (பாட்டு இல்ல, மலரும் நினைவுகளாம்). எங்களயெல்லாம் ஒரு நிமிஷம் நெனச்சி பாத்தீங்களா... சரி, விதி வலியது... நடத்துங்க...
 
அருமையான பாடலிது. சிறுவயதில் இப்பாடலை விழா ஒன்றின் போது நிஜத்திலேயே ஒரு பொன்மாலைப் பொழுதில் மலைகள் சூழ்ந்த இடமொன்றில் ஒலிக்கவிட்டிருந்தார்கள். அந்த அனுபவம் மங்கிவிட்டிருந்தாலும் மறக்கமுடியாதது.

ஃபயர்பாக்ஸில் விண்டோஸ் மீடியா பிளேயரின் படம் தெரியவில்லை.

அப்புறம் " நம்ம மொட்டையின் இசையில்" இப்படி சொல்லியிருக்க வேண்டாமே!
 
முகமூடி,

தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. இதெல்லாத்தையும் ஆராயாம அனுபவிங்க :-}}} கருத்துக்கு நன்றி.
 
நன்றி ராதாகிருஷ்ணன்

//ஃபயர்பாக்ஸில் விண்டோஸ் மீடியா பிளேயரின் படம் தெரியவில்லை.//

பயர்பாக்ஸில் தெரிகிற மாதிரி தான் முதலில் பாட்டை இட்டேன். ப்ளே பட்டனை தட்டாமலே எடுத்த உடனேயே பாடல் வந்து விடுகிறது. அது இந்த ப்ளாக்கை பார்ப்பவர்க்ளுக்கு திடீர் ஒலியால் அதிர்ச்சி வரலாம்.

யாருக்காவது எந்த டேக்கை பயர்பாக்ஸில் பயன்படுத்தினால் விண்டோஸ் ப்ளேயர் தெரியும் எனத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

//அப்புறம் " நம்ம மொட்ட