<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தமிழ்படத்துக்கு பிடிச்ச சனி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
தமிழ்படத்துக்கு பிடிச்சிருக்கும் சனி முன்னனி ஹீரோக்களின் துதி தான். பாடல்களின் வார்த்தை ஜாலங்களும், காட்சி அமைப்பில் கதாநாயகன் செய்யும் வண்ண ஜாலங்களும் அடிதட்டு மக்கள் முதல் மேல் தட்டு வர்க்கம் வரை கதாநாயகனுக்கு தட்டு தூக்க வைக்கிறது.கதாநாயகன்களை துதி பாடி வரும் பாடல்களும்,கதாநாயகனுக்கு பில்ட்-அப் கொடுத்து வரும் பாடல்களும் கேட்டு கேட்டு காதுகள் தான் புண்ணாகிப் போகிறது. ஊருக்கு நல்லது செய்யும் பெரியவராக,சேரி மக்களுக்கு நல்லது செய்யும் சேவகனாக..... டேய் டேய் நிப்பாட்டுங்கடா.... திருந்த விடுங்கடா மக்களை.

வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் இந்த கதாநாயகனுக்கு சச்சின் அடிக்கும் செஞ்சுரி கணக்காக ஐஸ் கட்டிகளை பாடல்களில் வைத்து மக்களை நோக்கி விளாசுகிறார்கள். விளாசிக்கிட்டே இருங்க... ஆனால் என் கடன் இந்த மாதிரி பாடல்களை போட்டுத் தாக்குவதே.

கதாநாயகன் துதிக்கு வழிவகுக்கும் 'திருப்பாச்சி'யிலிருந்து இந்தப் பாடலும் என் பதிலடிகளும் கீழே....(இந்த வார பாடல்களை போட்டுத் தாக்கும் கோட்டா இத்துடன் முடிவடைந்தது)

பாடல் வரி நீல கலரிலும், என்னுடைய பதிலடிகள் கருப்பு கலரிலும் இருக்கிறது.


நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தமில்ல
தொப்புள் கொடி உறவா.... இல்ல இல்ல
கட்சிக் கொடி உறவா... இல்ல இல்ல
மேட்டுக் குடி உறவா... இல்ல இல்ல
கள்ளுக் கடை உறவா... இல்லவே இல்ல


ஆக மொத்தம் நீ பொறம்போக்குங்கிறதை சுத்தி வளச்சி சொல்றே...

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா....


எலேய் எலேய் எலேய்.... நிறுத்து... நிறுத்து மேலே உறவு மற்றும் சொந்தத்தில அர்த்தமில்லைன்னு சொல்லிட்டு இப்ப என்ன பங்காளி ஆகலாமென்று பாக்குறீயா? சொத்துல ஒரு பைசா கிடையாது. ஓடிப்போ....

சாமி வரம் தந்துட்டா கொட்டும் மழை கொட்டும்டா
ஏழை மனம் பொங்கும்டா நான் அய்யனாரு பக்தண்டா


நீ கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு பாட்டை நிப்பாட்டினாலே மழை பெய்ஞ்சிரும். ஏழைங்க உன் படத்துக்கு தெண்டத்துக்கு காசு செலவழிக்கிறத நிப்பாட்டினாலே ஏழை மனம் பொங்கிரும்டா...

மன்னை நம்பி வேரு விண்ணை நம்பி யாரு
என்னை நம்பி கெட்டதில்ல பாரு

அது தான் ரசிக மன்ற தறுதலைகளை பார்க்கிறேனே...

பொறப்பு இறப்பு அவன் கையில
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையில

ஸ்ஸ்... அய்யோ அப்பா... எத்தனை வாட்டி இந்த மாதிரி வரிகளை கேட்கிறது. இத சொல்லி சொல்லியே தமிழ்மக்கள் தலையில மிளகாய் அரைக்கிறீங்களே...

உனக்கொரு பேரு எனக்கொரு பேரு
ஒன்னு சேர்த்து பாரு இந்தியன்னு பேரு

ஆமா உன் பேரு 'இந்தி' அவன் பேரு 'யன்'. ரெண்டு சேர்ந்த இந்தியன்.

அம்மையப்பன் தானடா நம்மையாலும் சாமிடா
கருவரை தோழிடா நம்ம உயிர் நாடிடா

எதுக்கு இப்ப தேவையில்லாம இந்த மாதிரி பில்ட்-அப் எல்லாம்.

கண்ணை பொத்தி வாழு காதை பொத்தி வாழு நம்ம காந்தி மொழி கேளு

அப்படியே மூக்கை பொத்தி வாழு. போய் சேர்ந்திரலாம் சீக்கிரம்.

ஆத்திகம் தான் மூச்சி சத்தியம் தான் பேச்சி ஆசையெல்லாம் போச்சி
நம்ம கூட்ட கொடியேத்து


ஆத்திகம் தான் மூச்சி. ம்ம்ம்... டியர் தி.க பேராண்டீஸ். நோட் த பாயிண்ட்.
சத்தியம் தான் பேச்சி. ம்ம்... நீ மொதல்ல வாயை திறந்து பேசிப் பழகு. அப்புறம் நீ என்ன பேசுறேன்னு கேட்கிறோம்.
என்னது நம்ம கூட்ட கொடியேத்தனுமா? அங்க தொட்டு இங்க தொட்டு கூட்டத்தை சேர்த்து கோட்டையில் முதலமைச்சர் சேர் வேணும். சரி தானே?

பொறப்பு இறப்பு அவன் கையில
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையில


ஆண்டவா....நீ ஏம்பா பொறப்பு இறப்பு டிபார்ட்மெண்ட கையில வச்சிருக்கே. வாழ்க்கை டிபார்ட்மெண்டை நீ வச்சிக்கிட்டு பிறப்பு இறப்பு டிபார்ட்மெண்டை மனுசங்க கையில கொடுத்துருப்பா... இல்லேன்ன இதையே போட்டு பல பாட்டுகளில் உருட்டிக் கொண்டிருப்பார்கள்.

இப்படியே அடுத்தவாரக் கடைசியில் 'சந்திரமுகி' பாடலோடு வருகிறேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
தலைவா கலக்கல்! உங்களைப் பாராட்டி 'பில்ட்-அப்' குடுத்து ஒரு பாட்டு எழுதலாம் போல கை அரிக்குது..
 
போட்டு தாக்குங்க.......
 
அல்வா சிட்டி அண்ணாச்சி.

இப்போ ஒருக்கா என்னை பாருங்க பிய்ந்திருக்கிறேனா என்று?
 
அவங்க பொழப்புல ஏம்பா மண் அள்ளி போடுற?
 
அன்புள்ள விஜய்,

'சூப்பராப் போட்டுத் தாக்கிட்டீங்க!!!!'

அருமை!! பாட்டு எழுதறவங்களுக்கு பிழைக்கணுமுன்னா 'ஹீரோ'வை
சந்திரமண்டலத்துக்கே கொண்டு போகணுமே!!!
கேட்டா, 'ஜனங்க விரும்பறாங்க'ன்னு சொல்வாங்க!

இந்த 'விரும்பற ஜனங்க' யாராயிருக்கும்?

என்றும் அன்புடன்,
துளசி
 
அதுசரி பாடல்களை விடுங்க இந்த சரத்குமார் வேறு கரெக்டரில் நடிக்கவே மாட்டாரா? நான் ஏதோ ஒண்ணை முந்தி பார்த்த ஞாபகம் இப்பவும் புதுப் புதுப் பெயரில அதே மாதிரி அப்பா மகன் போஸ்டர்தானே வருகுது.
அட எல்லாருமே தாக்கினால் துளசி சொன்ன அந்த ஜனங்க யாரு?
 
//மன்னை நம்பி வேரு விண்ணை நம்பி யாரு//

மன்னை?
எதுகை தேவையெண்டதுக்காக இப்பிடி மாத்தலாமா?

//என்னை நம்பி கெட்டதில்ல பாரு//
தற்கொலை செய்தாக்கூட குடும்பத்துக்கு காசுகுடுப்பாருல்ல.
 
விஜய்...நீங்க போட்டு தாக்குற தாக்குல அவனவன் தமிழ் பாட்டு எழுதிறத நிப்பாட்டிட்டு ஜப்பானிய மொழியில பாட்டை போட்டுறப் போறான் ( உங்களுக்கு ஜப்பானிய மொழி தெரியாதுதானே ? )...அப்புறம் நீங்க போட்டுத்தாக்க தமிழ் பாட்டு இல்லாமப் போயிடப் போகுது !!
 
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் இறைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்

(படம் : சுமை தாங்கி)

- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
 
பின்னூட்டத்திற்கு நன்றி சுதர்ஸன்,கரிகாலன்,வா.மணிகண்டன்,கறுப்பி, தமிழ்வாணன்,துளசியக்கா,வசந்தன், பாலுமணிமாறன் & ஆத்மன்.

வசந்தன்: அது 'மண்ணை' தான். நான் தான் தவறாக டைப் பண்ணி விட்டேன்.

கறுப்பி,துளசியக்கா: அதிக அப்பா/மகன் வேசம் கட்டியவர் சரத்குமாராக தான் இருக்கு.எல்லாம் மக்கள் ஆதரவாம். புடலங்காய் மக்கள் ஆதரவு. வேறு வழியில்லாமல் மக்கள் கடுமை வாழ்வை விட்டு சிறிது நேரம் ஒதுங்கி ரிலாக்ஸேசனுக்கு படம் பார்க்கிறார்கள். இப்படி கேணத்தனமாய் படங்கள் கொடுத்து மூளையை மழுங்கடிக்கிறார்கள்.

பாலு: நம்ம கவிஞர், தயாரிப்பாளர், ஹீரோக்களுக்கு கட்டாயம் ஜப்பானீஸ் தெரியாது. மாங்க மடையன்களாக இருக்கும் அவர்களும் கற்றுக் கொள்ள முனையமாட்டார்கள். ஆட்டு மந்தை கூட்டமாகத் தான் இருக்கும். எனக்கு அடுத்து அடுத்து போட்டுத் தாக்க பாடல்கள் வந்துக் கொண்டு தான் இருக்கும். போட்டு தாக்கல் தொடரும். என் கற்பனைக்கு நல்ல தீனி.

ஆத்மன்: அந்த கால தத்துவ பாடலுக்கும் இந்த கால தத்துவ பாடலுக்கும் உள்ள இடைவெளியை காட்ட அந்த பாட்டை போட்டீர்களா? இரண்டுக்கும் பூமிக்கும், யூரேனஸ்க்கும் உள்ள இடைவெளி தானுங்கோ....
 
விஜய்.. சந்திரமுகி பாடல் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அப்புறம், அந்த பன்ச் டயலாக விட்டுட்டீங்களே..

டேய் நான் நின்னா பாய்மரம், படுத்தா சறுக்கு மரம்!
நீ கையாலே அடிப்பே.. நான் கண்ணாலேயே அடிப்பேன்!

இதுக்கெல்லாம் என்னதான் அர்த்தமோ! பாவம் மக்கள்!
 
அல்வாசிட்டி அண்ணா கலக்கிட்டீங்க

அடுத்ததா அஜித்தோட பாட்டு ஒண்ணு இருக்கு

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன..

ஓவர் லொள்ளு அஜித்துக்கு
 
பின்னூட்டத்திற்கு நன்றி மக்களே...

இந்த தற்புகழ்ச்சி வரிசையில் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களில் முன்னனி அஜித், விஜய், தனுஷ், சிம்பு. அப்புறம் பில்ட்-அப் வரிசையில் ரஜினி, சரத்குமார், விஜயகாந்த்.... இன்னும் பலபேர்.... இவர்களால் தான் புதிதாக வருபவர்களும் அதே ஆசை பிடித்து ஆட்டுகிறது. உதாரணத்திற்கு 'ஜெயம்' ரவி. ச.ஆப்.மாகலெஷ்மில் ஒரு பில்ட்-அப் பாடல் வருகிறது. அய்யோடா.... தாங்கமுடியலைப்பா தமிழ் சினிமாவில் இந்த குப்பைகளை.

நேரம் கிடைக்கும் போது ஓவ்வொருவரும் போட்டுத் தாக்கப்படும்...
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->