<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

பக்கத்து வீட்டு புள்ளையாண்டான் IAS TOPPER

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இந்த வருடத்துக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழகத்தில் மட்டும் 54 பேர் வெற்றி பெற்றிருப்பது குறித்து பெருமகிழ்ச்சி(இந்த வருடம் மட்டுமே) அடைகிறேன். ஆண்டுக்காண்டு இந்த தேர்வு நடைப்பெற்றாலும், இந்த வருட தேர்வு என் கவனத்தை மிகவும் கவர்ந்தது. காரணம் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றிருக்கும் எஸ்.நாகராஜன் என் பக்கத்து வீட்டு பையன் (என்ன என் சுயநலம் தொக்கி நிற்கிறதா?).

திருநெல்வேலி தியாகராஜ நகர் 8வது தெருவில் இருக்கும் என் வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் இடையில் இருப்பது இன்னொரு வீடு மட்டுமே. என் வீட்டிலிருந்து பார்த்தால் அவர் வீட்டு முற்றமும், அவர் படித்துக் கொண்டிருந்த அறையும் தெரியும். நான் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்த போது லீவுக்கு வரும் சமயங்களில் மூடியிருக்கும் அவர் வீட்டு கண்ணாடி ஜன்னலை கவனித்தது உண்டு. காலை 2 மணி ஆனாலும் சரி, 5 மணி ஆனாலும் சரி வீட்டினுள் எப்போதுமே விளக்கெரியும்.அப்போது அவர் +2-க்கு படித்துக் கொண்டிருந்தார் என நினைக்கிறேன். இத்தனைக்கும் என் தந்தை வேலை செய்யும் அதே பி.எஸ்.என்.எல்லில் நாகராஜனின் தந்தையும் தாயும் வேலை செய்கிறார்கள். அவர் தந்தை மேலதிகாரி என்ற முறையில் என் தந்தைக்கு நல்ல ஒரு மதிப்பு அவர் மீது உண்டு. அவர்கள் பையன்கள் இருவரும் சிறந்த படிப்பாளிகளாக இருப்பதை சுட்டிக்காட்டி எங்களை ஊக்கப்படுத்த தவறுவதுமில்லை. "என் மண்டையில இருக்கிறது அவ்வளவு தான்" என்ற நோக்கில் நான் படித்தது என்பது வேறு விசயம்.

நாகராஜனுக்கும் எனக்கும் அவ்வளவு பழக்கமில்லை என்றாலும் ஒரு புன்னகையில் எங்களின் அறிமுகத்தை முடித்துக் கொள்வோம். அவர் பிட்ஸ் பிலானியில் இஞ்சினியரிங் படிப்புக்கு போன போது நான் வேலைத் தேடி சென்னைக்கு போக வேண்டியாதாகி விட ஆங்காங்கே நாடோடி வாழ்க்கை மேற்கொண்டு, வருடத்துக்கு ஒரு முறை வேடந்தாங்கலாக என் வீட்டுக்கு வரும் போது என் தந்தையிடம் நாகராஜனை பற்றி வினாவுவதை நான் தவற விடுவதில்லை. லட்ச லட்சமாக திருப்தியாக தனியார் கம்பெனியில் சம்பாதித்தாலும் கவர்மெண்ட் வேலையை தான் என் தந்தை தலையில் வைத்துக் கொண்டாடுவார். நாகராஜன் ரயில்வே சர்வீஸில் இருப்பதை சொன்ன போது எனக்கு ஆச்சரியம். எல்லோரும் இஞ்சினியரிங் டிகிரி முடித்தவுடன் எந்த வெளி நாட்டுக்கு போகலாம், எந்த பெரிய கம்பெனியில் சேரலாம் என கணக்குப் போடும் போது அவர் வித்தியாசமாக கவர்மெண்ட் நிர்வாகப்பணியை தேர்ந்தெடுத்திருக்கிறாரே என்ற புதிருக்கு இன்று தான் விடை கிடைத்தது.

நம்மால் சிலவற்றை சாதிக்க முடியாவிட்டாலும் நமக்கு தெரிந்த ஒருவர் சாதித்து விட்டால் ஏனோ நாம் சாதித்து விட்டோம் என்ற பெருமை நமக்குள் ஊடுருவி விடுகிறது. இந்த மனநிலையில் தான் இந்த பதிவை எழுத வைத்தது.

நாகராஜன் ஐ.ஏ.எஸ் ஆனதும் அரசியல்வாதிகளுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகிவிடாமல் இந்திய திருநாட்டில் அவர் பணி மகத்தானதாக அமைந்து 'வல்லரசு இந்தியா' என்ற கனவுப் பாதையை மெய்யாக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

அடுத்த முறை ஊருக்குப் போகும் போது அவரை சந்திக்க முடியாவிட்டாலும் அவர் பெற்றோரிடம் என் வாழ்த்துக்களை நேரில் தெரிவிக்க வேண்டும்.

பரவசத்தில் ஒரு அவசரப்பதிவு :-)

சுட்டிகள்

தேட்ஸ்தமிழ்.காம்
ரிடிப்.காம்
தினமலர்.காம்

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நாகராஜனுக்கு வாழ்த்து, இதைப் பதிவாய் எழுதிய விஜய்க்கு நன்றி :-).
 
நாகராஜனுக்கு என் வாழ்த்துக்கள்.
 
விஜய்,,

நாகராஜனுக்கும், அவர் பக்கத்து வீட்டுக்காரரான உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!
என்றும் அன்புடன்,
அக்கா
 
Good that you edited the post ;)

Anonymous :)
 
its a great feeling whenever somebody known to us achieves. thanks for sharing your 'paravasam'. I felt so elated.
 
நன்றி டிசே, ராரா, துளசியக்கா, மற்றும் இரண்டு அனானிமஸ்களுக்கும்.

//its a great feeling whenever somebody known to us achieves. //

உங்களை மாதிரி முகம் தெரியாமல் மின்னஞ்சல் வழி தொடர்பு உள்ளவர்களும் சாதிக்கும் போதும், அதே உணர்வுகள் தான் அனானிமஸ் :-)
 
என் வாழ்த்தையும் சொல்லிடுங்கோ. பக்கத்து வூட்டுக்காரங்களோட சண்டை போடறதுதான் நம்ம பழக்கம். அல்வா சிட்டியில் நிறைய ஆச்சர்யம் இருக்குதுப்பா!
 
அட... பிட்ஸில் படித்துவிட்டு உருப்படறவங்க கூட இருக்காங்க போல ;-))

விகடனில் இருந்து:

விகடன்.காம்: தமிழகத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஸ்ரீநிவாசன் நாகராஜன் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூ.பி.எஸ்.சி) யால் நடத்தப்படும் இந்தத் தேர்வில், மொத்தம் 422 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் முதல் 20 இடங்களில் 6 பெண்கள் தேர்வாகியுள்ளனர். பொது வகுப்பிலிருந்து 193 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 118 பேரும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பிலிருந்து 64 மற்றும் 47 பேரும் தேர்வாகியுள்ளனர்.


இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டன. இதில் முதல் 10 இடங்களில் ஒரு பொறியாளர், இரண்டு மருத்துவர்கள் ஆகியோரும் தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜன் நான்காவது முறையாக இந்தத் தேர்வினை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் | தி ஹிந்து | தேர்வு முடிவுகள்
 
நன்றி ராம்கி

//பக்கத்து வூட்டுக்காரங்களோட சண்டை போடறதுதான் நம்ம பழக்கம்.//

எங்க ஏரியாவில ஆடிக்கு ஒரு தடவை இல்ல அம்மாவாசைக்கு ஒரு தடவை தான் மக்கள் பக்கத்து வீட்டுக்காரங்களோட பேசுவாங்க. அதுனால சண்டை வாரதுக்கு சான்ஸ் இல்லீங்கோ.

போஸ்டன் பாலா, நிறைய தகவல்கள் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி தலீவா.
 
வாவ்! என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.
 
ரொம்ப பெருமையா இருக்குங்க.. நம்ம தமிழ்நாட்டுல இருந்து 54 பேரா..அதுவும் நம்ம பக்கத்தூர்காரு (ஜஸ்ட் 150 கிமீ தாங்க..) டாப்பரா...ரொம்ப சந்தோஷ்ங்க...
 
என்ன தாஸு, உங்க ஊரு திருச்சியா இல்லை மதுரையா? :-))))
 
திருநெல்வேலியிலிருந்து 150 கிமீ. மதுரைதானே!! திருச்சி 270, சென்னை 590!
 
அண்ணே மாண்ட்ரீசர் அண்ணே, நீங்க சொல்றலது சரிதான்னே. மன்னிச்சிக்கீங்கண்ணே :-))))
 
நாகராசனுக்கு வாழ்த்துகள்! முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இவரும் சான்றுபோல! நான்கு முறை எழுதியிருக்கிறாராமே! சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு பாராட்டுகள்.

இதுக்கு ஏதும் பார்ட்டி உண்டா அல்வா? வீட்டு(ல) அம்மா வேற இல்லை! புலிக்குட்டி?

எம்.கே.
 
அது என்னவோ உதாரணம் காட்டுறதுக்குண்ணே பக்கத்து வூட்டுலே பசங்க 'பழமா' வந்து மாட்டுவாங்க! நல்ல வேளை அல்வா சிட்டி... நீங்க சிங்கப்பூர்ல நல்ல நிலைமைல இருக்கீங்க..! இதுவே ஊரிலே இருந்து பக்கத்து வூட்டுக்காரரு பேரு பேப்பரிலே வந்திருந்தா நம்ம வீட்டுலே நெலமையை நெனச்சுப் பாருங்க!'

ம்.. அடுத்த தபா அவரை பாக்கும் போது வெறும் புன்னகையோட மட்டும் வந்திடாம (புன்னகைப்பீங்கள்ளே?!) கூடவே எங்க எல்லோரோட வாழ்த்தையும் சொல்லிடுங்க சாரே!
 
மதுரையும் நம்ம பக்கத்தூர்தாங்க..

//புலிக்குட்டி?//

புலிப்பாலா..
 
//புலிக்குட்டி?//

TIGER brand?! ;)
 
This comment has been removed by a blog administrator.
 
குமார், புலிக்குட்டி என்று யாரை அல்லது எதை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. அனேகமாக வீட்டில் பார்ட்டி கேட்டு, குடும்பத்தைப் பற்றியும் சொன்னதால், பையனை தான் அப்படி சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். இல்லையென்றால் குமார் 'புலிக்குட்டி' என்று பின்னூட்டத்தில் ஏதோ சொல்ல வந்து தூங்கியிருப்பார் என நினைக்கிறேன் :-)
அதனால் தாஸு & மாயவரத்தான் அதிகமாக யோசிக்க வேண்டாம். :-)))) குமாரே சொல்லட்டும்.
 
ஓய், தலைவர் தாஸும் ஆயிரம் காணாத மாயுரத்தானும் கரெக்டா சொல்லியும் புரியாத மாதிரி நடிக்கிறியெவெ.

சிங்கப்பூர்ல புலிக்குட்டி, புலிப்பாலு இதெல்லாம் என்னான்னு தெர்யாதாக்கும்?

சரி, சரி. எப்போ வெச்சுக்கலாம் புலிப்பால் அபிஷேகம்?
எம்.கே
 
தலைவர் தாஸா.. நாந்தான் எந்த படத்துலயும் நடிக்கலியே.. அப்பறம் எப்படி தலவனாவேன் ..
 
அல்வாசிட்டியாரே.. ஊருக்கு உழைக்கிறதைவிட நமக்கு நாமே திட்டத்தை செயல் படுத்திட்டா எப்படி? வேணும்னா நாம ரெண்டு (மூணு?!) பேரும் கூட்டணி அமைப்போமா?! பரிசீலிக்கவும்!! 1000+ ஐ ஈசியா தாண்டலாம்..!! சிந்திப்பீர்.. செயல்படுவீர்..!!
 
Congrats Naagarajan. You have done it.
Date:12/05/2005 URL: http://www.thehindu.com/2005/05/12/stories/2005051212651300.htm
--------------------------------------------------------------------------------

Front Page

Railway official from Tamil Nadu is IAS topper

Staff Reporter




NEW DELHI: Railway traffic service official Srinivasan Nagarajan has bagged the top spot in the Union Public Service Commission Civil Services (Main) Examination. The results were announced here on Wednesday.

In all, 422 candidates, including 67 women, have been recommended for appointment. While the top 20 includes six women, 193 candidates have been selected from the general category, including three physically challenged persons, 118 from Other Backward Classes, 64 from Scheduled Castes and 47 from the Scheduled Tribes category. The number of vacancies reported by the Government for IAS, IFS and IPS is 91, 20 and 88, for the Central Services Group `A' 235 and the Central Services Group `B' 19.

It may have been his fourth and last attempt but for Tirunelveli-based Mr. Nagarajan, it could not have ended on a better note. A B.Tech from BITS Pilani, he had sociology and geography as options. Professionals have clearly scored, with the top 10 comprising an engineer, two doctors and an IIM graduate. Basant Garg and Gaurav Uppal are both doctors and hold the second and third ranks this year. Basant has cleared it in his first attempt.

Manish Kumar, ranked fifth, is an IIM graduate. He had to choose between a New York posting with handsome salary and one that would help him serve his own people.

"I decided to take the UPSC exam when I got the offer for a job in New York. Although the money was great, I wanted to do something here. I was not sure if coming back would be easy once I went there, so I decided to write the exam instead. It is my third attempt but I am glad to have finally made it," he said. Interestingly, at least six of the top 10 were trained at an institute here. "We were confident of having our students in the top 10 but six of them, including the top three, was completely unexpected. It has been a brilliant year for us," said Sri Rangam, the man behind the Delhi branch of Sri Ram Institute.








© Copyright 2000 - 2005 The Hindu
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->