<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

மூன்றாவது கண்-1

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ஒரு சின்ன மீன் பெரிய மீனிடம் கேட்டது "கடல் என்பதைப் பற்றி மற்றவர்கள் நிறைய பேசுகிறார்கள். கடல் என்றால் என்ன?"

பெரிய மீன் சொன்னது "உன்னை சூழ்ந்துள்ள அனைத்துமே கடல் தான்"

சின்ன மீனுக்கு ஏக குழப்பம் "அப்போது ஏன் என்னால் கடலை பார்க்க முடியவில்லை?"

"ஏனென்றால் நீ கடலினுள்ளேயே வாழ்கிறாய்,நகருகிறாய். அதனால் கடல் உன்னுள்ளும் இருக்கிறது. வெளியேயும் இருக்கிறது. கடல் தான் உனக்கு வாழ்க்கையும் கொடுத்தது. உன் சாவையும் கொடுக்கும். கடல் உன்னுடைய சொந்தமாக உன்னை சூழ்ந்துள்ளது" என்றது பெரிய மீன்.

கந்துவின் கருத்து: மீன் கடலிலும், ஆற்றிலும், ஏரியிலும் வாழ்ந்தாலும் அது அவற்றை உணருவதில்லை. மக்கள் ஜென்னிலே வாழ்ந்தாலும், ஜென்னை பற்றி அறிந்துக் கொள்வதில்லை. அப்படியென்றால் ஜென் என்றால் என்ன என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

மேலே சொன்னது புரிஞ்ச நீங்க புத்திசாலி டே... அதையும் சொல்லிற்றேன்.

கொஞ்ச நாளாக 'தினம் ஒரு ஜென்' கங்காவை காணவில்லையே? கருத்துக்கு மருந்தாக ஜென்னை படித்துக் கொண்டிருந்த போது அதன் ஒரு துகளை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்பினேன். அதான் அது.

படத்தில் க்ளிக்கி விஸ்வரூபத்தைப் பார்க்கவும்
Image hosted by PicsPlace.to

நம்ம பசங்க எல்லாரும் போட்டோ புட்ச்சி புட்ச்சி போடுறதுனால எனக்கும் நான் புட்ச்ச போட்டவை போடனும்னு ஆசையா இருக்கு. கேமிரா வாங்குன புத்சுல ஆர்வ கோளாறுல நிறைய படம் புட்சேன். ஒவ்வொன்னா நேரம் கிடைக்கும் போது போடுறேன். இன்னிக்கு எனக்கு புட்ச போட்டோ இங்கேயிருக்கு. படத்தை க்ளிக் பண்ணீங்கன்ன பெரிசா படம் பார்க்கலாம். என்னோட மூன்றாவது கண் பார்வையை பிடிச்சாலும் பிடிக்காட்டியும் உங்க கருத்தை சொல்லிட்டு போயிருங்க.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
கங்கா விடுமுறையில் தாயகம் சென்றுள்ளார் விஜய், சீக்கிரம் திரும்புவார் என நினைக்கிறேன்.
 
நன்றி ஜீவா. ஜென் கதைகளே தமிழ் மணத்தில் காணோமே என்று நினைத்தேன். ஊருக்கு போயிருக்காரா? ம்ஹீம்.... நானே கூகிளி அங்கிருந்து ஆங்கிலத்திலே ஜென் கதைகளை படிக்க ஆரம்பித்துவிட்டேன் :-)
 
விஜய்,
அன்னியன் படப்பாடல்களை கேட்டுவிட்டீர்களா?
பாடல்களை கேட்டவுடன் உங்கள் ஞாபகம்தான் வந்தது...நீங்கள் போட்டுத்தாக்குவதற்கு நிறைய விஷயம் இருக்கு;-)
 
அது என்ன 'கந்துவின் கருத்து'?
 
ஜீவா, இன்னும் அந்நியன் பாடலை கேட்கவில்லையே. கேட்டுட்டா போச்சி. பதிவு போட்டுட்டா போச்சி...

நன்றி பாண்டியன்.

'கருத்து கந்தசாமி' தான் மாறிப்போய் 'கந்துவின் கருத்து' ஆகி விட்டது... :-)))))
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->