<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

பருவகாலம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
எனக்கு போன ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறிய குறும்பட மாலையாக அமைந்தது. காலையிலிருந்து அஜீவன் சிங்கப்பூருக்கு வந்தரா, வரவில்லையா என்ற கேள்வியுடன் ஈழநாதன் எனக்கு தொலைபேசி கேட்டதும், எனக்கே ஒரு பயமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசியில் அஜீவன் சிங்கப்பூருக்கு வரவில்லையென தெரிந்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஈழநாதன் அருமையாக நிகழ்ச்சியை வழிநடத்திச் சென்றார்.

தாமதமாக அன் மோ கியோ நூலகத்தை அடைந்ததும் ஒரு பிரமிப்பு. எனக்கு வழக்கமான முகங்கள் தவிர நிறைய புதுமுகங்கள்(எனக்கு) அங்கே வீற்றிருக்க அஜீவன் அவர்களின் குறும்படம் எற்கனவே ஓட ஆரம்பித்திருந்தது.அஜீவனால் அன்றைய நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், புதிய சூழ்நிலையில் என் மனதின் ஆரவாரம் அடங்க, 'செருப்பு' என்ற குறும்படத்தைப் பற்றிய ஒரு முன்னுரையுடன் ஈழநாதன் படத்தை ஓட்டி விட்டார். படம் முடியும் தருவாயில் ஆங்காங்கே விசும்பல் ஒலி எழும்ப எல்லோர் முகத்திலும் சோக ரச வழிய என் மனதும் கனமானது. ஒரு நிகழ்வை எப்படி வேண்டுமானாலும் அதிக நேரத்தில் விசுவல் இம்பேக்ட்டுடன் காட்டலாம். ஆனால் அதே நிகழ்வை 10 நிமிட நேரத்தில் ஒரு குறும்படமாக கனமாக மனதை தாக்க வேண்டுமானால் ஸ்கிரிப்ட்லும் சரி, கேமிரா கவிதையிலும் சரி, இயக்கத்திலும் சரி ஒரு அசாதரண முயற்சி தேவை என்பது அந்த குறும் படங்களைப் பார்க்கும் போதே தெளிவாக தெரிந்தது.

அஜீவனின் இயக்கம் மற்றும் அவருடைய பயிற்சி பட்டறையில் எடுக்கப்பட்ட மூன்று குறும்படங்களும் இலங்கை சூழலை சார்ந்தும், புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளை சார்ந்தும் எடுக்கப்பட்டிருந்தது. அந்த மூன்று படங்களும் வெவ்வேறு பிரச்சனைகளை பேசினாலும், பாதிப்பு இருந்தது. பாதிப்பை கொஞ்சம் மட்டுப்படுத்தியது கேரக்டர்கள் பேசும் இலங்கைத் தமிழ். அஜீவனை இன்று சந்தித்த போது முழுக்க இலங்கையை சார்ந்து குறும்படம் எடுக்கும் போது இந்திய பேச்சுத் தமிழில் எடுத்தால் அதன் நோக்கம் அடிப்பட்டுப் போவதை தெளிவாக விளக்கினார். எனக்கும் அவர் சொன்னது மிகச் சரியெனப்பட்டது.

சிங்கப்பூர் தெமோசாக் பல்கலைகழகத்தில் விசுவல் ஆர்ட்ஸ் படித்திருக்கும் அன்பர் யாசீர் அவர்களின் 'பொம்மை' என்ற குறும்படமும் காட்டப்பட்டது. அது அவருடைய இறுதியாண்டு பிராஜக்ட்டாக பண்ணியதாம். சிங்கப்பூர் சூழலில் எடுக்கப்பட்ட ஒரு மாணவனின் பொம்மை வாங்கும் கனவைப் பற்றியது. விசுவலாக அந்த குறும்படம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் 21 வயது இளைஞன் செய்த இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. இதே படத்தை லாஸ் ஏஞ்சலில் நடக்கப்போகும் விழாவுக்கு ரீமேக் பண்ணி அனுப்பப் போவதாக சொன்னார். அவருக்கு ஏகப்பட்ட அறிவுரைகளும், பிழைகளும் சுட்டிக்காட்டப் பட்டன. அவரும் நிறைய பேசினார். என்னுடைய 21 வயதை அவருடன் ஒப்பிட்டு பார்த்தேன். அந்த வயதில் படித்து முடித்து பட்டம் பெற்றேன் என்பதை விட, விசய ஞானம் எனக்கு பூஜ்ஜியமாக இருந்தது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். கூடிய விரைவில் எல்லோரும் பாராட்டும் இளம் இயக்குநராக யாசீருக்கு என் வாழ்த்துக்கள். 10 ஆண்டுகள் கழித்து விஜய்,விக்ரமை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது அவரது கனவாக கூறினார். "விஜய் விக்ரமை வைத்து படம் எடுக்கும் வீணாய் போன தமிழ் இயக்குநர்களின் லிஸ்டில் சேர ஆசைப்பட வேண்டாம்" என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் விவரங்களுக்கு இங்கே.

இன்று மாலை அஜீவனுடன் ஈழநாதன்,M.K.குமார்,அருள்குமரன், இன்னொரு நண்பர்(பெயரை மறந்துவிட்டேன்) ஆகியோருடன் இனிதே கழிந்தது. அஜீவன் பேசிசிசிசிசிக் கொண்டேயிருந்தார். நான் சினிமாத்துறையில் சந்தித்த முதல் நபர் அஜீவன் என்பதால் வழக்கம் போல என் சுபாவத்தின் படி அவர் பேசுவதை எப்போதும் போல் நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன். கொஞ்ச நாளாக குறும்படம் மற்றும் விவரணப்படம் எடுக்க வேண்டும் என்ற என் மனதின் பொறியை ஊதி தீயாக வளர்த்து விட்டுவிட்டார். சிங்கப்பூர் நண்பர்கள் நல்ல கதையுடன் வந்தால் அவர் தேவையான உதவி செய்வதாக வேறு சொல்லித் தொலைத்துவிட்டார். சும்மா கிடந்த சங்கு ஊதியாகி விட்டதே!. இனி எப்படி தூங்குவதோ தெரியவில்லை. அதே போல் சந்தித்த சிங்கை நண்பர்கள் மனதிலும் பெருந்தீ கிளம்பியிருக்குமென நினைக்கிறேன். இந்த பெருந்தீக்கள் ஒன்று கூடி நல்ல பண்டத்தை சமைத்தால் சரி. முன் கூட்டியே ஒரு குறும்படம் எடுக்க எவ்வளவு செலவாகுமென அஜீவனிடம் கேட்டாகி விட்டது :-) பைனான்ஸ் பண்ணும் அளவுக்கு வசதியில்லாவிட்டாலும் ஒரு நல்ல கதை மற்றும் விசயத்தை நோக்கிய பார்வையை கொடுக்க முடியுமென நம்பிக்கையிருக்கிறது. இருந்தாலும் வயிற்றுப் பொழப்பு போக தானே மத்ததெல்லாம்.


கீழேயிருக்கும் கார்டூனை பாருங்கள்... பல பருவங்களில் ஒரு ஆணும், ஒரு பெண்ணின் நிலையையும் பாருங்கள்.

சின்னஞ்சிறு வயதில்
Image hosted by PicsPlace.to

Image hosted by PicsPlace.to

பதின்ம வயதில்
Image hosted by PicsPlace.to

Image hosted by PicsPlace.to

காதலிக்கும் வயதில்
Image hosted by PicsPlace.to

திருமணமும் ஆகிறது
Image hosted by PicsPlace.to

வயதும் ஆகிவிட்டது
Image hosted by PicsPlace.to

இறுதிகாலங்களில்....
Image hosted by PicsPlace.to

ஆண் எப்போதும் 'ஹீ ஹீ ஹீ' தான்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
பதிவில் சொல்ல மறந்துப் போனது...

அஜீவன் அவருடைய படத்திற்க்காக நடிக-நடிகைகளை தேடிக் கொண்டிருக்கிறார். நடிக்க ஆசையிருந்தால் தொடர்புக் கொள்ளுங்கள். மேல் விவரங்களுக்கு

http://ajeevan.blogspot.com/2005/03/blog-post_25.html
 
அந்தச் செருப்பு குறும்படத்தை இணயத்தில் பார்த்திருக்கிறேன். அருமை எனப்புகழ்வது... வறுமையையும், கண்ணிவெடியினால் ஏற்படும் அவலத்தையும் அருமை என்று சொல்வதுபோல் ஆகும் என்பதால்...சொல்கிறேன், மனம் கனக்கச் செய்யும் படைப்பு!. மற்றுமொன்று, கொடுத்த கடனைத்தான் எவ்வளவு கண்ணியமாக கேட்கிறார்கள் அங்கு?.
 
I have seen pictures acted by Vijay... i have heared the songs written by Vijay and now, am waiting to see the "Kurum( or kurumbu ) padam" directed by Halwacity Vijay ! :))))
 
அப்படி போடு போடு போடு....திருப்பி போடு பின்னூட்டத்தாலே....

ஆம். 10 நிமிட நேர படத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம்.

//கொடுத்த கடனைத்தான் எவ்வளவு கண்ணியமாக கேட்கிறார்கள் அங்கு?//

காதில் கேட்க முடியாத வசவுனுடே தானே கடன் கேட்பார்கள் நம்ம ஊரில. இல்லேண்ணா ஆட்டோ வரும். அதுவும் இல்லேன்னா கட்டிபிரண்டு சண்டை போட்டு இருப்பாங்க. :-)
 
விஜயின் குறும்படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

அன்னார் எங்களை ஏமாற்றாது நல்லது செய்யவேண்டும்!

எம்.கே.
 
நன்றி பாலு, குமார்.

பாலு, இயக்குநர் விஜயை பார்க்க ஆசையா? எனக்கும் ஆசை தான். அப்படியே ஒன்னும் தெரியாத பயலுக்கு இயக்குநர் ஆகுனும்னு ஆசையான்னு என்னுடைய மனசாட்சியும் கேட்குது :-)))))

என்ன குமாரு,

//அன்னார் எங்களை ஏமாற்றாது நல்லது செய்யவேண்டும்!//

ஆக மொத்தம் நான் அல்வா கொடுத்துக் கொண்டு அலைகிறவன் என்ற நல்ல பெயர் சிங்கப்பூரில் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது என்று சொல்லுங்கள். :-)))))
 
விஜி! 'செருப்பு' குறும்படம் அஜீவனோடது என அல்வா கொடுத்து விடாதீர்கள்! அது கெளதமனோடது!

ஓஹோ! உங்க குறும்படத்திற்கான ஆரம்ப 'ரீலா' இது?

-மானஸாஜென்
 
'children of heaven'- ஈரானியப் படம் ஏகப்பட்ட Home Run, செருப்பு, பொம்மைகளை உருவாக்கும் போலருக்கிறது!

கமலஹாசன் சொன்னது போல வால்மீகி கதையாக இருந்தாலும் 'கம்ப'ராமாயணமாய் இருந்தால் சரி!

-மானஸாஜென்
 
நன்றி மனாஸாஜென்.

//'children of heaven'- ஈரானியப் படம் ஏகப்பட்ட Home Run, செருப்பு, பொம்மைகளை உருவாக்கும் போலருக்கிறது!//

அது ஒரு நல்ல கதைக்கு கிடைத்த வெற்றியென தான் நான் நினைக்கிறேன்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->