<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

மனசு விம்மி பம்மி மருகுது

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ம்ஹிம்ம்ம்... வாலிப வயசுல ஒன்றா இரண்டா... ஆயிரம் தேவதைகள் கனவில் வருவார்கள். காதலிப்பார்கள். M TV போல் சந்தோசமாக ஆடிப்பாடுவோம். ஆனால் இப்போது என் 'கனவு டிவி'யில் அந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருவதே இல்லை. ஏனோ தெரியவில்லை,இப்போது கனவு டிவியில் வருவதெல்லாம் அழுது வடிந்து மூக்கை சிந்த வைக்கும் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற நிகழ்ச்சிகளே. போய் விட்ட/போய் கொண்டிருக்கிற வாலிப வயசை நினைத்தால் இளைஞர்களின் மேல் பொறாமை பொறாமையா வர்து தெரியுமா?

Image hosted by PicsPlace.to

அந்நியன் படத்தில் 'குமாரி குமாரி' பாட்டை கேட்டேன். ஆன் லைனில் பாடல்களை கேட்க இங்கே சொடுக்கவும். சில வரிகள் இளைஞர்களை சுருதி மீட்டு காதல் பாயசத்தை பந்தி இலையில் ஊற்றி நக்க வைக்கும் என்பதால், பொறாமையால் என் வயிறு கருகி அந்தப் பாடலை செம நக்கல் அடிக்க வேண்டும் போல் தோன்றியது. என்னோட வயித்தெறிச்சல்.... கண்டுக்காதீங்க.... கண்டுக்க மாட்டீங்கன்ன மேலே படிங்க. (பாடல் வரிகள் நீல கலரில்)

ஓ சுகுமாரி ஒ சிங்காரி
என் அலங்காரி நீ ஓ சுகுமாரி


யாரைப் பத்தி பாடுறீங்க. யாரு? இவங்களைப் பத்தி தான் பாடுறீங்களா?

Image hosted by PicsPlace.to

சரி சரி மேல பாடுப்பா...

ஓ சுகுமாரி A.குமாரி நீ

A.குமாரி யா? இனிஷியலோட வேற பாடுறீங்களா? சரி சரி மேல பாடுப்பா

குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது குமாரி

என்னப்பா உன் காதல் மலச்சிக்கல் காதல் போலேயே? இப்படி சிக்கி முக்கி திக்கி விக்கி... என்னமோ போங்க.

குமாரி என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது குமாரி

குமாரா உனக்கு கேஸ் ட்ராபிள் வேறயா? நெஞ்சி விம்மி பம்மி நின்றால் கோலி சோடா வாங்கிச் சாப்பிடவும் குமாரா. (ப்ளீஸ் அவர் பக்கத்தில் நிற்க வேண்டுமானால் மூக்கைப் பொத்திக் கொள்ளுங்களேன்)

என் வார்த்தை கடல் வற்றி விட்டதே

வார்த்தையா? நல்ல பாருய்யா. ஜொள்ளு விட்டு உன் வாயில் ஊறும் எச்சில் கடல் வற்றியிருக்கப் போகுது.

நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்


இப்படி தேர்வை ஒத்தி வச்சி வச்சி நீங்க 10 வது வகுப்பு கூட தேறவில்லை தலீவா. உருப்படியா படிச்சி பாஸ் பண்ணி உருப்படுகிற வேலைய பாருங்க.

ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடிதடி


10 ஆம் வகுப்பு பாஸ் பண்ற வழிய காணோம். எதுகை மோனையில பாட்டு வேற கேட்குதோ. ஓடிப்போ...

இந்த காதல் என்ன பெரும் பாராமா?

எலேய், பின்னே 100 KG குட்டியானையை காதலிச்சா உன் காதல் இப்படி தாண்டா பாரமாயிருக்கும். போடா போ...

இது பேறுகாலம் இல்லாதா கர்ப்பமா? ஓ ஓ

யோவ் நல்ல பாருய்யா. அது உன்னோட தொப்பையா இருக்கப் போகுது.

காதலை மறைத்தால் கணம் தாங்காமல்
என் உயிர் செத்துப் போகும் இல்லையா?


குண்டு கல்யாணம் மாதிரியிருக்கிற உங்கப்பன் மிதிச்சே நீ செத்துப் போகலை. இதுக்கெல்லாம் செத்துப் போயிருவியா. சும்மா தமாசு காட்டாதே கண்ணா?

காதலைச் சொல்லி இல்லையென்று மறுத்தால்
காதலே செத்துப் போகும் இல்லையா?


உன் காதலே சொல்லி அவ கிட்ட செருப்படி வாங்கி உன் மானமே செத்துப் போச்சி. பிறகு என்ன?

ஒரு காதல் கடிதம் எதுவும் காதலை முழுசாய் சொல்வது இல்லை

அப்போ ஒன்னு செய்யி. ஒரு 1000 பக்கம் புத்தகம் போட்டு உன் காதலை முழுசா சொல்லு ராசா.

நீ கண்களை அடைத்தால் காதல் நுழைய இன்னொரு வாசல் இல்லை

ஏற்கனவே எதோ சிக்கி முக்கிகிட்டு இருக்கே. இந்த லட்சணத்தில அவ பக்கம் போனேன்னா இன்னொரு வாசலான மூக்கையும் அடைச்சிக்கிடுவா.

நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா?
இல்லை. காதல் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் கூட.

தினம் தேய்கிறேனே இது தேவையா?
அடே மடையா... ஒழுங்க சாப்பிட்டா இப்படி தேஞ்சிப் போக மாட்டேயடா.

கூடைகள் என்றும் பூக்களை நிரப்பி கோயிலைத் தேடி நடக்கின்றேன்
கூடையைக் கொடுத்து கும்பிட்டு முடித்து கோரிக்கை வைக்க மறுக்கின்றேன்
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்?
பெண் கண்களை பார்த்து காதலைச் சொல்லும் தைரியமுள்ளவன் அவன்.


கண்ணைப் பார்த்து தைரியமா சொல்லிற முடியாதுல்லே. நாம கண்ணுக்கு தெரியாம அவ கால்ல போட்டிருக்கிற செருப்பு கன்னத்தை பதம் பார்க்குமே. தெரியாதா?

பெண் பாடுகிறாள்:

குமாரா என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா குமாரா?
குமாரா என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா குமாரா?
உன் வார்த்தை கடல் வற்றி விட்டதா குமாரா?

சூப்பர் ஃ பிகராக அவன் காதலி கோலி சோடாவுடன் வந்து நிற்கிறாள். நான் வாயடைத்துப் போய் வந்த வழியே திரும்பி ஓடுகிறேன்.

அந்நியன் படப் பாடல்களைப் பற்றிய ஒரு மெய்ச்சிலிர்த்த கட்டுரைக்கு இங்கே சொடுக்கவும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//யோவ் நல்ல பாருய்யா. அது உன்னோட தொப்பையா இருக்கப் போகுது.//

:-)
 
ம்...வூட்டுலே 'அம்மா' இல்லைன்ன உடனே இப்படியெல்லாம் நடக்குதா?! அது சரி.. 'அம்மா' எங்கே? ரெண்டாவது புளிக்குட்டி.. ஸாரி.. புலிக்குட்டி?!
 
//அப்போ ஒன்னு செய்யி. ஒரு 1000 பக்கம் புத்தகம் போட்டு உன் காதலை முழுசா சொல்லு ராசா.//
:)
aiyo! aiyo!
 
:-) :-)
 
ம்ம்ம்.. நக்கலோ நக்கல்.

//இது பேறுகாலம் இல்லாதா கர்ப்பமா? ஓ ஓ

யோவ் நல்ல பாருய்யா. அது உன்னோட தொப்பையா இருக்கப் போகுது.
//

சூப்பர் தான் போங்க.
 
அந்நியன்ல இருந்து இன்னொரு பாட்டு...

"கண்ணும் கண்ணும் நோக்கியா?"

நோக்கியாவோட மாடல் நம்பர் என்னண்ணே?

"$#^%&*())"
 
நல்ல நக்கல் :-)

ஹாஹ்ஹாஹ்ஹா! கருத்துல மீதியை சிரிச்சி முடிச்சி வந்து பதிக்கறன்
 
பின்னூட்டமிட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
 
Pls cover the explanations for lines such as
-----
u wanna get it up i wanna check/shake it up..
---------- from Kaadal Yaanai song

http://www.mohankumars.com/lyrics/index.php?m=s&lid=1193
-------------

indha ammani ennatha solraangannu koncham viLakkunga :-)
 
«øÅ¡ º¢ðÊ Å¢ƒöìÌ

¯í¸û À¡¼ø Á¡üÚ Åâ¸û Óý¦À¡Õ ¸¡Äò¾¢ø
ÌÓ¾ò¾¢ø Å󾨾 ¿¢É× Ü÷¸¢ÈÐ.

¯¾¡Ã½õ -

±õ ƒ¢ ¬÷ À¡¼ø ´ýÚ

±ý Å¡Ùõ ¯ý ŢƢÔõ ºó¾¢ò¾¡ø
- ¸ñ ÌÕ¼¡¸¢Å¢Îõ

ºÁ£Àò¾¢ø Ó¾øÅý À¡ðÎ

Á¨ÆÂÊìÌõ ¯ý §ÀîÍ
- ´§Ã ±îºø ÐôÀø
 
அன்புள்ள சூப்பர் சுப்ரா,

எனக்கு நையாண்டி செய்து எழுதப்படும் எழுத்துக்கள் எல்லாம் ஓரளவு விரும்பிப் படிப்பேன். இந்த மாதிரி பாடல் நையாண்டி டெக்னிக் அர்த பழசு. குமுதம் மட்டுமல்ல ஆனந்த விகடன் மட்டுமல்ல சில வலைப்பதிவுகளிலும் செய்யப்படுகின்றன. அதில் இன்ஸ்பையர் ஆனது தான் இது.

நன்றி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->