<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

குட்டி குட்டி வெண்ணிலவு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நான் காதலித்துக் கொண்டிருந்த போது மழையாக கொட்டிய கவிதைகள் பிறகு ஏனோ வறண்டுப் போய்விட்டது. சில நேரங்களில் சில பல சந்தோசம் தரும் விசயங்கள் என்னை கவிதைப் பாட தூண்டும். ஒரு குட்டி வெண்ணிலவும் என்னை கவிதைப் பாட வைத்தது.

"நீராவியால் வேர்த்துக் கொட்டும்
என் குட்டி குட்டி வெண்ணிலவே
உன்னை கன் பவுடரில் (Gun Powder)
பிரட்டி இருட்டு பிரங்கியில்
தள்ளியது யாரோ?"


அவள் மல்லிகைப்பூ மாதிரி என்பார்கள். மல்லிகைப்பூ அவள் அளவுக்கு மென்மையா எனத் தெரியவில்லை. வேண்டுமானால் க்ளீனிங் ஸ்பாஞ் எவ்வளவு மெத்து மெத்து என்றிருக்குமோ அவ்வளவு மெத்து மெத்தின்றிருப்பாள். க்ளீனிங் ஸ்பாஞ்சில் கைவைத்தால் எப்படி மென்மையாய் கைவிரல் உள்ளுக்குள் அமுங்கி அடங்குமோ அதே மென்மை தான் அவளை தொடும் போதும். அவள் ஸ்டீமிங் (steaming) எடுத்துவிட்டு வெளியே வரும்போது வானத்து வெள்ளி நிலவும் தோற்று விடும் போங்கள். ருசிக்க ருசிக்க திகட்டாதவள்.

மேல் சொன்ன கவிதையும், அந்த வர்ணிப்பும் என் வீட்டில் தயாரிக்கப்படும் இட்லியை பார்த்ததும் தானாக வெளியில் வந்து விழும். கவிதை என்று நான் நினைத்துக் கொண்ட மேல் வரிகளில் வெண்ணிலவு இட்லியையும், Gun powder என்பது தோசைப்பொடியையும், இருட்டு பிரங்கி வாயையும் குறிக்கும்.


இட்லி. ஏறக்குறைய 30 வருடமாக சதா வாயில் கொட்டிக் கொண்டிருந்தாலும் சலிக்காத ஒரே பதார்த்தம் இட்லி. இட்லி தயாரிப்பதென்பதே ஒரு சுகனுபவம். என் சிறுவயதில் என் தாயார் இட்லிக்கு மாவு தயாரிக்கும் போது தொலி பருப்பை மணிக்கனக்காக ஊரப்போட்டு பிறகு நன்றாக பிசைந்து மேலுள்ள தொலியையெல்லாம் நீக்கிய பிறகு அரை அரையாக பிளக்கப்பட்ட உளுந்தம் பருப்பு மணி மணியாக வெள்ளையாய் சிரிக்கும். தாயார் அதை கழுவிக் கொண்டிருக்கும் போதே அதை பார்க்கும் சாக்கில் ஊறப்போட்ட அரிசியை வாய் கையுடன் சண்டைப்போட வாய் கோபித்துக் கொண்டு அனிச்சையாக வாயிலிட்ட அரிசியை கிரைண்ட் பண்ணிக் கொண்டிருக்கும். ஒற்றைக்கண்ணால் பார்த்துக் கொண்டே "எலே அரிசி திங்கதலே. அப்புறம் ஒன் கல்யாணத்தப்பம் மழை பெய்யும்" என்பார். என் கல்யாணத்தப்பம் மழை பெய்தால் என்ன? குடை பிடிச்சிட்டு போவம்ல? என்று நான் நினைத்திருக்கும் வேளையில் என் சித்தியின் கல்யாணத்தின் போது பெய்த மழையும் கோவிலுக்கு பொண்ணு மாப்பிள்ளை சென்றிருந்த போது வேட்டியையும் சேலையையும் தூக்கிக் கொண்டு வழுக்கி விழாத குறையாக மழையில் ஓடி வந்ததை நினைத்து சிரிப்பு சிரிப்பாக வரும்.

உளுந்தம் பருப்பை கழுவிவிட்டு இட்லி அரிசியை அவர் கழுவ ஆரம்பிப்பார். அப்படி இப்படி போக்கு காட்டிவிட்டு உளுந்தம் பருப்பும் வாயில் அரைப்பட்டுக் கொண்டிருக்கும். "எலே பருப்பை திங்காதலே. காது செவ்டா போயிரும்" என்பார். பிறிதொரு நாளில் ஆசன வாய் துவாரத்தின் உள்ளிருந்து நமட்டு நமட்டு என்று ஏதோ பிராண்டி எடுக்க டவுசருக்கு வெளியே, வைச்ச கையை எடுக்காமல் ஆசனவாயில் கையை வைத்து வெளியிலிருந்து பிராண்டா, "நீயா? நானா?" என்ற போட்டிக்கிடையில் சுகமான சொறிதல் நிகழ, இந்த வினோத நிகழ்ச்சியை கண்டுகளித்து "பச்சையா அரிசியை சாப்பிடாதே. வயித்துல பூச்சி தட்டுமுன்னு சொன்ன கேட்டியா?" என்று கன்னத்தை கிள்ளி எடுப்பார் என் அம்மா. விடுவிடுவென்று டாக்டர் வீட்டுக்கு சென்றால் எதோ கொக்கிப் புழு என்பார், பாராசைட்ஸ் என்பார், கசப்பாக மருந்து கொடுப்பார். மறுநாள் கழிப்பறை கோப்பையில் முக்கி முக்கி, மருந்து குடிச்சாதனாலே பூச்சி செத்துச்சா சாகலையான்னு ஒரு போராட்டாமே நடக்கும் என்பது தனி ட்ராக்.

இத்தனை கஷ்டங்களுக்கு பிறகு வெள்ளேந்தியாக இட்லி. ஆவி பறக்க மெத்து மெத்தென்று முதல் தவணையில் ஐந்தாறு இட்லி சாப்பாட்டு தட்டில் இருக்கும். பக்கத்திலேயே நல்லெண்ணெயில் குழைத்த தோசைப்பொடி பாகாக நீ முந்தியா இல்லை தோசைப்பொடி வண்டல் முந்தியா என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கும். அனிச்சையாக வாயில் ஜொள் நீர் ஊற "முதல்ல பொடி வச்சி சாப்பிடு கத்திரிக்காய் பச்சடி ரெடியாகிரும்" என உள்ளிருந்து குரல் வர, முதல் சுற்று ஆரம்பம் ஆகும்.

முத்தலில்லாமல் இளசாக கத்திரிக்காய் நெடுக்கு வாக்கில் வெட்டி, கத்திரிக்காயுடன் பெரிய வெங்காயம், சிவப்பு மிளகாய் போன்றவற்றை கொதிக்க விட்டு, காய் வெந்தவுடன் உப்பு போட்டு அப்படியே கொஞ்ச நேரம் ஊறவிடுவார்கள். பிறகு தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்வார்கள். அப்போதெல்லாம் மிக்ஸி இல்லாத காலத்தில் அதெற்கென்றே தயாரிக்கப்பட்ட மத்தில் காலிடுக்கில் சட்டியை வைத்து வெந்துபோன கத்திரிக்காயையும், வெங்காயத்தையும், மிளகாயையும் அரைகுறையாக மசித்து, கட்டி தட்டாமல் கொஞ்சம் கூழ் பண்ணி, இதை கொதிக்க வைத்த வடிநீரை தேவையான பதத்துக்கு சேர்க்க, கத்திரிக்காய் பச்சடி ரெடி. பினிஸிங் டச் கொடுக்க, வானலியில் தழைய தழைய எண்ணை விட்டு கொதி வந்தவுடன் கடுகைப் போட்டால் "டப்பு டிப்பென்று" வெடித்து அடங்கும் தருவாயில் பொடி உளுந்தம் பருப்பையும், கறிவேப்பிலையையும் போட "சட சட" என்ற சத்தத்தோடு அடங்க, "சொய்ங்...." என்ற சத்தத்துடன் கத்திரிக்காய் பச்சடியில் ஊற்ற தாளிக்கும் மணமும் வாயில் ஊறும் எச்சிலை அதிகப்படுத்தும்.


"நெய் இருக்கு. தோசைப்பொடியில் ஊத்திக்கோ" என்று நேற்று காய்ச்சிய நெய் பதமான சூட்டுடன் இந்த பச்சடியும் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடத்தை அடையும். காணி நிலமும், நடுவில் ஒரு கிணறும், ஓங்கி வளர்ந்த தென்னை மரமும் பாரதிக்கு. பஞ்சு பஞ்சென்ற இட்லியும், நெய் மணக்கும் தோசைப்பொடியும், சட்டி நிறைய கத்திரிக்காய் பச்சடியும்,நடுக்கென்று கடிபடும் கடுகும், மொறுமொறுவென மனத்துடன் பல்லில் உடையும் தாளித்த உளுந்தம் பருப்பும் எனக்கு.

முதல் சுற்று ஆரம்பிக்கும் தருவாயில், "டொரக் டொரக்"கென்று மாவு சட்டியை பிராண்டும் ஒலியில், ஆடை கொண்ட இட்லி தட்டு குழிகளில் மாவு ரசமாக பாயும். கம்பியூட்டர் இல்லாத காலத்தில் கால்குலேட்டர் மாதிரி குக்கர் இல்லாத காலத்தில் இட்லி அண்டா. இடை இடையே இட்லி வேகும் போது இட்லி அண்டாவின் மூடி எடுத்து தண்ணீரில் நன்றாக கையை முக்கிக் கொண்டு "வெந்திருக்கிறதா?" என்று ஆள் காட்டி விரலை வெண்ணிலவின் முகத்தில் பாய்ச்சுவார்கள். விரல் பாய்ச்சிய இடத்தில் குழி பாய்ந்து விடும். இருக்கட்டுமே.அந்த இட்லி என்னிடம் வரும் போது குழி பாய்ந்த இடத்தில் கத்திரிக்காய் பச்சடி பாய்ந்து விடும். வெந்த இட்லி தட்டு அண்டாவிலிருந்து இறக்கப்பட்டு சள்ளென்று இன்னொரு தட்டில் கவிழ்க்க இட்லி தட்டும் ஆடை அவிழ்த்து அம்மணமாக நிற்கும். "சளப் சளப்"பென்று இட்லி துணியின் பின் நீர் தெளிக்கப்பட்டு மெதுவாக மெதுவாக இட்லி துணியில் ஒரு துளி இட்லி கூட ஒட்டி விடாமல் பூப்போல பூப்போல விளக்கி விளக்கி மெதுவாக இட்லியை டாபாய்த்துக் கொண்டே இட்லி மேல் ஒட்டியிருந்த ஆடையையும் உரித்து அதையும் அம்மணமாக்கி பார்த்து விடுவார்கள். அம்மணமாக்கிப் பார்ப்பதில் எல்லோருக்கும் தான் என்ன இன்பம்?

(அடுத்த பகுதி அசைவ பிரியர்களுக்கு மட்டும். சைவர்கள் அப்பீட்டு ப்ளீஸ்)

பச்சடி பாலாறக இட்லியில் பாய முதல் ரவுண்டு இரண்டாம் ரவுண்டென சுடச் சுட நின்று நிதானமாக சதம் அடித்து தான் ஒய்வது வழக்கம். தீபாவளி வந்து விட்டாலோ இட்லிக்கு தனி மவுசு. அவிச்சுக் கொட்டி முடியாது. கறி வாங்கவிட்டால் அது என்ன தீபாவளி. நாங்கெல்லாம் கறி சாப்பிடுவதற்காக நரகாசுரனுக்கு சப்போர்ட். தீபாவளிக்கு கறி சமைப்பது என்பதில் பல்வேறு கருத்துக்கள் குடும்பத்தில் நிலவும். புனித பண்டிகைக்கு எதுக்கு மாமிசம்?. செத்தது அரக்கண்டீ. அவன் மனசு குளிர்றதுக்காகவாவது கறி எடுத்து தான் ஆகனும். எப்படியோ தீபாவளிக்கு மாமிச கறிக்கு அமோக வாக்குகள் பெற்று "சிக்கு புக்கு சிக்கன் செண்டரை" முற்றுகை இடுவோம். நாம தான் அப்படீன்ன நமக்கு முன்னால 40 பேர் தீபாவளிக்கு சிக்கன் வாங்க நிப்பானுங்க. தீபாவளிக்கு பட்சணங்களுடன் கோழி குழம்பும், இட்லியும் தூள் பறக்கும். ஒரு புரொடக்ஷன் டீம் இட்லியை அவிச்சிக் கொட்ட, users டீம் இட்லியை ஒரு கைப்பார்த்துக் கொண்டிருக்க அதுக்கு பேரு தான் தீபாவளி. பட்டாசு, புதுதுணி எல்லாம் அதுக்கு அப்புறம் தான். புதுமணப்பெண்ணை கண்ட புதுமாப்பிள்ளை போல தீபாவளி இட்லிக்கு தனி கிக்கு. ஒரு மணிக்கொருதடவை இட்லி அண்டா அண்டாவாக அவிந்துக் கொண்டிருக்கும். வயிற்று அண்டாவில் இட்லி உள்ளே போய் கொண்டிதானிருக்கும்.

இட்லிக்கு இன்னொரு ஜோடி ஆட்டுக்குடல் குழம்பு. இந்த ஆட்டுக்குடலை சுத்தம் செய்வது தான் பெரிய வேலை. கசாப்புக்கடையில் ஆட்டுக்குடலை கொடுங்கண்ணே என்று கேட்டால் ரூபாய் வாரியாக ஆட்டுகுடலை சைஸ்வாரியாக வைத்திருப்பார். பை போல இருக்கும் குடலினுள்ளே பாம்பு போல சாரை சாரையாக குடல் ட்யூப்புகள். ஒவ்வொரு ட்யூப்பிலும் அடுத்த பிராசசஸில் ஆட்டுப் புழுக்கையாக மாறலாமென ஜீரணமான ஆட்டு உணவு பித்த நீருடன் கலந்து குழம்பியாக நிரம்பியிருக்கும். ஒவ்வொரு ட்யூப்பையும் பீ இல்லாமல் நன்றாக வழித்து வழித்து கழுவி, நல்ல மஞ்சள் போட்டு கலக்கி அனாட்டாமி படித்துக் கொண்டே நமக்கு திருப்தி வரும் வரை கழுவோ கழுவென்று கழுவினால் குழம்புக்கு ஆட்டுக்குடல் ரெடி. ஆட்டுக்குடலுக்கென்ற என்ன குணமோ தெரியவில்லை. எவ்வளவு மோசமாக குழம்பு வைத்தாலும் அபார சுவையுடன் நிகழ்ந்துப் போவது தான். ஆட்டுக்குடல் குழம்புடன் இட்லியை தொட்டுச் சாப்பிடக்கூடாது. நச நசவென்று இட்லி பிரித்துபோட்டு பக்கத்தில் சட்டி நிறைய ஆட்டுக்குடல் சிறு சிறு துண்டங்களாக மிதக்க, குழம்பை இட்லியில் பொது பொதுவென ஊற்றி சோறு பிசைவது போல நல்ல பிசைந்து கவளம் கவளமாக தின்றால் தேவாமிர்தம் தோத்தது போங்க. ஆகா!!

கல்லூரி முடித்துவிட்டு வேலையில்லாமல் சென்னையில் திரிந்த போது, வீட்டில் காசு வாங்கக் கூட கூனி குறுகி கையில் இருக்கும் சொச்ச பைசாவை ஒப்பேத்த கோடம்பாக்கம் கையேந்திபவனில் இட்லி சாப்பிடும் அனுபவமே தனி. அரைகுறையாக கழுவிய அலுமினிய தட்டு. சுட சுட இட்லி. "சேர்வை" என பெயர் வைத்த சால்னாவை தட்டு நிறைய ஊற்றி பிசைந்து சாப்பிடும் போது ஆங்காங்கே மாமிசம் தட்டுப்படும். பெருநேரங்களில் அது ஆட்டுக்குடலாக தான் இருக்கும்.

கொஞ்சம் வசதியான பிறகு திருவல்லிக்கேணி "ரத்னா காபே" இட்லி அடிக்கடி அருள் புரிந்தது. ரத்னா காபேயின் பலமே அங்கு ஊற்றும் சாம்பார் தான். இரண்டு இட்லி கேட்டால் இரண்டு அண்டா சாம்பாருடன் சர்வர் வருவார். கையில் ஒரு MUG-கில் எப்போதுமே சாம்பாருடன் அலைவதை பார்த்திருக்கிறேன். சாம்பார் சாப்பிட்டு இட்லி ஊற்றிக் கொள்ள வரும் கிழடுகள் இரண்டு இட்லிக்கு சென்னை தண்ணீர் லாரியில் தான் சாம்பார் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். அண்டா நெறைய சாம்பார் ஊத்தினாலும் "என்ன கொறைய கொறைய சாம்பார் ஊத்துறே" என்று இன்னொடு கிழடு கோபித்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டே அங்கு சாப்பிடுவது இனிமை தான். [இப்போ முருகன் இட்லி சென்னை வந்திருக்குன்னு சொன்னாங்க. அங்கே சாப்பிடுறதுக்கு சான்ஸ் கிடைக்கலே]

அதுபோக சென்னை டிரஸ்ட்புரத்தில் கோடம்பாக்கம் ஹைரோட்டின் சிக்னல் பக்கத்தில் உள்ள சந்திரபவன் இட்லி எனக்கு பிடிக்கும் என்பது கொசுறு செய்தி. சரவணபவன் மினி இட்லி, 14 இட்லியெல்லாம் பார்க்கும் போது நகர வாழ்க்கையின் ஜீவன் இழந்த, ஏமற்றப்பட்ட இட்லியின் வெர்ஷனாகத் தான் அது தோன்றுகிறது.

சிங்கப்பூரில் வாரயிறுதியானால் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹாக்கரில் உள்ள தமிழர் கடையில் சாப்பிடுவது வழக்கம். சாப்பிடும் முன் என் கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ளும். எப்படி பூ பூவாக பார்த்த என் இட்லியை கிரிக்கெட் பந்து ரேஞ்சுக்கு இருந்தால் என் கண்ணில் நீர் வராமல் என்ன செய்யுமாம்?. இந்த கருங்கல் இட்லியை சாப்பிட நான் சீக்கிரமே வேறு வரவேண்டுமாம். 10 மணிக்கு மேல் போனால் இட்லி இல்லை என்பார். புரோட்டா சாப்பிடுங்க என்பார். காலங்கார்த்தாலேயே புரோட்டாவா? ஆண்டவா? இல்லையென்றால் தோசை சாப்பிடுங்க சார் என்பார். தமிழில் எனக்கு பிடிக்காத இன்னொரு வார்த்தை 'தோசை'. நொந்துக் கொண்டே வெறும் டீயை குடித்துக் விட்டு அப்பீட்டு ஆகிவிடுவது சகஜமாக நடக்கும்.

ஒரு நாள் அங்கு இட்லி வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கும் போது தான் உரைத்தது, இட்லியின் நடுபாகம் ஐஸ்பெர்க்கை விட உறுதியாக இருந்தது. சுற்றியிருந்த இட்லியின் மென்மையான பகுதியை சாப்பிட்டுவிட்டு அந்த 5 இட்லியின் நடுபாகத்தையும் அப்படியே தட்டில் விட்டு விட்டு போய்விட்டேன். மறுநாள் மிக அக்கரையாக அந்த கடைக்காரன் "என்ன சார்! நேத்து இட்லியை சாப்பிடவே இல்லீயே" என்றார். நான் "அதெல்லாம் ஒன்னுமில்லையே. அது சரி செங்கள் சூளையை சிங்கப்பூர்ல எப்போ ஆரம்பிச்சீங்க" என்றேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//காலங்கார்த்தாலேயே புரோட்டாவா? ஆண்டவா? //

நல்ல இட்லி.. சே நல்ல பதிவு.

இட்லி தான் தமிழனின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு என்பதில் எனக்கு
சந்தேகமே இல்லை.
 
//... தமிழில் எனக்கு பிடிக்காத இன்னொரு வார்த்தை 'தோசை'.

...இட்லியின் நடுபாகம் ஐஸ்பெர்க்கை விட உறுதியாக இருந்தது. ...

..."என்ன சார்! நேத்து இட்லியை சாப்பிடவே இல்லீயே" என்றார். நான் "அதெல்லாம் ஒன்னுமில்லையே. அது சரி செங்கள் சூளையை சிங்கப்பூர்ல எப்போ ஆரம்பிச்சீங்க" என்றேன்.// -- ஜோக்கடித்தது அல்வாசிட்டி.விஜய்


ஞானபீடம் சொல்வது:
நா இப்போ என்ன சொன்னாலும் அது
நீர் சொன்ன அளவுக்கு
அவ்ளோ டேஸ்ட்டா இருக்காது.
அதுனால அப்பீட்டு !

இருந்தாலும்
ம்...பரவால்ல நல்லாத்தேன் எழுதுறீரு :-)

***********
- ஞானபீடம்.
***********
 
விஜய்
இரவு இரண்டாவது ஆட்டம் திரைப் படம் பார்த்துவிட்டு, நண்பர்களோடு சைக்களில் இரவு நேர கடைகளில் நல்லா சுட சுட இட்லி மற்றும் ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு அப்படியே நல்ல வாழைப் பழம் சாப்பிட்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்த காலங்கள் மீண்டும் வருமா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
இரவு 1 மணிக்கு மதுரை முதலியார் கடை இட்லியும்..முட்டை தோசையும்..ஆஹா..
 
இயல்பிசம், போஸ்ட் மார்ட்டமிசம் எல்லாம் கலந்து செய்த இட்லி பிரமாதமப்பு...
 
இன்னுமே இட்லியை பாத்தாலும் தமிழ்மண ஞாபகம் தான் வரப்போதா?
 
இட்லி புரதச்சத்து மிகுந்த சுவையான பதார்த்தம்.
 
மதுரையில் முருகன் என்ற இட்லிக்கடை மிகவும் பேமஸ். இட்லி மல்லிகைப்பூ போல மிருதுவாக இருக்கும். நான் பலமுறை சாப்பிட்டு இருக்கிறேன். சு.சாமி இங்கு வந்தபோது ஏன் அந்த கடையை உடைத்தீர்கள் என பேட்டியின்போது கேட்டேன். அதற்கு அவர் என்னிடத்தில் முருகன் பிராமனர் இல்லை என்று சொன்னார். அதற்கான ஆதாரங்களையும் என்னிடம் காட்டினார். எனக்கு அவரின் பதில் பிடித்து இருந்தது.
 
ச்சும்மா இருக்க மாட்டீங்களே! இப்ப என்னாத்துக்கு இந்த இட்லி விவகாரம்?

இங்கேயே மாவு புளிக்காம 'கல் இட்டிலி' செஞ்சு செத்துக்கிட்டு இருக்கோம். இதுலே அருமையா நாலு வகைச் சட்டினியோட வாழையிலையில் வச்ச இட்டிலிப் படம் வேற!!

இட்டிலிக்கு ஏங்கற வயிறு இப்ப எரிஞ்சுக்கிட்டுவேற இருக்கு!

இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது:-)

என்றும் அன்புடன்( இப்படி எழுதறதே இப்ப ஒரு பொய்!)
துளசி.
 
மேலே ச.திருமலை என்ற பெயரில் வந்தது யார் என்பது எனக்கு தெரியாது என்றாலும், இட்லிக்கும் சாதீய சாயம் பூசி வம்புக்கு இழக்கலாம் என எண்ணும் படி தன்னை ஒரு புத்திசாலி என்ற நினைப்புடன் பின்னூட்டியிருக்கிறார். பதிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தேமேயில்லாமல் மற்றொரு பெயரை பயன்படுத்தி ஓலைபாயை பார்த்த நாயாக மோண்டுவிட்டு சென்றிருக்கலாம் என்பது என் அனுமானம்.
இங்கே பின்னூட்டமிட்ட ச.திருமலை என்ற போலி பெயர் என்று தெரிகிறது. டோண்டு பிரச்சனை மாதிரியானதாக இருக்கலாம். வலைப்பதிவு வட்டாரத்தில் இந்த ச.திருமலை என்பவர் இருப்பதாக தெரியவில்லை. என்னுடைய நண்பர்களும் ப்ளாக்கர் கணக்கு இல்லாமல் பின்னூட்டவது வழக்கம். எனக்கு யாரும் திருமலை என்ற பெயரில் நண்பர்கள் இல்லை. நான் எங்கும் அவரின் பின்னூட்டம் படித்த ஞாபகமுமில்லை. ச.திருமலை என்பவர் ஒருவர் இருந்தால் அவர் மேல்கண்ட பின்னூட்டம் இடவில்லை எனில் அவர் பெயரிலிட்ட பின்னூட்டத்துக்கு மறுப்பு தெரிவித்தால் நலம். அவரை முன் வரும் படி கேட்டுக் கொள்கிறேன்.

ச.திருமலை என்ற பெயரில் எவரோ பின்னூட்டியபோது வந்த ஐபி எண் மற்றும் விவரங்கள்:


IP Address: 219.95.194.162
Country Flag County / State / Province : MELAKA
City: MALACCA
ISO Country Code : MY
Country ISP : MALAYSIA ADSL-STREAMYX-TMNET

 
என்னுடன் இட்லி உண்டு கருத்தை நவிழ்ந்த '????', தங்கமணி,ஞானபீடம், முகமூடி, பாலாஜி பாரி,மணிக்கூண்டு சிவா,எல்.எல்.தாஸூ, ரா.ரா, துளசியக்கா.

தங்கமணி,

இட்லி தமிழனின் அரிய கண்டுபிடிப்பு என்பதில் சந்தகமே இல்லை.இட்லியில் அரிய தத்துவமே அடங்கியிருக்கிறதென நண்பர் பாலுமணிமாறன் புகழ்பெற்ற ஒருவரின் மேற்கோள் ஒன்றை அடிக்கடி சொல்லுவார்.

"நாளை என்ற நம்பிக்கையில் இன்றே இட்லிக்கு மாவு ஆட்டி வைப்பவன் தமிழன்"


பாலாஜி பாரி, சரி விடுங்க இந்த வாட்டி மதுரைக்கு போகும்போது மாமியார் வீட்டு இட்லி வேண்டான்னுட்டு முதலியார் கடை இட்லியை கலக்கிற வேண்டியது தான்.

துளசியக்கா, அப்போ உங்க வீட்டுல இட்லி செய்றப்போ எல்லாம் இட்லி கிரிக்கெட் தான்னு சொல்லுங்க. பார்த்து சிக்ஸர் அடிக்கிறேன்னு கோபால் மண்டைய பதம் பார்த்துறாதீங்க:-))))
 
என் இனிய நண்பர் ச. திருமலை அவர்கள் இம்மாதிரி லூசுத்தனமாக எழுதக் கூடியவ்ரே அல்ல. அவர் பெயரில் அசட்டு பின்னூட்டம் இட்டவர் போலி டோண்டுவே என்பது வெள்ளிடை மலை.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப்பதிவில் நகலிடப்படும்.

பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
Dear Vijay

Thanks a lot for understanding the skirmishness. Yes It was not posted by me. I dont have any blogger-id. I write only in RKK, Marathadi, Tamilviam. I occassionally post feedbacks in some blogs that allow annonymous feedback. I know who did this. Please read the warnings that I posted in RKK and Marathadi regarding that perverted bastard. He is from Singapore and Malaysia and well known lunatic in the net world. Even after exposing him, he still continues to do this dirty tricks. I sent a personal mail also to you exposing his obscene face. Since you are also in Singapore you can take some actions too.

Dear Mr.Dondu. Thanks for your timely post.

I request all other bloggers who read this to cross-check with me if you happen to read any reply on my name. I request all of you to totally ignore this perverted maniac.

Thanks
Regards
Sa.Thirumalai
I dont have any blog yet
I am not going to post any replies in blogs. If I want to send my feedback I'll do so by sending a personal mail only.
 
விஜய், இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை. இங்கே ஒருத்தன் ராத்திரிக்கும் cereal'ஐயே சாப்பிட்டுட்டு படுத்துடலாமான்னு யோசிச்சிட்டிருக்கும் போது இட்லி புராணம் வாசிக்கிறீங்களா?

எழுதுனது தான் எழுதுனீங்க.. படமும் போடனுமா என்ன? நாங்கெல்லாம் இட்லி பார்த்ததில்லையா?

நல்லாயிருங்க. :-(

(இங்கே சரவணபவன் ஆரம்பிச்சிருக்காங்களாம். வாரயிறுதியில எங்கேயிருக்குன்னு தேடனும்.)
 
This comment has been removed by a blog administrator.
 
நன்றி நவன் தலீவா.

//எழுதுனது தான் எழுதுனீங்க.. படமும் போடனுமா என்ன? நாங்கெல்லாம் இட்லி பார்த்ததில்லையா? //

உங்களையெல்லாம் வெறுபேத்தனும்னு தான். பார்த்த உடனே ஜொள்ளு வடிஞ்சதா?
 
முன் வந்து விளக்கமளித்தற்கு நன்றி ச.திருமலை.

டோண்டு, திருமலை, இந்த போலிக்கு ரொம்ப மெனக்கெடாதீர்கள். நீங்கள் சிலிர்ப்பதால் போலிகளுக்கு இளப்பமாக இருக்கிறது. ரோட்டில் கிடக்கும் பீ என ஒதுங்கிச் செல்லுங்கள்.அவருக்கு முக்கியதுவம் கொடுத்து அவரை பெரிய ஆள் ஆக்காதீர்கள். போலி எது உண்மை எது என என்னால் பிரித்தறிய இயலும். டோண்ட் ஒர்ரி.
 
யோவ் அல்வா, இதே வேலைய்யா உமக்கு!

உம்ம இட்லிப்படத்தப்பாத்து எனக்கு ஆசை வந்து நேத்து ஆனந்தபவன் ல 'கை' வைச்சிட்டேன்.

சுவையான பதிவு/ நன்றி.

எம்.கே.
 
விஜய்,
ஏங்க இப்படி வயித்தெரிச்சலை கொட்டிக்கிறீங்க.. ? இதுக்காகவேனும் தமிழ்நாட்டுக்கு 6 மாசத்துக்கு ஒரு முறை போகணும்.
 
/// "எலே அரிசி திங்கதலே. அப்புறம் ஒன் கல்யாணத்தப்பம் மழை பெய்யும்" என்பார். என் கல்யாணத்தப்பம் மழை பெய்தால் என்ன?//

விஜய்,
கடைசியில் உங்க கல்யாணத்துக்கு மழை பெய்ஞ்சுச்சா இல்லையா ?

///அதுபோக சென்னை டிரஸ்ட்புரத்தில் கோடம்பாக்கம் ஹைரோட்டின் சிக்னல் பக்கத்தில் உள்ள சந்திரபவன் இட்லி எனக்கு பிடிக்கும் என்பது கொசுறு செய்தி.////

வாழ்க்கையில் மிகவும் ரசித்துச் சாப்பிட்டவைகளில் இந்தச் சந்திரபவன் ஓட்டல் முழுச்சாப்பாடு முதலிடம் வகிக்கிறது. அடடா... என்ன சுவை.. ஆகா..ஓகோ.. பேஷ்..பேஷ்.. இதுக்கு மேலே என்ன சொல்றதுன்னு தெரியலை. அது மாதிரி சமையல் பண்ணத் தெரிஞ்ச பொண்ணு கிடைச்சா அடுத்த நிமிடமே காலில் விழுந்து கட்டிக்கலாம் :-).

///தமிழில் எனக்கு பிடிக்காத இன்னொரு வார்த்தை 'தோசை'.///
:-)

//மறுநாள் மிக அக்கரையாக அந்த கடைக்காரன் "என்ன சார்! நேத்து இட்லியை சாப்பிடவே இல்லீயே" என்றார். நான் "அதெல்லாம் ஒன்னுமில்லையே. அது சரி செங்கள் சூளையை சிங்கப்பூர்ல எப்போ ஆரம்பிச்சீங்க" என்றேன்.//

மனுசன் கடுப்பாகி அடுத்த தடவை உண்மையான செங்கல்லை கொடுக்கப்போகிறார், அப்பவும் நீங்கள் இதையேதான் சொல்லப்போகிறீர்கள் :-).
 
நன்றி எம்.கே.குமார். இன்னும் ஆனந்த பவன் தானா? எங்களுக்கெல்லாம் கல்யாணம் சாப்பாடு போட்டாச்சி, உங்களுக்கு வீட்டு சாப்பாடு எப்பய்யா?
 
முத்து, டிரஸ்ட்புரம் சந்திரபவன் தெரியுமா? கையை கொடுங்க முதல்ல. நம்ம கட்சி நீங்க.

அப்புறம் கல்யாணத்துக்கு மழையெல்லாம் பெய்யல. ஜீன் மாசத்துல எங்கெங்க மழை.

நன்றி முத்து.
 
டேய் ஓய ஓக்க. குச்சிக்காரி கூதி மகனே. அங்கே திட்டிவிட்டு இங்கே ஒன்னும் தெரியாத மாதிரியா இருக்கிறாய். ஒம்மாளபோட்டு ஒழுக்க. தேவடியா கூதி மகனே.

திருமலையும் உன் அம்மாவைப்போட்டு ஒழுத்தானா? முருகனுமா ஒழுத்தான்? டோண்டுவும் ஒழுத்தானா? எஸ்கேயும் ஒழுத்தானா? இன்னும் வேறு யாரெல்லாம் ஒழுத்தார்கள்? ஓத்தா.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->