<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தரம்.. குணம்.. மணம்.. திடம்...

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
எழுத முடியவில்லை. ஒரு எழவும் எழுத முடியவில்லை. நான் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்தாலும் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது என்னையே அடிக்கடி ஓரக்கண்ணால் பார்க்கிறாளே லாவண்யா அவளுக்கு தான் இந்த காதல் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். நியூஸ் பேப்பரிடை அகப்பட்ட பஜ்ஜி போல மூளையை கசக்கிப் பிழிகிறேன். எழுதவே வரமாட்டேங்கிறது. அவள் பெயர் எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? அவளுக்கு என் பெயரும் தெரியும் தெரியுமா? ஆனாலும் நாங்கள் அவ்வளவு அன்னியோன்யம் கிடையாது. அவள் நான் நர்ஸ் உடையில் இருக்கும் போது என் சட்டையில் குத்தியிருக்கும் பெயர் பட்டியிலிருந்து பெயரை கட்டாயம் படித்திருப்பாள். என்னையே திரும்பி திரும்பி பார்க்கிறவள் என் பெயர் பட்டியிலிருந்து பெயரை படிக்காமலா இருப்பாள். நீங்களே சொல்லுங்கள். நான் அப்படி நினைப்பதில் என்ன தவறு. அட! இன்னமும் எனக்கு அவளின் பெயர் எப்படி தெரியுமென்று சொல்லவே இல்லை இல்லையா? கொஞ்சம் இருங்க கையிலிருக்கும் பால்பாயிண்ட் பேனாவை உதறினாலாவது அவளுக்கு எழுத எதாவது பாயிண்ட் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். பேனா மயிரும் சரியா எழுத மாட்டேங்குது.

ஆங்! அவளும் நான் வேலைப்பார்க்கும் அதே ஆஸ்பத்திரிக்கு பக்கத்து ஏரியாவில் இருக்கும் பிரைவேட் க்ளினிக்கில் நர்ஸாக வேலைபார்க்கிறாள். என்னுடைய உடுப்பை விட அவள் உடுப்பு படு சோக்கா இருக்கும். காலை 9 மணிக்கு நான் பஸ்ஸை விட்டு இறங்கும் போதே என்னை வரவேற்பது போல பஸ் ஸ்டாண்டிலேயே நிற்பாள். படிய வாரிய தலை பின்னாடி சின்ன பன் கொண்டை குட்டி தேவதை மாதிரியே என்னை பார்த்துக் கொண்டே நிற்பாள். என்ன இருந்தாலும் அவளுக்கு தலையில் முடி ரொம்ப ரொம்ப கம்மி. பரவாயில்லை கல்யாணத்துக்கு பிறகு குழந்தை அபிவிருத்தி திட்டத்திற்கு ப்ளான் போடுகிறேனோ இல்லையோ அஸ்வினி ஹேர் ஆயில் வாங்கிக் கொடுத்து அவளின் கூந்தல் வளர்ப்பு திட்டத்திற்கு தான் என் முதல் ப்ளான் போடுவேன். என்னது இது? உங்களிடம் கண்டதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். பார்த்தீங்களா! கடைசி வரை அவள் பெயரை எனக்கு எப்படித் தெரியும் என சொல்லவே இல்லை பார்த்தீங்களா!.

என்னைப் போலவே அவளும் நர்ஸ் உடுப்பு போட்டு வரும் போது என்னைப் போலவே அவளும் ஒரு பெயர் பட்டி குத்தியிருந்தாள். ஆரம்பத்தில் நான் அவளின் பெயர் பட்டியை உத்து உத்து பார்த்து பெயரை தெரிந்துக் கொள்ள எவ்வளவோ கஷ்டப்பட்டேன். நான் அவளின் மாரை தான் பார்க்கிறேனென்று உடுப்பின் மாராப்பை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள். எனக்கே சங்கடமாகி விட்டது.எப்படியாவது அவளின் பெயரை நான் தெரிந்துக் கொள்ள வேண்டும். கஷ்டப்பட்டு எச்சில் விழுங்கி அவளிடம் நெருங்கினேன். மணி கேட்க. "எக்ஸ்கியூஸ் மீ, என்ன மணி?" என்று நெருங்கி கேட்ட சாக்கில் அவளின் பெயரையும் "லாவண்யா" என்று படித்துவிட்டேன். அவளுக்கு தெரியும் ஆம்பளை பசங்க வாட்ச் கட்டியிருந்தாலும் மணி கேட்பார்கள் என்று அதனால் என் கையில் வாட்ச் இருந்தாலும் நான் வெட்கப்படாமல் மணி கேட்டேன்.

இன்னிக்கு ஞாயிற்றுகிழமை. எனக்கு இன்னிக்கு ராத்திரி ஷிப்ட். எப்படியும் லாவண்யாவுக்கு காலை ஷிப்டா தான் இருக்கும். இந்த லவ் லெட்டர் எழுதி முடிச்சவுடனே அவங்க ஏரியா பக்கம் போய் நின்னா அவ பிரண்டுக்கிட்ட பேசிக்கிட்டே அந்தப்பக்கம் வருவா.

"எக்ஸ்கியூஸ் மீ, இந்தாங்க லெட்டர்" இது எப்படியிருக்கு? போஸ்ட்மென் கூப்பிடுகிறமாதிரி இருக்கா?. இப்போ நான் லைட்டா சிரிக்கிறேன். எப்படியிருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க. "எக்ஸ்கியூஸ் மீ மேடம். தி இஸ் எ லெட்டர்". இந்த இடத்தில "தி இஸ் எ லெட்டர்"ன்னு சொன்ன "இது ஒரு லெட்டர்"ன்னு தமிழ்ல அர்த்தமாகும் இல்லையா? நான் நல்ல புன்முறுவலித்தேனா? ஓ! கொஞ்சம் நல்ல சிரிக்கனுமா? கொஞ்சம் இருங்க. அந்த வாக்கியத்தில 'எ லெட்டர்' வராது இல்லை. இங்கிலீஸ் கிராமர் படி இது ரைட்டு தான். ஆனா இவளுக்குன்னே 'எ லெட்டர்' உதைக்குதே. 'எ லெட்டரை' 'லவ் லெட்டர்'ன்னு மாத்துனா என்ன? 'எக்ஸ் க்யூஸ் மீ. திஸ் இஸ் லவ் லெட்டர்'. சீ சீ நான் ஒரு அசடு. லவ் லெட்டர்ன்னு ஊரெல்லாம சத்தம் போட்டா கொடுப்பாங்க?. 'எ'வும் வேண்டாம் 'லவ்'வும் வேண்டாம், வெறும் 'தி இஸ் லெட்டர்'ன்னு சொல்லிக் கொடுத்திடலாம். அவ தனியா வந்தா பரவாயில்லை. பிரண்டுகளோட வந்த என்ன செய்றது. இன்னாத்துக்கு தைரியாம அவங்க முன்னாடியே கொடுத்திட வேண்டியது தான். எனகென்ன பயமா? அவங்களும் சாட்சியா இருப்பாங்கல்ல. 'ஹி ஹி ஹி ஹி எக்ஸ் க்யூஸ் மி திஸ் இஸ் லெட்டர்'. சரி ஏதோ ஒன்னு இப்படியே சொல்லி கொடுத்திர வேண்டியது தான்.


ஒரு வழியாக எழுதிய லவ் லெட்டரை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டு நேர நான் கமலா தியேட்டர் ஸ்டாப்புல 37B எடுக்குறேன். அதாங்க 37B, திரு.வி.க நகர் போகும்ல அந்த பஸ் தான். எழவு ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் இந்த பஸ்ல கூட்டம் கொறய மாட்டேங்குது. வாசலில் ஏறியது தான் தெரியும் பலாப்பழத்தின் கொட்டையை பிதுக்குவது போல என்னை பிதுக்கு உள்ளே தள்ளி விட்டுவிட்டார்கள். ராம் தியேட்டர் பக்கம் வர பஸ்ஸில் துரும்பு நிற்க கூட இடமில்லை. எனக்கு திக்கு திக்குன்னு அடிச்சிக்குது. அந்த பக்கம் ஒரே பொம்மனாட்டிங்களா நிக்கிறாங்க. ஒருவாட்டி இப்படி தான் தெரியாதனமா பொம்மனாட்டி ஸீட்டுல உட்கார்ந்துட்டேன்னு ஒரு பொம்மனாட்டி என்னை கம்மனாட்டி கணக்காக எரித்துப் பார்த்து "இந்தாப்ப பொம்பளைங்க நிக்கிறாங்க. கண்ணி தெரியலா. இன்ன பொம்பளை ஸீட்டுல உட்கார்ந்துகின்னு" என்று 50 பேருக்கு முன்னியில் என்னை எழுப்பி விட்டதற்கு பதிலாக அந்த ஜன்னல் வழியாக உருட்டி விட்டுருக்கலாம். ஸீட்ல உட்கார்ந்ததுக்கே இப்படின்னா? இடிச்சா? இருந்தாலும் மிடில் ஏஜ் பொம்மனாட்டிங்க ஸீட் கேட்டு எழுப்பி விட்ட மட்டும் தான் கோபம் பொத்துக்கிட்டு வருது. மானம் காத்துல பறக்குது. அது ஏன்னு தெரியல, ஜிலு ஜிலுன்னு ஜீன்ஸ் போட்டுக்கிட்டு எந்த பொண்ணாச்சும் "ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ திஸ் இஸ் பார் லேடிஸ்" என்று லேடிஸ் ஸீட் கேட்டால் அப்படி என் மானம் ஒன்றும் பெரிதாகப் போய்விடுவதில்லை.

ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா வியர்த்துக் கொட்டுகிறது. இவன் என்னடாவென்றால் ஓவ்வொரு ஸ்டாப்பாக நிப்பாட்டுகிறான். அது சரி இது என்ன கால் டாக்ஸியா கப்புன்னு ஏறி உட்கார்ந்தால் 'கப்புஜிக்கால்' என்று போற இடத்துல இறக்கி விடுறதுக்கு. இது கவர்மெண்டு பஸ்ஸூ அப்படித்தான் போவான். நான் பயணம் செய்துக் கொண்டிருக்கிற 37B மாநகர பேருந்து கோடம்பாக்கம் ஹைரோடு வழியாக ஆட்டோ ஓட்டுபவனை போல பஸ்ஸூம் புட்டத்தை ஒரு தினுசாக சாய்த்துக் கொண்டு ரோடில் பெயருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.

வந்தது பாரு மீனாட்சி காலேஜூ. கலர் கலரா பிகருங்க. அய்யோ அய்யோ ரெண்டு கண்ணும் பத்தலையே ரெண்டு கண்ணும் பத்தலையே. சே என்ன கலரு? என்ன பிகரு? என்ன ட்ரெஸ்ஸூ? நாமளும் ஒன்னை தேடிப்போகிறோம் என்ற நெஞ்சுக்கு நீதி கூட இல்லாமல் சைஸ்வாரியாக மானவாரியாக கண்கள் மேய்ந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் நான் பஸ்ஸூல லேடிஸ் பக்கம் போயிரக்கூடாதுன்னு உசாரா இருக்கேன். எருமை மாடுங்க மாதிரி என் பின்னாடியிருந்து ஆம்பிளைங்க முட்டித்தள்ளுறாங்க. நானும் பல கொண்ட மட்டும் ஹெர்குலிஸ் தனமாக அவர்களின் பாரம் முழுவதும் என் முதுகில் தாங்கிக் கொண்டிருக்கிறேன். கால்கள் எல்லாம் தினவெடுத்துப் போகின்றன. முன்னாடி நிற்பவளுக்கும் எனக்கு ஒரு அடி ஸ்கேல் தூரம் தான்.

சனியன் பிடிச்ச கண்டக்டர் முன்னாடி போ முன்னாடி போ என்று கூவுகிறார். எங்கே முன்னாடி போன இந்த பொம்பளை மேல இடிக்க வேண்டியது தான். ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு உரசு உரசித்தான் பார்த்துடலாமே என்று என்னுடைய ஈவில் மனம் கூவுகிறது. கூட்டமா தானே இருக்கு. அது அவங்களுக்கு தெரியாதாக்கும். அதுக்கு என்ன செய்ய முடியும். கூட்டமின்னு இருந்தா இடிபட தான் செய்யும். இந்த பக்கம் நிக்கிற பொண்ணை பாரு அது என்னை உரசிக்கிட்டு தானே நிக்குது. நானும் இந்த சாக்குல இப்படியே நவுந்து போய் உரசிப் பார்த்தா தான் என்னவாம். ஆகா! பஸ்ஸூ முக்கி முக்கி கோடம்பாக்கம் பிரிட்ஜ்ல ஏறிக்கிட்டு இருக்குதே. டிரைவரும் கியரை மாத்தி மாத்தி போடுகிறார். வண்டி பயங்கர ஜெர்க் ஆகிறது. இதோ ஒரு தடவை அந்த பொம்மனாட்டிக்கு பின்னாடி இடிச்சுட்டேன்.

என்னுடைய லட்சிய பயணம் தடம் மாறுகிறது. என் ரம்பையை காணச் செல்லும் இந்த பயணம் தடம் மாறி சொர்க்கப்புரிக்கு செல்கிறது. இது மாநகர பேருந்து அல்ல. இன்பச்சுற்றுலா பேருந்து. இன்னொரு ப்ரேக். இன்னொரு இடி. என் பெயர் ராகுலா? இல்லை இடி அமீனா? கலக்கிட்டேடா கண்ணா என்று லாவண்யாவை மறந்த சுகத்தில், அவளுக்கு எழுதிய லவ் லெட்டர் என் பாக்கெட்டில் இருந்தும் உறுத்தாத நிலையில் நான். அடுத்த ப்ரேக் போடும் வேகத்தில் ஏதோ ஒன்று மரக்கட்டை என என் அடிப்பாகத்தை தாக்கிய வேகத்தில் காயடிக்கப்பட்ட மாடாக "பரதேசி நாய்ங்க உரசுரதுக்குன்னே பஸ்ஸூல வரனுக" என்று வாழ்த்தொலியும்,மங்கல வாத்தியங்களும் முழங்க வள்ளுவர் கோட்ட ஸ்டாப்பில் தூக்கி எறியப்பட்டேன். யப்பா! என்ன வலி வலிக்கிறது சாமீ.... என்று அடிவயிற்றை பிடித்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிலேயே சுருண்டு விழுகிறேன். அடிவயிற்று வலியால் வாயில் எடுக்க முயற்சிக்கிறேன். சளி சளியாக வாயிலிருந்து வழிகிறது.

(இந்த கதையில் ஒரு 'தரம்' இருக்க வேண்டும் என்பதற்காக) வழக்கமாக வள்ளுவர் கோட்டம் பக்கம் லாவண்யா இருக்கமாட்டாள். எதற்கோ அந்த பக்கம் வந்தவள், நான் சுருண்டுக் கிடப்பதை 'ஒரு தரம்' அதே பார்வையில் பார்த்துச் செல்கிறாள்.'ஈவு இரக்கம் இல்லாத ராட்சசி'. இன்னும் அவளுக்கு எழுதிய லவ் லெட்டர் பாக்கெட்டிலேயே இருக்கிறது.

(இந்த கதையில் 'குணம்' இருக்க வேண்டும் என்பதற்காக) நான் வயிற்றைப்பிடித்து சுருண்டு கிடப்பதை கண்டு கிராமத்து பெரியவர் தோற்றதில் இருக்கும் அந்த வயதானவர் தண்ணீர் பாட்டிலுடன் நெருங்கி வருகிறார். தண்ணீருக்கே சென்னை தவம் இருக்க, அவரின் உதவும் 'குணம்' கண்டு வாங்கிய இடியும், அதனால் வந்த வலியும் ஓடப்பார்க்கிறது. "இந்தாங்க தம்பீ! தண்ணி குடிங்க சரியாப் போயிரும்" என்று என்னவென்றே தெரியாமல் என்னை அசுவாசப்படுத்துகிறார்.

(இந்த கதையில் 'மணம்' இருக்க வேண்டும் என்பதற்காக) வலி இப்போது தேவலாம் போலிருக்கிறது. ஆனால் இன்னும் வலிக்கிறது. அந்த நேரத்தில் வள்ளுவர் கோட்ட குப்பைக் கிடங்கை நோக்கி சென்னையில் குப்பைகளை அள்ளிக் கொண்டு ஓனிக்ஸ் லாரி ஓன்று சுகந்த 'மணம்' பரப்பிக் கொண்டே என்னைக் கடந்து செல்கிறது.

(இந்த கதையில் திடம் இருக்க வேண்டும் என்பதற்காக) என்னை மேலும் மேலும் அசுவாசப்படுத்திக் கொள்கிறேன். குணம் நிறைந்த பெரியவர் நான் உட்காருவதற்காக பஸ் ஸ்டாப் திண்டில் இடம் ஒதுக்கிக் கொடுக்கிறார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் வாய்த்தது இந்த மாதிரியான இடிஅமீன் வாழ்க்கை. அப்போதெல்லாம் பெண்கள் அவ்வளவு முன்னேறவில்லையே?.நான் ஒன்றும் அந்த மாதிரி அடிவாங்கவில்லையே?. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அதற்கு இப்போது வாய்ப்பு கிடைக்க, அப்பப்பா எவ்வளவு முன்னேறி விட்டார்கள் இந்தப் பெண்கள். ஒளிபடைத்த கண்ணிணாய் வா வா வா... இடி படைத்த கையினாய் வா வா வா....

(கதைக்கு பின்-நவீனத்துவ டச்சப்)

மின்சார கம்பியில் சாக்கடித்து தொங்கும் அந்த காக்கையின் வாயிலிருந்து புலி பல் தெரித்து உதிரமாக புழுக்கள் கொட்டிக் கொண்டிருக்கிறது. என் சாம்பல் நிற குறுதியில் அந்த புழுக்கள் விழுந்து பாதரசமாக தெரித்து வள்ளுவர் கோட்டம் ஹை ரோடெங்கும் ஓடுகிறது. அதி பயங்கரி ஆதி சூலினி சூன்யகாரி கிழவி வழிந்தோடும் என் பாதரச குறுதியை தொட்டு தொட்டு ருசி ஊறுகாய் போல நக்குகிறாள். தன் நெற்றிக்கண் குழந்தைக்கு கையிலுள்ள கமண்டலத்தில் பாதரசத்தை அள்ளி அள்ளி பருக வைக்கிறாள். பல்லின பல்லிகள் ராட்சத டைனோக்கள் பக்கத்திலிருந்த கூவத்திலிருந்து என் பாதரச குறுதியில் நனைந்து விளையாட எம்பிக் குதித்து எக்காளமிடுகின்றன. வாய் வாய் புலி வாயென்று கம்பியில் தொங்கு காக்கையும், கொட்டும் இரும்பு புழுக்களும், கண்ணாடி பூக்களும் ஓலமிடும் என்னைப் பார்த்துக் கொக்கரிக்கின்றன.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
தாங்க முடியலப்பா உன் ரவுசு, படிக்க நல்லா இருந்துச்சி, ஆனா யின்னா சொல்லவறனு கட்சி வரிக்கும் புர்யலப்பா...(பின் நவீனத்துவம்??)

போயி தூங்குப்பா நேரம் ஆயிடுச்சியில்லயா...
 
பின் நவீனத்துவம் சூப்பரு , பிரேம் - ரமேஷ் மட்டும் இதைப் பார்த்தாங்கன்னா
உமக்கு பெரிய பட்டமே கொடுத்துருவாங்க :-)
 
:-))
 
:00
 
அன்புள்ள விஜய்,

வீட்டிலே 'அம்மிணி' திரும்பிவர்ற வரைக்கும் கதை முயற்சியா?

நல்லாப் புரிஞ்சுக்கிட்டு இருந்த கதை பின் நவீனத்துவம் வந்ததும் ஒண்ணுமே பி(பு)ரியாமப் போச்சே!
 
பின் நவீனத்துவத்தில கலக்கிட்டியப்பா? அது உண்மையிலேயே பின் நவீனத்துவம் தானா? அல்லது கதாநாயகன் பின்னாடி உரசுனதுனால கதை 'பின்' நவீனத்துவம் (காயடிக்கப்பட்டது) ஆனதா?
 
ரொம்ப மெனக்கிடாம... பின்னூட்டம் மட்டும் படிச்சேன்... சூப்பர்:)
 
ரொம்ப எதார்த்தமா இருந்தது.. கொஞ்சம் பதார்த்தமாவும் இருந்தது.. நான் ரொம்ப ரசிச்சேன் விஜய்...
 
பஸ்ஸூல உரசுறவனை எல்லாம் அப்படிதான் காயடிக்கனும்னு நவீனத்துவமா சொல்றீங்க போல :-))) அப்படின்னா பஸ்ல போற எல்லா பொண்ணுங்களும் பாக்கு வெட்டியோட தான் அலையனும்.

நவீனத்துவம் பின் நவீனத்துவம் எல்லாம் என்ன எழவு (அந்த ராகுல் ஸ்டைலில்)?
 
//
குழலி said...
ஆனா யின்னா சொல்லவறனு கட்சி வரிக்கும் புர்யலப்பா...(பின் நவீனத்துவம்??)//

//துளசி கோபால் said...
நல்லாப் புரிஞ்சுக்கிட்டு இருந்த கதை பின் நவீனத்துவம் வந்ததும் ஒண்ணுமே பி(பு)ரியாமப் போச்சே! //

//அல்வாசிட்டி.சம்மி said...
பின் நவீனத்துவம் முன்னாடி வர படிக்கிறதுக்கு நல்லாத்தான் இருந்துச்சி, ஆனா அதுக்கு அப்புறம் ஒன்னும் புரியலை. //

பின் நவீனத்துவம்ன்னு அதை எழுதுன எனக்கே புரியல. உங்களுக்கு எப்படி புரியும்?. அப்படி புரிஞ்சிருந்த நீங்க ஒரு ஞானி தான் :)
 
தனியா தனியா சொல்லாவிட்டாலும் பதிவை படித்த பிறகு பின்னூட்டமிட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
 
கதைக்கு பின்-நவீனத்துவ டச்சப்பில் நல்ல சிந்தனை ..

மின்சார கம்பியில் சாக்கடித்து தொங்கும் புழுக்கள் விழுந்த ருசி ஊறுகாய், தொட்டு அள்ளி அள்ளி பருக வாய் ஓலமிடும்..

டேஸ்ட் நல்லாயிருந்துச்சா.??
 
நன்றி லபக்கு தாஸ்.

//மின்சார கம்பியில் சாக்கடித்து தொங்கும் புழுக்கள் விழுந்த ருசி ஊறுகாய், தொட்டு அள்ளி அள்ளி பருக வாய் ஓலமிடும்..//

உவ்வே ஒரே இனிப்பு கசப்பு புளிப்பு துவர்ப்பு ஈயம் இரும்பு டேஸ்ட்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->