<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சத்தியராஜின் இங்கிலீஷ்காரன் அலும்பு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
யப்பா! இந்த சத்தியராஜோட அலும்பு தாங்கமுடியல சாமி. சத்தியராஜின் படங்களில் இந்த மாதிரி நையாண்டியை வசமாக பிடித்துக் கொண்டார். இன்னும் நையாண்டிகளை சத்தியராஜ் எஃபக்டிவாக போட்டுத்தாக்கினால் சத்தியமாக அவர் மகன் சிபி தலையெடுக்க முடியாது. கீழே கொடுக்கப்பட்ட படங்களை பார்த்து பார்த்து சிரித்தேன். ரசித்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். லக்க லக்க லக்க லக்க லக்க



லக்க லக்க லக்க லக்க லக்க

லக்க லக்க லக்க லக்க லக்க

லக்க லக்க லக்க லக்க லக்க

லக்க லக்க லக்க லக்க லக்க

லக்க லக்க லக்க லக்க லக்க



படங்கள் உபயம்: தினமனி

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இதெல்லாம் ஜூஜூபியப்பா, படத்தோட டைட்டிலை கவனிச்சு பாருங்க.. 'இங்கிலீஷ்காரன்' கீழே சின்னதா 'தமிழ் வாழ்க'

கொஞ்ச நாள் முன்னாடிதான் தமிழ் பாதுகாப்பு பேரவை கூட்டத்தில சத்யராஜ் தலையை பார்த்த ஞாபகம்!
 
யோவ் அலுவலகத்தில் ஒன்று வேலை செய்யுங்க அல்லது வேலை செய்கிற எங்களை நிம்மதியா இருக்க விடுங்க.சிரிச்சா ஆளாளுக்கு எட்டிப் பார்க்கிறாங்க
 
ராம்கி, இந்த 'தமிழ் வாழ்க' மேட்டரை அந்த படத்தோட சன் டிவி ட்ரெய்லர்ஸ்லேயே பார்த்தேன். எழுதும் போது ஞாபகம் வரலையப்பா. நல்ல வேளை ஞாபகப்படுத்துனீங்க.

ஈழநாதன், எனக்கு அதே நிலமை தான். நண்பர் எனக்கு இந்த படத்தை அனுப்ப இன்னும் அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

உண்மையில் சத்தியராஜ் இன்னும் நிறைய சிரத்தை எடுத்தால் நக்கல் நாயகனாக மிளிரலாம்.
 
சத்தியமுகி சூப்பர்
 
போட்டுதாக்குங்க அல்வா சிட்டி !
ஏற்கனவே நம்ம தலவரு ரசிகர்கள் promiseraj மேலே கோவமா இருக்காங்க.. இதுல இப்படி வேற சந்திரமுகி ய நக்கல் பன்னா என்ன நடக்குமோ !!

வீ எம்
 
ஹலோ வீ.எம்,

ரஜினி ரசிகர்கள் இதில் கோபப்பட என்ன இருக்கிறது? ரஜினி மாதிரி வேஷம் போடலையே. நம்ம சந்திரமுகி ஜோதிகா வேஷம் தானே... எல்லாரும் என் ஜாய் பண்ணட்டும்.
 
சத்யராஜ் அவர்கள் படத்தினைப் பார்த்து சிரித்தேன். தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள். இந்த தமிழ் வாழ்க என்ற கோஷத்தினை தமிழ்சினிமா வரை கொண்டு சென்று காசு பார்க்க அலைகிறார்கள். இதெல்லாம் தமிழ்குடிதாங்கிகளின் வேலையாகத்தான் இருக்கவேண்டும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மற்ற மொழிகளை பயில்வதில் தவறொன்றும் இல்லை.

இப்படித்தான் 1657ல் ஒருமுறை நேதாஜி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது... வேண்டாம் தனிப்பதிவாகவே இடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 
நன்றி டோண்டு அய்யா.

//தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள்//

அய்யகோ!!! ஏற்கனவே இது விவகாரமான ஸ்டேட்மெண்ட் ஆச்சே....
 
ஆணுக்கு பெண் வேஷம் போடுவதை ப.ம.க வரவேற்கும் அதே நேரத்தில் லேசாக இடுப்பு தெரிவதை ப.ம.க கண்டிக்கிறது... இனி இளைஞர்கள் சமுதாயம் சீர்திருந்தும் வகையில் பெண் கதாபாத்திரத்துக்கு ஆண்கள் மாறுவேஷம் போட்டு மட்டுமே (இடுப்பு தெரியாமல்) நடிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்படும். மேலும் தப்பி தவறி அந்த வேஷத்தை பார்த்தே யாராவது இளைஞர்கள் உணர்ச்சி வசப்படலாம் என்பதால் "இது ஆண், பெண் அல்ல" என்று கொட்டை எழுத்துக்களில் படம் முழுக்க திரையில் தோன்றும்படியும் சட்டம் இயற்றப்படும்...
 
Halwacity அவர்களே,

மேலே என் பெயரில் வந்த பின்னூட்டம் என்னுடையதல்ல. போலி டோண்டு மீண்டும் வந்து விட்டார். ப்ளாக்கர் எண்ணை சரி பாருங்கள். இப்பதிவு அனானி பின்னூட்டங்களை ஏற்காததால் இம்மாதிரி சரி பார்த்து கொள்ளலாம்.

ஆனால் அனானி கமெண்டுகள் ஏற்றுக்கொள்ளும் பதிவுகளில் அந்தப் போலி பேர்வழி என் பெயர் மற்றும் ப்ளக்கர் எண்ணுடன் பதிவு செய்கிறார். என் பெயரில் வரும் பின்னூட்டங்கள் என்னுடைய இதற்காகவே போட்டுள்ளப் பதிவிலும் வருகிறதா என்று பார்க்கவும். அங்கும் அது வந்தால் ப்ளாக்கர் எண்ணைப் பார்க்கவும். See my latest blog as well to this effect.

என்னுடைய பிரத்தியேகப் பதிவின் உரல் கீழே.

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

P.S.
Bloggers retaining the anoymous comments' enabling do so for the simple reason that many of their friends are not bloggers and this facility is meant for them. But as long as this Poli Dondu is there, no one is safe. Kindly do disable the anonymous comments in your respective blogs. Otherwise a great injustice is being done to targeted persons like me. Please remember that while today I am being targeted, tomorrow it may be anybody's turn.

By the way, opening a blogger account is a child's play.

Regards,
Dondu Raghavan
 
டோண்டு அய்யா,

என்ன நடக்கிறது இங்கே(ப்ளாக்கில்)?. பெரும் குழப்பமாக இருக்கிறது.
 
"இப்படித்தான் 1657ல் ஒருமுறை நேதாஜி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது... வேண்டாம் தனிப்பதிவாகவே இடுகிறேன்."
நேதாஜி 1657-ஆம் வருடத்தில்? அது இருக்கட்டும். அனானி பின்னூட்டங்களை செயலிழக்கச் செய்தாலே பாதித் தலைவலி தீர்ந்து விடும். இப்பதிவின் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் வரும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)
 
//அல்வாசிடி போன்ற நண்பர்களிடம் எவ்வளவு கேட்டு கொண்டாலும் அனானிப் பின்னூட்டங்களைச் செயலிழக்கச் செய்ய மாட்டேன் என்கிறார்கள். அப்படியே செயலிழக்கச் செய்த தளங்களிலும் ப்ளாக்கர் எண்ணைச் சரி பார்க்க மாட்டேன் என்கிறார்கள். என்னதான் செய்வது எனப் புரியவில்லை.//


டோண்டு சார், சனி,ஞாயிறு வலைப்பக்கம் அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. இப்போது தான் உங்கள் பின்னூட்டமும் இந்த பதிவையும் பார்த்தேன். என்னுடைய சிறிய சுயதேவைக்காக நான் இன்னும் அனானிமஸ் பின்னூட்டத்தை வைத்திருக்கிறேன். எத்தனையோ கெட்ட வார்த்தை வசவுகள் அதில் வந்து விழுந்தாலும் சிறிதுகாலத்திற்கு பிறகு தான் என்னால் அனானிமஸ் பின்னூட்டத்தை தூக்க முடியுமென நினைக்கிறேன்.

முதலில் உங்கள் பின்னூட்டத்தை என் பதிவில் பார்த்ததும், எலிக்குட்டியை பிளாக்கர் ஐடியில் வைத்து பார்த்த போது எண் சரியாக வந்ததால் உண்மையிலேயே நீங்கள் தான் பின்னூட்டம் விட்டுவிட்டீர்கள் என நினைத்தேன். மன்னிக்கவும். பிறகு என்னுடைய மின்னஞ்சலில் சரி பார்க்கும் போது முதலில் பின்னூட்டமிட்டதாக வந்த கோழையின் மின்னஞ்சலில் உங்கள் இ-மெயில் ஐடி இல்லை. நீங்கள் விட்ட பின்னூட்டத்தில் வந்த இ-மெயிலில் உங்கள் ஐடி இருந்தது. அதை வைத்து தான் நான் உறுதிப்படுத்தினேன்.

மிகவருத்தமாக இருக்கிறது. இந்த மாதிரி கேவலமான முறையில் அடுத்தவர் பெயரைக் கெடுக்க நினைப்பவர்கள் நாக்கை பிடிங்கி நாண்டுக் கொண்டு சாகலாம்.பிடிக்காதவராக இருந்தால் நேருக்கு நேர் மோத தைரியம் இல்லாத கோழைகள்.
 
This comment has been removed by a blog administrator.
 
நன்றி விஜய் அவர்களே. இப்போது நிலைமை சற்று பரவாயில்லை. என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயருடன் சேர்ந்தே வரும். என்ன, புகைப்படம் பின்னூட்டங்களை இடும் பக்கத்தில் மட்டும் வரும். மேலும் என் பின்னூட்டங்கள் என் தனிப்பட்டப் பதிவிலும் நகலிடப்படும்.

ஒரு வேளை போலி நபர் என் புகைபடத்தையும் ப்ளாக்கர் எண்ணையும் ஒட்டி நகலெடுத்தால் அவற்றை அவர் ஒரு புது ப்ளாக்கர் பெயரில்தான் போட முடியும். அப்போது எலிக்குட்டி அவ்ர் புது ப்ளாக்கர் எண்ணைக் காட்டிக் கொடுக்கும். இருப்பினும் அந்த மனம் பிறழ்ந்தவன் ஏதாவது செய்து வைப்பான் என்ற பயமும் இருக்கிறது. பார்க்கலாம், எல்லாம் கடவுள் விட்ட வழி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
போலியாக பல கம்மானாட்டிகள் ஒருவரின் ஐடியை திருடி பின்னூட்டம் இட்டு வருகிறார்கள்.

அதே போல் போலி டோண்டுவாக பல பேர் அவதாரம் எடுத்திருக்கிறார்கள் என்பது என் கணிப்பு. அதில் ஒரு போலி டோண்டுவாக இந்த பதிவில் ஒருவர் காலை 9:52-க்கு பின்னூட்டமிட்டு சென்றுள்ளார்.

சிங்கப்பூர் நேரப்படி 25 ஜீன் 2005-ல் காலை 9:52-க்கு என் பதிவில் வந்த ஐபியை பார்த்ததில் கீழ்கண்ட ஐபியை தான் சந்தேகப் பட வேண்டியிருக்கிறது. அந்த பின்னூட்டத்தை தூக்கிவிட்டேன். காலை 7:41-க்கு பிறகு, எனக்கு அப்புறம், 9:52-க்கு தான் மற்றொருவர் என் பதிவுக்குள் வந்துள்ளார்(என்னுடைய ஐபி கணக்கில் வராது என்பதால்). ஆனால் அவரின் ஐபி தோராயமாக என் கைவசம். உங்கள் நன்மைக்காக இதை வெளியிடுகிறேன். கொஞ்சம் எல்லோரும் ஐபியில் கண்ணாக இருந்தால் ரொம்ப ரொம்ப அக்கியூரட்டாக இல்லாவிட்டாலும் எங்கிருந்தென்று ஓரளவு ஊகிக்கலாம்.

அந்த ஐபி: 24.30.75.81
ஐபி கடைசியாக சென்றடையும் இடம்: Mount Laurel, NJ.
இண்டெர்நெட் சர்வீஸ் ப்ரொவிடர்: camcast cable communication

கீழே தொடர்பை க்ளிக்கி படம் பார்க்கவும்

சுட்டி இங்கே

கொஞ்சம் இந்த ஐபியின் மீது நீங்களும் கண் வையுங்களேன்.

இனி பின்னூட்டம் என்ற பெயரில் அசிங்கம் பண்ணி செல்லும் ஒவ்வொரு ஐபியும் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். கொஞ்ச நாள் குறைந்தது என் பதிவுக்கு மட்டுமாவது இணைய போலீஸாக இருக்கலாமென ஒரு ஆவல்.

மேல் கண்ட ஐபி ஒரு தோராயமான கணிப்பேயின்று 100% உத்திரவாதம் தரமுடியாது.
 
மலாக்காவிலிருந்து போலிடோன்டு என் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார் .

புகைப்படம் சேர்ப்பது நல்ல யோசனை என்று நினைக்கிறேன் ..
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->