<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

நடிகை நயந்தாராவின் அங்கங்கள் படும்பாடு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
குமுதம் என்பது ஒரு மூன்றாம் தர மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. சினிமா நடிகைகளை படம் எடுக்கும் போட்டோகிராபர்களையும், அதற்கு கமெண்ட் எழுதுபவர்களையும், சினிமா பத்திக்காக கான்சப்ட் சொல்லும் மரமண்டைகளையும் எவ்வளவு திறமையிருக்கிறது என்பதை சோதிப்பதை விட அவர்களுக்கு எவ்வளவு வக்கிர புத்தியிருக்கிறது என்பதை பரிசோதித்து தான் குமுதம் என்ற மஞ்சள் பத்திரிக்கை ஆட்களை வேலைக்கு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். இணையத்தில் பிராக்ஸி பிரச்சனையிருந்ததால் இவ்வளவு நாள் வரை குமுதம் படிக்க முடியாமல் இருந்தது. மேலும் என்னுடைய புதிய அறைவாசி 13/6/2005 என்று தேதியிட்ட குமுதத்தை போன ஞாயிற்றுக்கிழமை வாங்கி வந்தார்.

நெடுநாள் கழித்து குமுதத்தின் Hard copy பார்த்ததும் மகிழ்ச்சியில் திருப்பினால் நடிகை நயந்தாராவை வைத்து வக்கிரம் குமுதத்தின் சில பக்கங்களில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக பிராக்ஸியை சரி பண்ணி குமுதம் ஆன்லைனில் தேடினால் இதில் ஒன்று கூட ஆன்லைனில் வரவில்லை.ஆன்லைனில் ஓசியில் படிப்பதால் நிறைய சென்ஸார் பண்ணியிருக்கிறார்கள். பரவாயில்லை. குமுதம் hard copy படிக்காதவர்களுக்காவும், உங்கள் கருத்துக்காகவும் அந்த கொடுமைகளை குமுதத்திலிருந்து படம் பிடித்து இந்த பதிவில் இடுகிறேன் (குமுதம், இந்த கண்றாவிகளுக்கும் காப்பிரைட் எதாவது வாங்கி வச்சிருக்கீங்களா? என்ன?).

முதல் படம் 'பிப்ரவரி 14' என்ற விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நயந்தாரா கலந்துக் கொண்ட நிகழ்ச்சியைப் பற்றியது. அதில் ரேணுகா மேனன் என்ற புது நடிகையும், நயந்தாராவும் அமர்ந்திருக்கும் அந்த படத்தில் ரேணுகா மேனன் தற்செயலாக எதையோ பார்ப்பதை நயந்தாராவின் மார்பை பார்ப்பது போல ஃபோகஸ் செய்யப்பட்டு அந்த புகைப்படத்திற்கு "எவ்வளவு பெரிசு... நயந்தாராவோட வாட்சு" என்று ரேணுகா மேனன் நினைப்பதாக கமெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை எனக்கு தான் அந்த கமெண்ட்டை படிப்பதில் பிரச்சனையோ என்று நினைத்தால் என் நண்பரும் இதையே சுட்டிக் காட்டி சாடினார். வக்கிர புத்தி என் பார்வையிலா? இல்லை குமுதத்திலா? நீங்களே சொல்லுங்கள்.

அடுத்த பகுதி, எஸ்.ஜே.சூர்யாவும், நயந்தாராவும் நடிக்கும் "கள்வனின் காதலி" படத்தின் சூட்டிங் இடைவேளையில் சூர்யாவுடன் நடக்கும் ஒரு பேட்டி போல வந்துள்ளது.

இது வக்கிரத்தின் உச்சக்கட்டம். அந்த படத்தில் வக்கிர நடிகர் எஸ்.ஜே.சூர்யா நயந்தார கழுத்தில் போட்டிருக்கும் டாலரை கேட்கிறராம். இது கட்டுரை படிச்சி முடிச்ச பிறகு தான் அந்த கட்டுரையின் தலைப்பும் புரியும்,படமும் புரியும். அதற்கு தலைப்பு "புடிச்சிருக்குன்னா வச்சிக்குங்க".

ஏற்கனவே நயந்தாராவின் உதட்டை கடிக்கும் சிம்பு படம் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.அந்த செய்திகளுக்கு காஞ்சி பிலிம்ஸ் மற்றும் இட்லி பதிவை பாருங்கள்.

கொடுமை கொடுமை நடிகையாய் இருத்தல் கொடுமை. நடிகையின் அங்கங்கள் பொறம்போக்கு நிலமாக நினைக்கும் அவலம் என்று மறையுமோ?

விற்பனையை கூட்டுவதற்காக இந்த மாதிரி ஆபாச படங்களை வெளியிடும் பத்திரிக்கைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்கு காரணமானவர்களுக்கு ரோசாவசந்த் அறிவுறுத்தும் ட்ரீமெண்ட் தான் வலியுறுத்துவேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
yelei....nee kumdam la sidela vela paakurio...ippadi ellam eluthi engala kumudam boook vaanga vachuduva pola irukke....unakku naanga kumudam book padikurathu pudikalayaakkumm....
 
ஐயய்யோ அசிங்கமெண்டு சொல்லிக்கொண்டு நீங்கள் வேற அதே படங்களை ஏன் போட்டுத் தாக்கியிருக்கிறியள்??
 
படிக்கும் மக்களே இந்த மாதிரி படங்களை போட்டதற்கு மன்னிக்க வேண்டும். சுட்டி கொடுக்க நினைத்தேன். ஆன்லைனில் இது இல்லை. வெறும் வார்த்தையில் சொன்னால் நான் சொல்ல வந்தது புரியாது என்பதால் தவிர்க்க முடியாமல் இந்த படம் போடப்பட்டது. வெகுஜென பத்திரிக்கை வளர்க்கும் வக்கிரங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது. பதிவை படிப்பவர்கள் ஓரளவு புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இட்டேன்.

பெயரிலி, உங்க கேள்விக்கு பதிலும்.
 
சே... இந்த குமுதம் ரெம்ப மோசம். குமுதம் ஒளிக. ( ஆனா, படம் தெரிய மாட்டிங்குது. band width ஜாஸ்தி இருக்கிற சர்வராப் பாத்து படத்தை ஏத்துங்க. படத்தை பாத்துட்டு இன்னும் ஸ்டராங்கா கமண்ட்டு உடறேன் :-)
 
விஜய்,
கூல்டவுன். எல்லாம் மக்களின் ரச்னையை மாற்றும் முயற்சிதான், ( மக்கள் ரசனை இன்னும் மாறாமலா இருக்கிறது?.) :-).

நீங்க நயனதாராவுக்கு பரிதாபப்படுகிறீர்கள். ஆனால் அவர், சிம்பு-நயனதாரா முத்தக்காட்சி போல் நடிக்க தனியாக ஸ்பெஷல் ரேட் வாங்கிக்கொண்டு சந்தோஷமாய் நடிக்கிறாராம்.
 
இந்த வார விகடன் ஹாய் மதன்:

க.நா.இராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்.

நடிகைகள் சினிமாக்களில் அணியும் ஆடைகள் ரெடிமேடாக வாங்கப்படுமா... அல்லது வடிவமைத்து தையல்காரர் வைத்து ஸ்பெஷலாகத் தைத்துக்கொள்ளப்படுமா?



அநேகமாக தையல்காரர்தான் தைப்பார். சில சமயம், உடையை ஹீரோயின் அணிந்துகொண்ட பிறகும்கூட, தையல் வேலை தொடரும்! பல நடிகைகளின் அழகுப் பிரதேசங்களை ரசிக்கிறீர்களே... அதெல்லாமேகூடப் பொய்! ஒரு முறை, பாதி ஷ¨ட்டிங்கில் ஹீரோயினின் மார்புக் கச்சையில் தையல் விட்டுப்போக, காஸ்ட்யூம்காரர் வந்து ஊசியால் நேரடியாக அங்கே குத்திக்குத்தித் தையல் போட்டதாக ஒருவர் என்னிடம் சொன்னார். இது நடந்தபோது, ஹீரோயின் தான்பாட்டுக்கு ஹீரோ சொன்ன ஏதோ ஜோக்குக்குச் சிரித்துக் கொண்டு இருந்தாராம். அதாவது, ப்ளவுஸில் ஊசி இறங்கியதையே அவர் உணரவில்லை!

விஜய்... படங்களை Hello பயன்படுத்தி வலையேற்றினால் பிரச்சினை வராது :-)
 
//'பிப்ரவரி 14' என்ற விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்//

அது 'பரத்' படம்!
 
குமுதம் கு'முத்தம்' ஆகிப் பலகாலமாச்சேப்பா!!

இப்பத்தான் கண்டிக்கிட்டீங்களா?
 
பத்மா அர்விந்த் அவர்களின் இந்த பதிவில் எழுதிய பின்னூட்டம் இதற்கும் தொடர்புடையது போல எனக்குத் தோன்றியதால்...

****************
பத்மா, நல்ல பதிவு. முதலில் இந்த கருத்தை வெளிக் கொண்டுவந்ததற்கு வாழ்த்துக்கள்.

பிறந்த உடன் பசி போக்க தாயின் மார்பங்களை தேடுபவர்கள் வளர்ந்த பின் பார்வை மாறி சுகத்துக்காக பிறர் மார்புக்காக அலையும் அவல நிலை. உயிர் ஜனிப்புக்கு எதிர்பாலிடம் தோன்றும் கவர்ச்சிக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சில உறுப்புகள் இருக்கிறது என்ற அறிவியல் சொல்லலாம். இந்த பார்வை மாற்றத்துக்கு ஹார்மோன் என்று அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்டாலும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமே எதிர்பாலிடம் தோன்ற வேண்டிய அந்த இனகவர்ச்சியை வக்கிர புத்தியாக மாற்றி யாரை பார்த்தாலும் அதே வக்கிர புத்தியோடு பார்க்க வைப்பதில் மீடியாக்களும், புத்தகங்களும் தவறுவதில்லை.

என் அத்தை மார்பக புற்றுநோய் வந்து சிறிது சிறிதாக ரத்தம் வடிந்து, கட்டி பரவி,அழுகிய நாற்றத்தில் வாழ்ந்து இறந்துப் போனதை கண்கூடாக பார்த்து பாதிக்கப்பட்டவன். வக்கிர பார்வை தோன்றும் போது அந்த பாதிப்பு என்னை பயமுறுத்தி மீண்டும் மீண்டும் வக்கிரபார்வையிலிருந்து மீளச்செய்கிறது.

மீடியாக்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை வலியுறுத்த எழுதிய என் http://halwacity.blogspot.com/2005/06/blog-post_111816007671502502.html... இந்த பதிவு அறைகுறையாக எழுதி ஏறக்குறைய குமுதத்துக்கு விளம்பரம் மாதிரி ஆகிப்போனது.

***************************

தோல்வி.
 
பத்மா பதிவில் நாராயணன் சொல்லியது:

//விஜய்யின் பதிவில் நயன்தாரா பற்றி எழுதிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. குமுதம் வக்கிரபுத்தி படைத்தது என்பது உலகறிந்தது. இதனை படம்போட்டு காட்டி மேலும், கிளர்ச்சியுற வைத்தல் தேவையில்லாதது. //

நானும் முதலில் படம் போட ரொம்ப யோசித்தேன். கொஞ்சம் ஆழ யோசித்ததில் படங்கள் கொச்சையாகப் பட்டதால் படங்களை எடுத்துவிட்டேன். அப்புறம் குமுதம் படித்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் திடீரென புத்தகவடிவில் படித்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி தான். இனிமேல் அந்த புத்தகம் அடிக்கடி படிக்க, எனக்கும் அந்த அதிர்ச்சி சிறிது காலத்தில் அடங்கி விட்டு "குமுதம் தானே... அவன் இப்படிதாம்பா" என்றாகி விடுவேன். ;-))
 
இது குமுதத்துக்கேயுரிய குறும்பாச்சே... இயற்கை படத்தின் விமர்சனத்துக்குப் போட்ட இந்த படத்தை பாருங்க...

அது சரி, கடந்த சனிக்கிழமை StraitsTimesல் வந்திருந்த பரபரப்பான இந்த உள்ளூர் வலைப்பதிவு பார்த்தீர்களா மன்னிக்கவும் படித்தீர்களா?
(பி.கு: கவனம்...!)
 
நடிகைகள் மார்பு மேல குமுதத்துக்கு அப்படி என்ன ஈர்ப்போ? அதை வைத்தே குமுதம் பிஸினஸ் நடத்துகிறார்கள்.

நல்ல படங்கள் அனுப்பிச்சீங்க போங்க.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->