<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

மாணவர்களின் உதவி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களும், பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்தும் வந்துள்ள டாக்டர்கள் குழுவினரும் இரவு, பகலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சும்ர் 500 பேர் பலியாகிவிட்ட அந்த மாட்டத்தின் கடலோரப் பகுதிகளில் உடல்களை மீட்பது மற்றும் புதைக்கும் பணிகளில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

போலீசாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் பெருமளவில் இவர்கள் உதவி செய்து வருகின்றனர்.

காயமடைந்தவர்களுக்கு பெங்களூரைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் ஓடிச் சென்று உதவி செய்கின்றனர்.

மேலும் நேரு யுவ கேந்திரா, மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் சர்வதேச அமைப்பு, ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் மீட்புப் பணிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாணவர்களும் அமைப்பினரும் செய்யும் உதவியை நாங்கள் மறக்கவே முடியாது என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார் தமிழக அரசின் உள்ளாட்சித்துறைச் செயலாளர் கரியாலி. கடலூரில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் அவர் கூறுகையில், எங்களுக்கு மிகப் பெரிய அளவில் இந்த மாணவர்கள் கைகொடுத்து உதவி வருகின்றனர் என்றார்.

விழுப்புரம் மாணவர்களைக் கொண்டு கிராமங்களிவ் உடல்களை மீட்கும் பணிகளும் உளுந்தூர்பேட்டை அன்னை தெரசா கல்லூரி மாணவர்களைக் கொண்டு மருத்துவ உதவிப் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து என்.எஸ்.எஸ். அமைப்பு மாணவர்களும் இப் பகுதியில் குவிந்து உதவிகள் செய்து வருகின்றனர்.

Source: www.thatstamil.com

This is news. Thats what I want

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->