<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

ஸ்கோர் என்ன?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
எனக்கு தெரிந்த ஒருவரிடம் தொலைப்பேசியில் பேச நேரிட்டது. வேறு வழியில்லாமல் எங்கள் உரையாடல் சுனாமியைச் சுற்றி தான் வந்தது. எப்படி நிகழ்ந்தது என்பதில் ஆரம்பித்து பல நிலைகளில் எங்கள் உரையாடல் தொடர, அவரின் சில லூஸ் டாக் அருவருக்க வைத்தது.

"சே நிறைய பேர் செத்துப் போயிட்டாங்களப்பா" என்று சாதரணமாய் ஆரம்பித்தவர். "இலங்கையில தான் 10000 க்கு மேல போயிட்டாங்க. சே! நம்ம ஊரில ரொம்ப கம்மியா இருக்கப்பா. சி.என்.என் -ல நம்ம ஊரை கம்மிக்கும் போது ரொம்ப கம்மியா கணக்கு காமிக்கறான்ல. இருந்தாலும் சன் டிவிக்கு தான் முதல்ல நியூஸ் தெரிய வரும். ஏன்ன, அவன் உள்ளூர் காரன். பி.பி.சி-ல கொஞ்சம் பார்த்துச் சொல்லேன் எவ்வளவு காமிக்கிறான்னு" - குரூரமாக அவர்

நான் நினைத்தேன் "அடப்பாவி! இது என்னடா கிரிக்கெட் மேட்சா நடக்குது. ஸ்கோர் சொல்ல. மனுசங்களோட உயிர் அல்லவா?"

தொடர்ந்து அவர் "அங்கே பாரு அங்கே பாரு தண்ணி எப்படி அவங்களை அடிச்சிட்டு போறதுன்னு" என்று ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தார்.

அவருக்கு சில புத்திமதி சொல்லிவிட்டு போனை ஓங்கி அறைந்தேன்.

இந்த சம்பவம் நடந்து முடிந்தவுடன் உதவிக்கு செல்லாமல் கடலலை மீண்டும் எழும்பி வராதா என்று இரவும் பகலும் காத்திருந்துப் பார்த்த மக்கள் எத்தனைப் பேர். இவர்களை என்ன சொல்ல,
கிரிக்கெட் பார்த்து கெட்டுப் போன நம் மூளை இப்படி தான் இருக்கும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

இறந்தவர்களின் எண்ணிக்கை நேரம் ஆக ஆக உயர்ந்துக் கொண்டே செல்ல தொலைக்காட்சியின் டெத் ஸ்கோரைப் பார்த்ததும் மனதை ஏதோ உறுத்த, உடனே தொலைகாட்சி நிறுத்தப்பட்டது.

எண்ணிக்கை தெரிந்து என்ன செய்ய? இறந்தவர்கள் ஜீவித்து எழப்போவதில்லை. நம்மால் முடிந்ததை கட்டாயம் செய்ய வேண்டும். ஒரு நிமிட பிரார்த்தனை இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய... அது கூட நீங்கள் செய்யும் மகத்தான காரியமாக இருக்கும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->