<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

பாடல்களும் பாடல்கள் வரியும்-2 (ராஜபார்வை)

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இளையராஜவின் ஞானி உள்ளத்தில் மலர்ந்த இன்னொரு பூ 'ராஜபார்வை'. பாடலும் பாடல் வரிகளும் கொடுத்திருக்கிறேன். அந்த படத்தைப் பற்றி எழுத வேண்டுமென்ற ஆசையிருக்கிறது. ஆனால் அந்த படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் முழுவது ஞாபகமில்லை. 'அந்திமழை' பாடல் மாதவிக்காக கண் தெரியாத கமல்ஹாசன் டூயட் பாடுவது போல வரும். 'அழகில் அழகு' பாடல் வீட்டிற்கு வரும் மாதவியை காதல் மிகக் கொண்டு ஓவ்வொரு அங்கமாக கமல் தடவி வர்ணித்துப் பாடுவது போல வரும். மயக்கும் அந்த இரு பாடல்களையும் கேளுங்கள். இந்த பாடல்களை எழுதியவரும் கவிஞர் வைரமுத்து தான் என நினைக்கிறேன்.








பாடியவர்கள் : எஸ்.பி.பி & ஜானகி

ஆண்:

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

பெண்

தேனில் வண்டு முழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்

ஆண்

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளைமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

ஆண் : அந்திமழை பொழிகிறது
பெண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்கின்றது

பெண்:
நெஞ்சுக்கொரு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

பெண் : அந்திமழை பொழிகிறது
ஆண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெண் ; சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

----------------------------------------------

பாடியவர் : ஜேசுதாஸ்

(ஹம்மிங்)
அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு தேவதை

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்
அழகில் அழகு தேவதை

சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகில் அழகு தேவதை

பூ உலவும் கொடிகள் போல இடையை காண்கிறேன்
போக போக வாளைப் போல அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் உன் போல் பெண்ணில்லையே

அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அல்வாசிட்டி அண்ணாச்சியாரே.. நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு பதிவா?! ரொம்ப அநியாயம் சார் இது!

ரோம் நகரம் தீப்பிடிச்சு எறிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, அங்கே ஒரு பின்னூட்டத்திலே தமிழ் வளர்க்க பொராடிட்டிருக்காங்க.. நீங்க என்னடான்னா இருக்குற சுவடே தெரியாம இப்படி ஒரு பதிவு போடுறீங்க!
 
எங்கள் தலை, கொங்கு ராசா இந்த 'அழகில் அழகு தேவதை' பாட்டை ஏற்கெனவே ஓர் இரவில் கேட்டு, இங்கே அதைப் போட்டு, அதற்கு அல்வா சிட்டியாரே, நீரும் முதலாவதாக comment கொடுத்தீர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் !!

நான் சொல்ல வருவது இதுதான்:
எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம், ராசாவின் கலை அனுபவத்திற்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ராசா ராசாதான். :-)

- ஞானபீடம்
 
எப்ப ஊருக்குப் போறீங்க விஜய்?

ச்சும்மாத்தான் கேக்கறேன்.

என்றும் அன்புடன்,
அக்கா
 
விஜய்,
இளையராஜா மேல கமல்ஹாசன் கொண்டிருக்கிற ஆழமான பற்றுக்கு காரணம் இந்த மாதிரி பாடல்களை கேட்டா புரியுது!
 
அல்வா சிட்டி விஜய்,

அழகே அழகு பாடலை எழுதியவர் கண்ணதாசன்.( அங்கங்களை வர்ணிக்கும் பாடல்).

ஒரு அங்கம் கைகள் அறியாதது என்ற பாடல் வரிகளும், அதற்கு கமல்ஹாசனும், மாதவியும் தரும் முகபாவங்களும் மிகவும் பிரமாதம். சற்று பிசகினாலும் ஆபாசம் என பிறர் குரல் கொடுக்கும் ஆபத்திருக்கும் சங்கதியை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளார்கள்
 
மாயவரத்தாரே,

//அண்ணாச்சியாரே.. நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு பதிவா?! //

இதென்ன புதுசா ஒரு கேள்வி. என்னுடைய பதிவு வாரநாட்களில் பெரும்பான்மையாக இரவு 11:30 தாண்டி தான் இருக்கும்.தூக்கம் விற்று எழுதுவதால்...

//ரோம் நகரம் தீப்பிடிச்சு எறிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, அங்கே ஒரு பின்னூட்டத்திலே தமிழ் வளர்க்க பொராடிட்டிருக்காங்க//

யோவ் போங்கைய்யா உருப்படியா எதாச்சி வேலையிருந்த பாருங்கைய்யா.

மத்தப்படி மொட்டையின் இந்த பாட்டைப் பற்றி ஒன்னுமே சொல்லாம போன எப்படி?
 
ஞானபீடம்

//எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம், ராசாவின் கலை அனுபவத்திற்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். //

பொள்ளாச்சிகாரருக்கு மறுப்பு சொல்ல முடியுமா? ராசா ராசா தான்!!

அதெல்லாம் சரி ஆடியோல பாட்டு கேக்கலியா? பாட்டு எப்படி?
 
துளசியக்கா,

//எப்ப ஊருக்குப் போறீங்க விஜய்?//

கூடிய விரைவில் எதிர்பாருங்கள்

நியூசிக்கு வந்த கவனிப்பீங்கள்ள?
 
//என்னல மக்கா ஒரே பாட்டா போட்டு தாக்குர? சரி வேற ஏதும் நல்ல இனிமையான பாடல் வேணும்னா சொல்லு ;-) ??? //

மக்கா ஆடியோ சிடியை பூரா தாப்பு.
 
//இளையராஜா மேல கமல்ஹாசன் கொண்டிருக்கிற ஆழமான பற்றுக்கு காரணம் இந்த மாதிரி பாடல்களை கேட்டா புரியுது! //

ஜோ, இளையராஜா மீது கமலுக்கு மட்டுமா பற்று?
 
ராஜ்குமார்,

உங்க பின்னூட்டம் பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.

//அழகே அழகு பாடலை எழுதியவர் கண்ணதாசன்.( அங்கங்களை வர்ணிக்கும் பாடல்).//

நன்றி. ஆனால் அந்திமழை பாடல் வைரமுத்து தானோ?

//ஒரு அங்கம் கைகள் அறியாதது என்ற பாடல் வரிகளும், அதற்கு கமல்ஹாசனும், மாதவியும் தரும் முகபாவங்களும் மிகவும் பிரமாதம். சற்று பிசகினாலும் ஆபாசம் என பிறர் குரல் கொடுக்கும் ஆபத்திருக்கும் சங்கதியை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளார்கள் //

அந்த வரிகளை டிரான்ஸ்கிரிப்ட் பண்ணும் போது ஒரு நிமிடம் நீங்கள் சொன்னது என் மனதிற்குள் வந்து போனது. படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் காட்சி அதிகம் ஞாபகமில்லை. நல்ல தகவல். நன்றி.
 
இது என்ன சூப்பர் ஹிட்? இதை விட சூப்பர் ஹிட்டான மேட்டரெல்லாம் பார்க்க வேண்டுமா? மக்களே.. நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய ஒரே இடம்.. மாயவரத்தான் வலைப்பூ..!

இப்போது பரபரப்பான பார்வையில்..!!

நம்பர் 1 கொண்டாட்டம்.

மாயவரத்தான் வலைப்பூ... எப்பவுமே நம்பர் 1.
 
//இது என்ன சூப்பர் ஹிட்? இதை விட சூப்பர் ஹிட்டான மேட்டரெல்லாம் பார்க்க வேண்டுமா? மக்களே.. நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய ஒரே இடம்.. மாயவரத்தான் வலைப்பூ..! //

எத்தனை பேர் சார் கிளம்பியிருக்கீங்க இதுமாதிரி. வரவர வலைப்பதிவுகள் எல்லாம் குங்குமம் பத்திரிக்கை மாதிரி ஆகிபோச்சி. நம்பர் 1-ன்னு ஆளாளுக்கு சொல்ல ஆரம்பிச்சாட்டாங்கையா. விட்டா பனகல் பார்க்ல பேனர் தான் வைக்கனும் போல ஆளுங்களை சேர்க்க.
 
//போக போக **வாளைப்** போல அழகைக் காண்கிறேன்//

அய்யா சாமி அது **வாழை**. வாளைப் போல இருந்தா குத்தும்யா..:-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->