tag:blogger.com,1999:blog-9439067.post-1118332060758913202005-06-09T23:47:00.000+08:002005-06-10T00:32:10.736+08:00முய்முய் புத்தக பிடிச்சி விளையாட்டுஇவன் எழுதுவதிலிருந்து தெரிகிறது. இவனெல்லாம் என்ன வாசித்து இருக்கப் போறான் என்று எல்லாரும் நேர்மையாக என்னைத் தவிர்த்து விட பாவம் <a href="http://balaji_ammu.blogspot.com/">என்றென்றும் அன்புடன் பாலா </a>என்னை தப்பாக கணித்து இந்த விளையாட்டுக்கு அறை(ர)க்கூவலில் என்னை அழைத்து விட்டார். ரொம்ப தேங்ஸ்பா. விளையாட்டு என்றாலே கதா தூரம் ஓடும் என்னையும் "அட! இந்த மேட்டர் ஒரு பதிவுக்கு ஆச்சி" என்று இழுக்க, நீங்கள் அவஸ்தையில் நெளிய என் ஊத்தை எண்ணத்தால் என் வாசிப்பின் பயோகிராஃபியை எழுதப் போகிறேன்.<br /><br />இந்த பதிவுக்கு சம்பந்தமாக ஏற்கனவே <a href="http://halwacity.blogspot.com/2005/03/blog-post_17.html">'என் அப்பாவின் ட்ரெங்க் பெட்டியில்' </a>சொல்லியிருக்கிறேன்.<br /><br /><strong><span style="color:#3333ff;"><u>என் வாசிப்பின் வசந்தகாலம்</u></span></strong><br /><br />என் வாசிப்பின் வசந்தகாலம் சிறுவயது பருவம் தான். அப்போது நான் படக்கதைகளுக்கு அடிமையாயிருந்தேன். நண்பன் ராம்குமாரின் வீட்டில் ஓசிப்பேப்பர் படிக்க ஆரம்பித்திருந்த நேரம். சிந்துபாத்தின் கன்னித்தீவில் ஆரம்பித்த படக்கதை புயல் தினமலர் 'சிறுவர் மலரில்' மையம் கொண்டு முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ்களை போட்டுத் தாக்கிவிட்டு பதின்ம வயது ஆரம்பத்தில் கரையைக் கடந்து மறைந்தே விட்டது. படக்கதைகளின் வழியாக எனக்கு ஆதர்ஷ புருஷர்களாகத் திகழ்ந்தவர்கள் சிந்துபாத், இரும்புக் கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் 007, ஸ்பைடர் மேன், சுட்டிக் குரங்கு கப்பீஸ், பலமுக மன்னன் ஜோ, மந்திரவாதி மாண்ட்ரேக், துப்பறியும் சாம்பு (தினமணி கதிரில் வந்தது. சாம்பு என்பது ரொம்ப ரொம்ப இண்டெலிஜண்ட் ஆன ஒரு நாயின் பெயர்). நேரம் காலம் தெரியாமல் காமிக்ஸ் படக்கதையை படிக்க நண்பன் வீட்டுக்குச் சென்று வெகு நேரம் கழித்து திரும்பி வர என் அம்மா கன்னத்தை பிடித்து இழுத்து இழுத்து வழக்கமாக முதுகில் இரண்டு தோசை விடுவார்.<br /><br /><span style="color:#3333ff;"><strong><u>என் வாசிப்பின் இலையுதிர் காலம்</u></strong></span><br /><br />படக்கதைகள் என்னை விட்டு நழுவ நழுவ எழுத்துக் கதைகளை எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்தது தினதந்தியில் வந்த கதைகளைத் தான். பாதி அர்த்தம் புரிந்து புரியாமலும் எதைப் பற்றி சொல்கிறார்கள் என்பதை அறிந்தும் அறியாமலும் தட்டுத் தடுமாறி படித்த கதைகள் ஏராளம். அதில் தினத்தந்தியில் 'பி.டி.சாமி'யின் பேய்க்கதைகள் தொடராக வந்துக் கொண்டிருந்த காலத்தில் திகிலோடு திக் திக் மனசோடு படிச்ச காலமும் உண்டு. சடாரென்று கதையில் யாரோ கதாநாயகியின் மார்பை அறுத்துக் கொண்டு சென்று விட தொலைந்த மார்பைத் தேடி கதாநாயகன் புறப்பட நானும் என் நண்பர்களும் கதாநாயகனோடு எங்கள் தேடலைத் தொடர்வோம்.<br /><br />அடுத்து உருப்பட கைக்கொடுத்தது பாளையங்கோட்டையில் சேவியர்ஸ் பள்ளிக்கு அருகில் உள்ள மாவட்ட மைய நூலகம். அரும்பாடு பட்டு மெம்பர்ஷிப் வாங்கி உளவியல் முதல் அனடாமி வரை வசிக்கக் கற்றுக் கொடுத்தது அந்த நூலகம் தான். ஏன் எப்படி எதற்கு மாதிரியான அறிவியல் புத்தகங்கள் ஆனாலும் சரி கஜினி முகமதுவை அறிய வேண்டுமானாலும் சரி, புரியாமல் சுஜாதாவை என்னை படிக்க வைத்ததும் சரி அந்த நூலகத்துக்கே முக்கிய பங்கு. உருப்படியாக முதல் பக்கத்திலிருந்து கடைசிபக்கம் வரை படித்து முடித்து தமிழ்வாணனின் கதைகள் தான். அக்காலக்கட்டத்தில் எனக்கு தெரிந்த ஒரே பிரசுரம் 'மணிமேகலை பிரசுரம்' தான். கருப்புக் கண்ணாடியும், கருப்பு கௌபாய் தொப்பியும் இருந்தாலே தமிழ்வாணன் அங்கிருப்பார் எனத் தெரியும். அவர் துப்பறியும் பாங்கு, கதாபாத்திரங்களுக்கு அவர் பயன்படுத்தும் தமிழ்பெயர்கள் முதற்கொண்டு என்னை அந்த காலத்தில் கிறுக்கு பிடித்து அலையவைத்தது தமிழ்வாணன் கதைகள் தான்.<br /><br />தமிழ்வாணன் முடிய மெதுவாக ராஜேஷ் குமார் பக்கம் ஒதுங்கினேன்.ராஜேஷ் குமாரின் வெறிப்பிடித்த வாசகனாகி விட அவர் க்ரைம் கதைகளை தேடி தேடி படித்த காலமும் உண்டு. பதின்ம வயதின் சூடு ஏற ஏற பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகள் கிறங்கடித்தன. பரத்தும், சுசீலா போட்டு வரும் இரட்டை அர்த்த பனியனும், PKP-யின் பெண் வர்ணிப்பும் சூட்டை கிளப்பி விட்ட காலங்களும் உண்டு. இவற்றிலெல்லாம் கவனம் திரும்ப விடக்கூடாதென புரியாமல் படித்தது விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ஓசோ, ஜேகே. அத்துடன் பி.சி.கணேசன், மெர்வின் மாதிரியான டப்பா ஆசிரியர்களின் புத்தகங்களான 'தியானம் செய்வது எப்படி?', 'மெஸ்மெரிசத்தை கற்றுக் கொள்ளுங்கள்' போன்றவற்றை படித்து விட்டு பூட்டிய அறைக்குள் சாதகம் பண்ணி கண் அவிந்து கஷ்டப்பட்ட காலங்களும் உண்டு.<br /><br /><strong><span style="color:#3333ff;"><u>என் வாசிப்பின் கோடைக்காலம்</u></span></strong><br /><br />கல்லூரிக்குள் நுழைந்ததும் கவனம் எல்லாம் சினிமாவில் திரும்பியதால் மருந்துக்கு கூட புத்தகங்களை தொடவில்லை (படப்புத்தகங்களையும் சேர்த்து). கற்றுக் கொண்ட பாடங்களும் ரொம்ப கம்மி. அங்கு கற்றது உல்லாசம் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் மட்டுமே. வேலைத்தேடி சென்னைக்கு வந்தப்போது புதிய சூழலைக் கற்றுக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. வேலைதேடி தோல்விகளை மட்டுமே தழுவிய சமயத்தில் திடீரென ஆங்கிலத்தின் மேல் காதல் வந்து விட "பணக்காரர் ஆவது எப்படி?", "எதை வேண்டுமானாலும் அடைவது எப்படி?" போன்ற காப்மேயர் புத்தகங்கள் தான் தெய்வம். வார இதழ், நாளிதழ் என்பது அறவே அற்றுப் போனது.<br /><br />வேலையும் கிடைத்து விட துறை சார்ந்த புத்தகங்களை மட்டுமே வெறி கொண்டு வாங்கி அடுக்கி வைத்தேன். அத்துடன் கண்ணில் பார்த்த தமிழ் புத்தகங்களை எல்லாம் வாங்கி அடுக்கினேன். ஆனால் இது வரை அதில் 10% கூட படித்து முடிக்கவில்லை. ஏறக்குறைய 8 வருடங்களுக்கு மேல் என் வாசிப்பு கோடைகாலமாக வறண்டே இருந்தது. இப்போது நினைத்தாலும் வீணாக்கிய அந்த காலங்களை நினைத்து துக்கம் தாளவில்லை. இழந்ததை எட்டிபிடிக்க முயலுவது மூடத்தனம் என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.<br /><br /><strong><span style="color:#3333ff;"><u>என் வாசிப்பின் குளிர்காலம்</u></span></strong><br /><br />வேலை அமெரிக்காவுக்கு ட்ரான்ஸ்வராகி விட தனிமையை கொல்ல மெல்ல மெல்ல புத்தகத்தை கைப்பிடிக்க ஆரம்பித்தேன். ஆனால் இணையம் என்னை சுருட்டிக் கொண்டது.'இணையத்தில் தமிழ்' என்று வெறிக்கொண்ட மட்டும் இணையத்தில் என்னை தாறுமாறாக படிக்க வைத்தது. அப்படியே அமெரிக்கவில் கிடைக்கும் நூல்களையும் படிக்கலாமென நினைத்திருந்தேன்.<br /><br />முதல் நாள் இரவு நியூயார்க் WTC-ஐ ஒட்டியிருந்த Border புத்தகக் கடையில் 'அமெரிக்காவின் சரித்திரம்' என்ற ஆங்கில புத்தகத்தை வாங்கி WTC-க்கு கீழேயே உட்கார்ந்து இருட்டும் வரை படித்து விட்டு அங்கு நடந்த ஜாஸ் மேடை நிகழ்ச்சியை பார்த்து விட்டு வர, மறுநாள் WTC மண்ணோடு மண்ணாகி விட அதிர்ச்சியில் உறைந்தேன். இதனால் நியூயார்க்கில் வேலைக்கு போகமுடியாமல் 15 நாட்களும் வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்கள் மறந்தே போய் விட்ட வாசிப்பை தூசி தட்ட வைத்தது.<br /><br /><strong><span style="color:#3333ff;"><u>மீண்டும் என் வாசிப்பின் வசந்தகாலம்</u></span></strong><br /><br />திருமணத்திற்கு பிறகு புதிய பரிமாணத்தில் வாசிக்க கற்றுக் கொண்டேன். அதாங்க அவங்க படிச்சி படிச்சி எனக்கு கதை சொல்லுவாங்க, கருத்துச் சொல்லுவாங்க. ஆனால் நான் புத்தகத்தை தொட்டு நானே வாசிக்க மாட்டேன். என்னுடைய வாய்ஸ் ரீடராக இருந்து வாசிப்பின் புதிய பரிமாணத்தை காட்ட மீண்டும் வாசிப்பு பழக்கம் துளிர் விட ஆரம்பித்தது. என் மனைவி தி.ஜானகிராமனின் மோகமுள்ளை வாசித்து சொல்லிக் கொண்டிருக்க பாதியிலேயே ஊருக்கு போய் விட புத்தகத்தை நானே வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.<br /><br />அத்துடன் தமிழ்மணமும் சேர்ந்துக் கொள்ள இவ்வளவு மேட்டர் இருக்குதா என்ற ஆச்சரியத்துடன் நிறைய படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாசிப்பு பழத்தை தின்று கொட்டை போட்டும் இன்னமும் தின்று கொண்டிருக்கும் ஜெயந்தி சங்கர், ஈழநாதன் முதலானோர் உள்ள சிங்கப்பூர் இணைய நண்பர்கள் குழு அறிமுகம் கிடைத்ததும் நிறைய படிக்கும் உத்வேகத்தை கொடுத்தது. சிங்கப்பூர் நூலகம் வஞ்சகமில்லாமல் தமிழ் புத்தகங்களையும், உலகப்படங்களையும் அள்ளி விட படிப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. தமிழ்மண புலிகளை பார்த்து இந்த பூனையும் சூடு போட்டுக் கொண்டது.<br /><br />சரி இப்போ வழக்காமான முய்முய் விளையாட்டின் பாரம்பரிய முறைக்கு வருகிறேன்.<br /><br />என்னிடம் இருக்கும் புத்தகங்கள் - இந்தியாவில் ஏறக்குறைய 300 புத்தகங்கள் (மனைவி சீதனமாக அள்ளி வந்த அவருடைய புத்தகங்களையும் சேர்த்து) , சிங்கப்பூரில் 30 புத்தகங்கள்<br /><br /><span style="color:#ff0000;">அண்மையில் படித்த தமிழ் புத்தகங்கள்:</span><br /><br />1. எஸ்.ராவின் துணையெழுத்து<br />2. எஸ்.ராவின் உலக சினிமா<br />3 பாஸ்கர் சக்தியின் 'பழுப்பு நிறப்புகைப்படம்'<br />4. ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு (இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்)<br />5. புதுமைப்பித்தனின் சிறுகதைகள்<br />6. கல்கியின் சிறுகதைகள்<br />7. மேக்ஸீம் கார்க்கியின் தாய்<br />8. பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்<br />9. ஜனகனமன - மாலன்<br />10. சொல்லாத சொல் - மாலன்<br /><br /><span style="color:#ff0000;">படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்</span><br /><br />1. கடவு - திலீப் குமார்<br />2. எஸ்.ராவின் தாவரங்களின் உரையாடல்<br /><br /><span style="color:#ff0000;">அண்மையில் படித்த ஆங்கில புத்தகங்கள் (மொத்தமாக சொல்லவேண்டுமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரஷ்ய இலக்கியங்கள்)</span><br /><br />1. Short stories - Leo Tolstoy<br />2. Anton chekov short stories<br />3. The Double - Fydor dostoyevsky (படித்துக் கொண்டிருக்கிறேன்)<br />4. Little prince - Antonie de saint exupery<br />5. R.K.Narayanan - Malgudi Days<br />6. Aeosop's Fables<br /><br /><span style="color:#ff0000;">பட்டியலில் படிக்க காத்திருக்கும் புத்தகங்கள்:<br /></span><br />1. Anna karenina & war and peace- Leo Tolstoy<br />2. Crime and Punishment, The idiot, The possessed - Fydor dostoyevsky<br />3. Selected short stories - Maxim Gorky<br />4. One hundred year of solitude - Marquez<br />5. எஸ்.ராவின் உபபாண்டவம்<br />6. புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்<br />7. தேடி - நா. கோவிந்தசாமி<br /><br />சிங்கப்பூரில் புத்தகங்களை தாராளமாக அள்ளி வழங்கி இன்னொரு நூலகமாக நடமாடிக் கொண்டிருக்கும் <a href="http://kuppai.blogspot.com/">சிங்கப்பூர் அன்புக்கு </a>இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.<br /><br />இந்த விளையாட்டு தொடர்ச்சியாக எனக்கு தெரிஞ்ச அல்வாசிட்டிக்காரங்களையே கூப்பிடுகிறேன்.<br /><br />1. அல்வாசிட்டி.சங்கர்<br />2. அல்வாசிட்டி.சம்மி<br />3. நவன் பகவதி<br />4. ரோசா வசந்த்<br />5. கே.ஜே.ரமேஷ்<br /><br />சரிங்க, நிறைய எழுது எனக்கே அறுக்குது. அப்புறம் பார்க்கலாம்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111833206075891320?l=halwacity.blogspot.com'/></div>Vijayakumarhttp://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.com23